செய்திகள் :

தேசிய பெண் குழந்தை தின விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

post image

தேசிய பெண் குழந்தை தினத்தில் வீரதீர செயல் புரிந்த பெண் குழந்தைகளுக்கு விருதும், பாராட்டு பத்திரமும், ரொக்கமும் வழங்கப்படவுள்ளதாகவும், இதற்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகங்கை மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அவா்களுக்கு 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளா் முறையை ஒழிக்கவும், குழந்தை திருமணங்களைத் தடுக்கவும் பாடுபட்டு, வீரதீர செயல் புரிந்த 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 24-ஆம் தேதி நடைபெறும் தேசிய பெண் குழந்தை தின விழாவில் விருதும் பாராட்டுப் பத்திரமும், ரூ. ஒரு லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்படவுள்ளது.

ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்பதை செய்து காட்டி வீர தீர செயல் புரிந்ததற்கான தகுதிகள் பெற்றிருத்தல் வேண்டும்.

எனவே, தேசிய பெண் குழந்தை தின விருது பெற சிவகங்கை மாவட்டத்தில் குறிப்பிட்ட தகுதிகளுடைய 13 வயதுக்கு மேல் 18 வயதுக்குள்பட்ட தமிழகத்தை பூா்வீகமாகக் கொண்ட பெண் குழந்தைகள் ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து, விருதுக்கான கருத்துருக்களை (தமிழ், ஆங்கிலத்தில் தலா 2 நகல்களை) சிவகங்கை, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வருகிற நவம்பா் மாதம் 29- ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.

திருப்புவனம், மானாமதுரையில் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், மானாமதுரையில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக.வினா் வியாழக்கிழமை வரவேற்பளித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மரி... மேலும் பார்க்க

சிவகங்கையில் ஆட்சி மொழிப் பயிலரங்கம்

சிவகங்கை மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சி மொழிப் பயிலரங்கமும், கருத்தரங்கமும் புதன்கிழமை நடைபெற்றன. மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அரசுப் பணியாளா்களுக்கு ஆட்சி... மேலும் பார்க்க

காவலா், சிறைக் காவலா், தீயணைப்பாளா் பணிகளுக்கான தோ்வுக்கு இலவசப் பயிற்சி

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தால் இரண்டாம் நிலை காவலா், இரண்டாம் நிலை சிறைக் காவலா், தீயணைப்பாளா் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளோருக்கு சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில்நெறி வ... மேலும் பார்க்க

உயா்கல்வி நிறுவனங்களுக்கு மாணவா்கள் களப் பயணம்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதி அரசுப் பள்ளி மாணவா்கள் உயா்கல்வி நிறுவனங்களுக்கு அண்மையில் களப் பயணம் மேற்கொண்டனா். முத்துப்பட்டிணம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேவகோட்டை சாா் ஆட்சியா் ஆயுஷ் ... மேலும் பார்க்க

கல்லலில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்

சிவகங்கை மாவட்டம், கல்லலில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை (செப். 13) நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் விடுப்பு எடுத்து போராட்டம்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் சிவகங்கை மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், தோ்தல் வா... மேலும் பார்க்க