செய்திகள் :

தேனிலவு கொலையில் திடீர் திருப்பம்! கொலை செய்துவிட்டு ரகசிய திருமணம்?

post image

தேனிலவுஅழைத்துச் சென்று கணவரைக் கொலை செய்த வழக்கில் கைதான சோனம், ரகசியமாக ராஜ் குஷ்வாஹாவை திருமணம் செய்திருக்கலாம் என்று ராஜா ரகுவன்ஷியின் அண்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

ராஜா ரகுவன்ஷியை கொலை செய்துவிட்டு, தலைமறைவாக இருந்தபோது, சோனம் - ராஜ் குஷ்வாஹாவின் ரகசிய திருமணம் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இது குறித்து ராஜா ரகுவன்ஷியின் அண்ணன் விபின் கூறுகையில், மேகாலயா காவல்துறையினர், சோனத்தைக் கைது செய்தபோது, அவரிடமிருந்து இரண்டு தாலிச் செயின்களை பறிமுதல் செய்த தகவல் தற்போதுதான் எங்களுக்குத் தெரிய வந்தது. அதில் ஒன்று, எங்களது சகோதரனுக்கு திருமணம் நடந்தபோது, அளித்தது. மற்றொன்று, கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்தபோது, சோனம், குஷ்வாஹாவை திருமணம் செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று கூறியிருக்கிறார்.

திருமணத்துக்கு முன்பு ஏற்பட்ட காதல் காரணமாக, கணவரைக் கொலை செய்ய திட்டமிட்ட சோனம், மேகாலயத்துக்கு கணவரை தேனிலவு அழைத்துச் சென்று கொலை செய்தார். இந்த வழக்கில் சோனம், ராஜ் குஷ்வாஹா உள்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராஜா ரகுவன்ஷி கொலைக்கு பின்னணியில் மூளையாக இருந்தது ராஜ் குஷ்வாஹா என்றும், இந்த கொலைத் திட்டம் இந்தூரில் திட்டமிடப்பட்டு, மேகாலயத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றும் கொலை செய்து, உடலை வீச சோனம் உதவி செய்ததாக கூலிப்படையினர் வாக்குமூலம் அளித்த தகவலும் வெளியாகியிருக்கிறது.

ராஜா ரகுவன்ஷி - சோனம் திருமணத்துக்கு முன்பே அதோவது பிப்ரவரி மாதமே கொலைத் திட்டம் உருவாக்கப்பட்டுவிட்டதாகவும், ஏற்கனவே போட்ட மூன்று திட்டங்கள் கொலையில் முடியாமல், நான்காவது திட்டம்தான் நிறைவேறியதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

அதாவது சோனம் திருமணம் மே மாதம் நடைபெற்ற நிலையில், கொலைத் திட்டம் பிப்ரவரி மாதமே தீட்டப்பட்டிருந்ததும், ஒன்று, ஆற்றில் சோனம் அடித்துச் செல்லப்பட்டதாக நாடகமாடுவது அல்லது, ஒரு பெண்ணைக் கொன்று எரித்துவிட்டு சோனம் என நாடகமாடுவது என்ற திட்டங்களும் கொலைச் சதியில் இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், சோனம் சகோதரர் கோவிந்த் மீதும், ராஜா ரகுவன்ஷியின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். முதலில், தனது தங்கையின் தவறுக்காக எங்களிடம் வந்து மன்னிப்புக் கேட்டார். இப்போது சோனத்தை நேரில் சந்தித்து, வழக்குரைஞர் வைக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார். இதையெல்லாம் செய்வதாக இருந்தால், ஏன் எங்களிடம் வந்து உணர்வுப்பூர்வமாக பேசி மன்னிப்புக் கேட்பது போல நடிக்க வேண்டும். தொடர்ந்து நாங்கள் சோனத்தையும் அவர்களது குடும்பத்தையும் வெறுக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Raja Raghuvanshi's brother has alleged that Sonam, who was arrested in the case of killing her husband while he was on honeymoon, may have secretly married Raj Kushwaha.

இதையும் படிக்க.. இ-பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் முறை! முழு விவரம்

நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்

தங்கக் கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள கன்னட நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.அதன்படி, விக்டோரியா லேஅவுட்டின் குடியிருப்பு வீடு, பெங்களூருவில... மேலும் பார்க்க

கேரள முதல்வர் அமெரிக்கா பயணம்!

கேரள முதல்வர் பினராயி விஜயன், மருத்துவப் பரிசோதனைகளுக்காக அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் மேற்கொண்டு வரும் மருத்துவ சிகிச்சையின் ஒரு பகுதியாகத்... மேலும் பார்க்க

பாகிஸ்தானை விட்டு வெளியேறிய மைக்ரோசாஃப்ட்!

கராச்சி: தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், பணியாளர்களைக் குறைப்பதற்கான உலகளாவிய உத்தியின் ஒரு பகுதியாக பாகிஸ்தானில் உள்ள தனது வரையறுக்கப்பட்ட செயல்பாடுகளை மூடுவதாக அறிவித்தது. இந்த அறிவிப்பினால் நாட... மேலும் பார்க்க

அமர்நாத்: 2 நாள்களில் 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் !

தெற்கு காஷ்மீர் இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் 2 நாள்களில் 20 ஆயிரம் பக்தர்கள் பனி லிங்கத்தைத் தரிசனம் செய்துள்ளனர்.இதுகுறித்து துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கூறுகையில், இதுவரை, தகவல்களின்படி... மேலும் பார்க்க

மொழியின் பெயரால் வன்முறை கூடாது! - ஃபட்னவீஸ் எச்சரிக்கை

மொழியின் பெயரால் வன்முறையில் ஈடுபடக்கூடாது என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் எச்சரித்துள்ளார். மேலும், மராத்தி மொழியின் பெருமைக்கான வன்முறையில் ஈடுபடுவதையும் பொறுத்துக் கொள்ள முடியாது எனவும் ... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் ஓடும் ரயிலில் இருந்து மனைவியை தள்ளிவிட்ட கணவன் !

ஜார்க்கண்டில் ஓடும் ரயிலில் இருந்து மனைவியை தள்ளிவிட்ட கணவனால் பரபரப்பு நிலவியது. ஜார்க்கண்ட் மாநிலம், பர்ககானாவிலிருந்து வாரணாசிக்கு தம்பதியினர் வாரணாசி எக்ஸ்பிரஸில் செவ்வாய்க்கிழமை கிளம்பியுள்ளனர். ... மேலும் பார்க்க