செய்திகள் :

தேனிலவு கொலை: திரைப்படமாக உருவாகும் ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கு!

post image

திரைப்படக் கதைகளுக்கு சற்றும் குறைவில்லாத, ராஜா ரகுவன்ஷியின் கொலைச் சம்பவமே, தற்போது திரைப்படமாக உருவாகவிருக்கிறது. இதற்கு அவரது குடும்பத்தினர் ஒப்புதல் அளித்திருக்கிறார்கள்.

ஹில்லாங் தேனிலவு என்ற பெயரில், ராஜா ரகுவன்ஷியின் கொலை வழக்கு திரைப்படமாக உருவாகவிருக்கிறது. ராஜாவின் திருமணம், மரணம், வழக்கு விசாரணை, சோனம் கைது செய்யப்படுவது உள்ளிட்டவற்றைக் கொண்டதாக இப்படம் தயாரிக்கப்படவிருக்கிறதாம்.

இது குறித்து ராஜாவின் சகோதரர் சச்சின் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அளித்த தகவலில், சகோதரரின் மரணம் குறித்து திரைப்படம் தயாரிக்க நாங்கள் அனுமதி கொடுத்துவிட்டோம். எங்கள் சகோதரரின் மரணம் குறித்து படம் எடுக்க ஒப்புக்கொள்ளாவிட்டால், யார் சரி, யார் தவறு என மக்கள் அறிந்துகொள்ள முடியாமல் போய்விடும் என்கிறார்.

திரைப்படத்தை இயக்கும் எஸ்பி நிம்பாவத் கூறுகையில், எங்கள் திரைப்படத்தின் மூலம், இதுபோன்ற கொலைகள் ஒருபோதும் நடக்கக் கூடாது என்று வலியுறுத்தும் வகையில் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு இந்தூரிலும் 20 சதவீத படப்பிடிப்பு மேகாலயத்திலும் நடைபெறவிருக்கிறதாம்.

இந்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி, அவரது மனைவி சோனம் ரகுவன்ஷியால் மேகாலயத்தில் கொலை செய்யப்படுகிறார். இவர்களுக்கு மே 11ஆம் தேதி திருமணமான நிலையில், மே 23ஆம் தேதி ராஜா கொல்லப்படுகிறார்.

இந்த வழக்கில், சோனம் மற்றும் அவரது காதலர் ராஜ் குஷ்வாஹா மற்றும் கூலிப்படையினர் கைது செய்யப்பட்டனர். தேனிலவு அழைத்துச் சென்று கணவரைக் கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

தனியாா் மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டணம்: கூடுதலாக வசூலித்தால் நடவடிக்கை மருத்துவக் கல்வி இயக்ககம்

தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் விடுதி, உணவு, போக்குவரத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாரளிக்கலாம் என்றும், அதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது... மேலும் பார்க்க

அமெரிக்கா வரி விதிப்பு: மத்திய அரசு தீவிர ஆலோசனை - அமைச்சா் பியூஷ் கோயல்

இந்திய பொருள்கள் மீது வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதிமுதல் 25 சதவீத வரி மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்த நிலையில், ‘அமெரிக்க வரி விதிப்பின் சாதக, பாதகங்கள் குறித்... மேலும் பார்க்க

அதானிக்கு உதவுவதற்காக பொருளாதாரத்தை பாஜக அழித்துவிட்டது: ராகுல் கடும் தாக்கு

‘இந்திய பொருளாதாரம் சரிந்துவிட்டது என்பதை பிரதமா் நரேந்திர மோடி மற்றும் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஆகியோரைத் தவிர மற்ற அனைவரும் அறிந்துள்ளனா். தொழிலதிபா் அதானிக்கு உதவுவதற்காக இந்திய பொருள... மேலும் பார்க்க

பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தத்துக்கு எதிா்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் 8-ஆவது நாளாக போராட்டம்

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற வளாகத்தில் தொடா்ந்து 8-ஆவது நாளாக ‘இண்டி’ கூட்டணி கட்சி எம்.பி.க்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.நட... மேலும் பார்க்க

அரசின் ஏவல் படையா, அமலாக்கத் துறை? அதிகாரப்பூர்வ தகவலைப் பகிர்ந்து திரிணாமுல் எம்.பி. கேள்வி!

அமலாக்கத் துறை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் ஏவல் படையாகச் செயல்படுவதாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சாகேத் கோகலே குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்... மேலும் பார்க்க

குவைத்தில் உயிரிழந்த ஜார்க்கண்ட் தொழிலாளி! 45 நாள்கள் கழித்து தாயகம் வந்தடைந்த உடல்!

குவைத் நாட்டில் உயிரிழந்த ஜார்க்கண்டைச் சேர்ந்த தொழிலாளியின் உடல் 45 நாள்கள் கழித்து தாயகம் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்டின் ஹசாரிபாக் மாவட்டத்தின், பந்த்காரோ கிராமத்தைச் சேர்... மேலும் பார்க்க