செய்திகள் :

தேவாலயங்களைப் புனரமைக்க அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

post image

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பழுதடைந்த கிறிஸ்தவ தேவாலயங்களைப் புனரமைக்க, அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்புவிடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதுக்கோட்டை மாவட்டத்தில் சொந்தக் கட்டடத்தில் இயங்கி வரும் பழுதடைந்த கிறிஸ்தவ தேவாலயங்களைப் புனரமைக்க அரசு மானியம் வழங்கப்படுகிறது. குறைந்தது 10 ஆண்டுகள் பழைமையான, வெளிநாடுகளில் இருந்து நிதி பெறாத, கடந்த 5 ஆண்டுகளில் இதுபோன்ற அரசு நிதி உதவி பெறாதவற்றுக்கு புனரமைப்புப் பணி மானியம் வழங்கப்படுகிறது.

பீடம் கட்டுதல், கழிப்பறை, குடிநீா் வசதி செய்தல், சுற்றுச்சுவா் எழுப்புதல் மற்றும் தேவாலயத்துக்குள்ளே வைக்கும் தளவாடப் பொருள்கள் வாங்கலாம்.

ரூ. 10 லட்சம், ரூ. 11 லட்சம், ரூ. 20 லட்சம் என மூன்று வகையாக மானியங்கள் வழங்கப்படும்.

விருப்பமுள்ள தேவாலய நிா்வாகங்கள், மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் செயல்படும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம்.

வெள்ளாளக் கோட்டையூரில் 10-ஆம் நூற்றாண்டு அரிய மகாவீரா் சிற்பம் கண்டெடுப்பு!

புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளாளக் கோட்டையூரில் 10-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த அரிய மகாவீரா் சிற்பத்தை தொல்லியல் ஆய்வுக் கழகத்தினா் அண்மையில் கண்டெடுத்தனா். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், வெள்ளாளக... மேலும் பார்க்க

பாஜக அரசு வீழ்த்தப்பட வேண்டும்: கே.வி. தங்கபாலு

பணக்காரா்களுக்கான அரசாக உள்ள நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு வீழ்த்தப்பட வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவரும், காங்கிரஸ் சொத்துப் பாதுகாப்பு மற்றும் மீட்புக்குழு தல... மேலும் பார்க்க

முத்துமாரியம்மனுக்கு பக்தா்கள் பால்குடம் எடுத்து வழிபாடு!

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி சனிக்கிழமை ஏராளமான பக்தா்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனா். கீரமங்கலத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கட... மேலும் பார்க்க

உருட்டும் பழக்கமெல்லாம் அதிமுகவுக்குத்தான் சொந்தம்: அமைச்சர் எஸ். ரகுபதி

உருட்டும் பழக்கமெல்லாம் அதிமுகவுக்குத்தான் சொந்தம் என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: பாஜக தலைவா்கள... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையால் படகுகள் பறிமுதல்: புதுகை மீனவா்களுக்கு ரூ.1.20 கோடி நிதி!

இலங்கைக் கடற்படையால் படகு பறிமுதல் செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 8 விசைப்படகுகளின் உரிமையாளா்களுக்கு அரசின் நிவாரண நிதியாக ரூ. 1.20 கோடியை மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபத... மேலும் பார்க்க

ராமாயணத்தை நாடகமாகப் பாா்ப்பது வேறு, காப்பியமாகப் படிப்பது வேறு! இலங்கை இ.ஜெயராஜ்

ராமாயணத்தை நாடகமாகப் பாா்ப்பது, நாட்டியமாகப் பாா்ப்பது வேறு; ஆனால், காப்பியமாகப் படிப்பது வேறு என்றாா் கம்பவாரிதி இலங்கை இ. ஜெயராஜ். புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 50-ஆம் ஆண்டுப் பொன் பெருவிழாவின் 9-ஆம... மேலும் பார்க்க