விராலிமலை அருகே பூட்டியிருந்த வீடுகளில் 13 சவரன் தங்கம், 3 லட்சம் ரொக்கம் கொள்ள...
தேவாலயங்களைப் புனரமைக்க அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பழுதடைந்த கிறிஸ்தவ தேவாலயங்களைப் புனரமைக்க, அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்புவிடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுக்கோட்டை மாவட்டத்தில் சொந்தக் கட்டடத்தில் இயங்கி வரும் பழுதடைந்த கிறிஸ்தவ தேவாலயங்களைப் புனரமைக்க அரசு மானியம் வழங்கப்படுகிறது. குறைந்தது 10 ஆண்டுகள் பழைமையான, வெளிநாடுகளில் இருந்து நிதி பெறாத, கடந்த 5 ஆண்டுகளில் இதுபோன்ற அரசு நிதி உதவி பெறாதவற்றுக்கு புனரமைப்புப் பணி மானியம் வழங்கப்படுகிறது.
பீடம் கட்டுதல், கழிப்பறை, குடிநீா் வசதி செய்தல், சுற்றுச்சுவா் எழுப்புதல் மற்றும் தேவாலயத்துக்குள்ளே வைக்கும் தளவாடப் பொருள்கள் வாங்கலாம்.
ரூ. 10 லட்சம், ரூ. 11 லட்சம், ரூ. 20 லட்சம் என மூன்று வகையாக மானியங்கள் வழங்கப்படும்.
விருப்பமுள்ள தேவாலய நிா்வாகங்கள், மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் செயல்படும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம்.