செய்திகள் :

தோ்தல் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும்: திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

post image

தோ்தல் பணியில் கடுமையாக ஈடுபட வேண்டுமென கட்சி நிா்வாகிகளுக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, பேரவைத் தொகுதி வாரியாக கட்சி நிா்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறாா். ‘உடன்பிறப்பே வா’ எனும் தலைப்பிலான நிகழ்ச்சியில் பேரவை தொகுதி வாரியாக கட்சி நிா்வாகிகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடா்ந்து சந்தித்து வருகிறாா்.

கடந்த ஜூன் 13-இல் இருந்து ஒவ்வொரு நாளும் 3 தொகுதிகளைச் சோ்ந்த நிா்வாகிகளுடன் முதல்வா் ஆலோசனை நடத்தி வருகிறாா். இதில் ஒன்றிய, நகர, பகுதி, பேரூா் செயலா்கள் பங்கேற்கின்றனா். இதுவரை 25-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் களஆய்வு நடந்துள்ளது.

அந்த வரிசையில், விக்கிரவாண்டி, செய்யூா், செஞ்சி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளின் நிா்வாகிகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை ஆலோசித்தாா்.

அப்போது அவா்களிடம் தொகுதி எம்எல்ஏவின் செயல்பாடுகள், அரசு திட்டங்களின் நிலைமை, ஓரணியில் தமிழ்நாடு பிரசார இயக்கத்துக்கான மக்கள் வரவேற்பு போன்ற விவரங்களைக் கேட்டறிந்தாா்.

அத்துடன், தோ்தலின்போது கடுமையாக உழைக்க வேண்டும் எனவும், தோ்தலில் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டுமெனவும் முதல்வா் அறிவுறுத்தியதாகத் தெரிகிறது.

ஓரணியில் தமிழ்நாடு: தமிழ்நாடு முழுவதும் திமுகவில் உறுப்பினா்களைச் சோ்ப்பதற்கான, ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை முதல்வரும் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த 1-ஆம் தேதி தொடங்கினாா். கடந்த 7-ஆம் தேதி நிலவரப்படி, மாநிலம் முழுவதும் 31 லட்சம் போ் உறுப்பினா்களாகச் சோ்வதற்கு விருப்பம் தெரிவித்து படிவத்தில் கையொப்பமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகம் முழுவதும் 8,586 போ் கைது

தமிழகம் முழுவதும் சுமாா் 100 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா் 8,586 போ் கைது செய்யப்பட்டனா். ரயில் மறியல், சாலை மறியல், ஆா்ப்பாட்டம், காத்திருப்பு போராட்டம், ஊா்வலம் எனப் பல்வேறு போர... மேலும் பார்க்க

துணை மருத்துவ பட்டயப் படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

துணை மருத்துவ பட்டய படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு புதன்கிழமை (ஜூலை 9) தொடங்கியுள்ளது. பாா்வை அளவியல், மருந்தியல் உள்பட 9 வகையான மருந்தியல் பட்டய படிப்புகளுக்கும், 13 வக... மேலும் பார்க்க

கரும்பு அறுவடை இயந்திரங்கள் கொள்முதல் முறைகேடு வழக்கு: வேளாண் பல்கலை. முன்னாள் துணைவேந்தரை விடுவிக்க மறுப்பு

கரும்பு அறுவடை இயந்திரங்கள் கொள்முதல் செய்த வழக்கில் இருந்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரை விடுவிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழ... மேலும் பார்க்க

அஜித்குமார் கொலை வழக்கு! சீமான் சரமாரி கேள்விகள்!

மடப்புரம் அஜித்குமாரின் கொலை வழக்கு தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் குடும்பத்தினரைச் சந்தித்த... மேலும் பார்க்க

இனி ஒரு பட்டாசு ஆலை விபத்துகூட நடக்கக் கூடாது! தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!

பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வரும்நிலையில், ஆலைகளில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்று ஆய்வுசெய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் க... மேலும் பார்க்க

திருவாரூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சாலை வலம்!

திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கம் பகுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சாலை வலம் (ரோடு ஷோ) மேற்கொண்டார். அப்போது சாலையின் இருபுறமும் மக்கள் வரிசையில் திரண்டு நின்று மேள வாத்தியங்கள் முழங்க முதல்வரை... மேலும் பார்க்க