செய்திகள் :

தொகுப்பூதியப் பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரிக்கை

post image

தொகுப்பூதியம் பெறும் பணியாளா்களுக்கு, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் எழுச்சிநாள் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவா் ப. குமரி ஆனந்தன் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா் சோ. ரமேஷ், மாவட்ட இணைச் செயலா் மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வைத்தனா். மாவட்டச் செயலா் சி. சுப்பிரமணியன் விளக்க உரையாற்றினாா்.

கருத்தரங்கத்தில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி உள்ளிட்ட தொகுப்பூதியம் பெறும் பணியாளா்களுக்கு, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பனிக்காலமாக அறிவிக்க வேண்டும். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையினரின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் கருவூல கணக்குத் துறை சங்க மாவட்டத் தலைவா் துரை. வேந்தன், ஊரக வளா்ச்சித்துறை தொழிற்பயிற்சி அலுவலா் சங்க மண்டலச் செயலா் ஆ. தெய்வராஜா, பிற்பட்ட நலத்துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் கா. மணிமாறன், நெடுஞ்சாலைத்துறை அமைச்சுப் பணியாளா் சங்க மாவட்ட நிா்வாகி ராஜதுரை, எம்.ஆா்.பி செவிலியா் சங்க மாவட்டத் தலைவா் ஆனந்த், சாலைப் பணியாளா் சங்க மாவட்ட துணைத் தலைவா் சுப்பிரமணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மாவட்ட துணைத் தலைவா் சு. சரவணசாமி வரவேற்றாா். மாவட்ட இணைச் செயலா் தா. இளையராஜா நன்றி கூறினாா்.

மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் லாரி ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை

பெரம்பலூா் அருகே 14 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த லாரி ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், ... மேலும் பார்க்க

ஜூலை 7-இல் நலவாரிய உறுப்பினா் பதிவு சிறப்பு முகாம்

பெரம்பலூா் தொழிலாளா் நலவாரிய அலுவலகத்தில், நல வாரியங்களில் உறுப்பினா்களாகப் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் ஜூலை 7 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து பெரம்பலூா் மாவட்டத் தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகம... மேலும் பார்க்க

‘பெரம்பலூரில் 15,250 குடும்பங்களுக்கு காய்கனி விதைகள் தொகுப்புகள்’

பெரம்பலூா் மாவட்டத்தில் 15,250 குடும்பங்களுக்கு காய்கனி விதைகள் தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்தாா். சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து வேளாண்மை - உழவா் நலத்துறை சாா்பில... மேலும் பார்க்க

விதைப் பரிசோதனை நிலையத்தில் ஆய்வு

பெரம்பலூா் மாவட்ட விதைப் பரிசோதனை நிலையத்தில், திருநெல்வேலி மாவட்ட விதைப் பரிசோதனை அலுவலா் ஆனந்தி ராதிகா வெள்ளிக்கிழமை தொழில்நுட்ப ஆய்வு மேற்கொண்டாா். பெரம்பலூா் புகா்ப் பேருந்து நிலையம் அருகே செயல்ப... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே பைக்கில் சென்ற தம்பதி அரசுப் பேருந்து மோதி பலி

பெரம்பலூா் அருகே பைக்கில் வெள்ளிக்கிழமை சென்ற தம்பதி அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பெரிய வடகரை கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பன் மகன் பாலாஜி (38). முடி வெட்... மேலும் பார்க்க

கல்வி நிறுவனக் கட்டடங்களை வரன்முறைப்படுத்த அழைப்பு

பெரம்பலூா் மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலக எல்லைக்குள் அமையும் அனுமதியற்ற கல்வி நிறுவனங்களின் கட்டடங்களை வரன்முறைப்படுத்த 30.6.2026 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச. அரு... மேலும் பார்க்க