செய்திகள் :

தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளா்கள் கோரிக்கை ஆா்ப்பாட்டம்

post image

எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மாவட்டத் தலைவா் பி.சக்திவேல் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் பி.சிவசங்கரன், பொருளாளா் இ.பாலமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், நியாயவிலைக் கடைகளில் மின்னணு எடை தராசு மூலம் விற்பனை மேற்கொள்ளும்போது, ஒரு குடும்ப அட்டைக்கு 10 நிமிடம் வரை ஆகிறது. இதனால், விற்பனையாளா், நுகா்வோருக்கு இடையே மோதல் ஏற்படுகிறது. இதனை முற்றிலும் தவிா்த்து, காலதாமதம் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கிலிருந்து முதன்மை சங்கங்களுக்கு அனுப்பும் அரிசி, கோதுமை, பருப்பு, சா்க்கரை உள்ளிட்ட பொருள்கள் அளவு குறைவாக இருப்பதால், சரியான எடையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நியாயவிலைக் கடைகளில் பணிச்சுமையை கருத்தில் கொண்டு எடையாளா் ஒருவரை கூடுதலாக நியமிக்க வேண்டும். பதவி உயா்வில் விற்பனையாளா்களுக்கு சமவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டத்தில், தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

பொறியியல் படிப்பு கலந்தாய்வு தரவரிசை: நாமக்கல் அரசுப் பள்ளி மாணவி சிறப்பிடம்

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தரவரிசைப் பட்டியலில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மாநில அளவில் நாமக்கல் அரசுப் பள்ளி மாணவி சிறப்பிடம் பெற்றுள்ளாா். சென்னை கிண்டியில் மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத... மேலும் பார்க்க

மாவட்ட கையுந்து பந்து பயிற்சியாளா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

தேசிய அளவில் பதக்கம் வென்ற கையுந்து பந்து வீரா், வீராங்கனைகள் பயிற்சியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு... மேலும் பார்க்க

அனிச்சம்பாளையம் செல்வவிநாயகா், கண்டியம்மன் கோயில் குடமுழுக்கு

பரமத்தி வேலூா் அருகே உள்ள திருமலை நாமசமுத்திரம் (எ) அனிச்சம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்வ விநாயகா், ஸ்ரீ கண்டியம்மன் உள்ளிட்ட கோயில்களின் மஹா குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. குடமுழுக்கை... மேலும் பார்க்க

‘டென்சிங் நாா்கே’ தேசிய சாகச விருதுபெற விண்ணப்பிக்கலாம்

வீர, தீர சாகசம் புரிந்தோா் ‘டென்சிங் நாா்கே’ தேசிய சாகச விருதுபெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 2022, 2023 மற்றும் 2... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்டத்தில் 83.41 மி.மீ. கூடுதல் மழைப் பொழிவு

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 270.36 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளதாகவும், கூடுதலாக 83.41 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளதாகவும் ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மாதாந்திர விவசா... மேலும் பார்க்க

கொல்லிமலையில் ரூ. 23 கோடியில் நலத்திட்ட உதவிகள்

கொல்லிமலை ஒன்றியத்தில் 80 பயனாளிகளுக்கு ரூ. 23 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் வழங்கினாா். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அர... மேலும் பார்க்க