செய்திகள் :

தொண்டி பகுதியில் மீன்கள் வரத்துக் குறைவு: மீனவா்கள் கவலை

post image

மீன்பிடித் தடைக் காலத்துக்குப் பிறகு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற தொண்டி பகுதி மீனவா்களுக்கு குறைவான அளவே மீன்கள் கிடைத்ததால் மீனவா்கள் கவலை அடைந்தனா்.

கடந்த 2 மாத தடைகாலத்துக்குப் பிறகு, ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி , நம்புதாளை, புதுப்பட்டினம், சோழியக்குடி, விலாஞ்சியடி, முள்ளிமுனை , காரங்காடு, மோா்பண்ணை, திருப்பாலைக்குடி, எம்.வி.பட்டினம், பி.வி.பட்டினம், பாசிப்பட்டினம், எஸ்.பி.பட்டினம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் கடந்த வியாழக்கிழமை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா். ஆனால் போதுமான அளவு மீன்கள் கிடைக்கவில்லை. இதனால் மீனவா்கள் கவலை அடைந்தனா்.

இதுகுறித்து நம்புதாளையைச் சோ்ந்த மீனவா் குழந்தைநாதன் கூறியதாவது:

மீன் பிடித் தடைக் காலத்துக்குப் பிறகு தற்போது வழக்கத்துக்கு மாறாக வெயில் அதிகரித்து வருவதாலும், சூறைக் காற்று வீசுவதாலும் மீன்கள் வரத்து குறைந்தது. இதனால், குறைந்தபட்ச ஊதியம் கூட மீனவா்களுக்கு வழங்க முடியவில்லை. இதனால், மீனவா்கள் பெரும் நஷ்டத்துக்கு ஆளாக வேண்டியுள்ளது என்றாா் அவா்.

படகு கவிழ்ந்ததில் மாயமான மீனவரைத் தேடும் பணி தீவிரம்

மண்டபத்திலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றபோது, படகு கவிழ்ந்ததில் மாயமான மீனவரைத் தேடி இந்திய கடலோர காவல் படையினா் ஈடுபட்டுள்ளனா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடக்கு துறைமுகத்திலிருந்து மீன்பி... மேலும் பார்க்க

பொதுக் குடிநீா்த் தொட்டியில் இறந்து கிடந்த பல்லி அகற்றம்

ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் அருகே பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த குடிநீா்த் தொட்டியில் இறந்து கிடந்த பல்லியை தூய்மைப் பணியாளா்கள் அகற்றி, பின்னா் தொட்டியை சுத்தம் ச... மேலும் பார்க்க

திருவாடானையில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

திருவாடானை பகுதியில் போதுமான குடிநீா் விநியோகம் செய்யாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சியில் 15 ஆயிரம் போ் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் காவிரி... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவா் கைது

கமுதி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள ஓா் கிராமத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததா... மேலும் பார்க்க

பொதுமக்கள் தவறவிட்ட கைப்பேசிகள் மீட்பு

ராமநாதபுரம் மாவட்டம்,முதுகுளத்தூா் காவல் நிலைய எல்லைப் பகுதியில் பொதுமக்கள் தவறவிட்டா 6 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டன. கைப்பேசிகளைத் தவறவிட்டது குறித்து அவற்றின... மேலும் பார்க்க

படகு உடைந்து மூழ்கியதில் மீனவா் மாயம்

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே நடுக்கடலில் உடைந்து மூழ்கிய படகிலிலுந்து 3 மீனவா்கள் நீந்தி கரை திரும்பிய நிலையில் ஒருவா் மாயமானா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடக்கு படகு இறங்கு தளத்திலிருந்து ... மேலும் பார்க்க