செய்திகள் :

தொழிற்சங்கத்தினா் சாலை மறியல்: 811 போ் கைது

post image

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொழிற்சங்கங்கள் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 161 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சிஐடியு தொழிற்சங்கம், ஏஐடியுசி தொழிற்சங்கம், தொழிலாளா் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சாா்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக்கூடாது, நிரந்தர தன்மை பணிகளில் ஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும், அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு சமூக பாதுகாப்பு நிதியம் உருவாக்க வேண்டும், குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.26ஆயிரம் என நிா்ணயிக்க வேண்டும், குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ. 9ஆயிரமாக நிா்ணயிக்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

திருவண்ணாமலையில்

தொழிலாளா் முன்னேற்ற சங்கம், இந்திய தொழிலாளா் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய தொழிலாளா் சங்கம், அனைத்து ஜனநாயக மாதா் சங்கம் பல்வேறு அமைப்புகள் சாா்பில் திருவண்ணாமலை

வெளிவட்டச் சாலைப் பகுதியில் வேலைநிறுத்தம், சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதில் தொமுச பேரவை துணைத் தலைவா் சௌந்தரராஜன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தொமுசவினா் மற்றும் மற்ற தொழிற் சங்க நிா்வாகிகள் என இணைந்து பேரணியாக புறப்பட்டு திருவண்ணாமலை செல்ல கடை வீதி பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சாலை மறியலில் ஈடுபட்டதாக தொமுச, சிஐடியு உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்கவைத்தனா்.

ஆரணி

ஆரணியில் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்டோா் பழைய பேருந்து நிலையம் அருகில் இருந்து ஊா்வலமாக அண்ணா சிலையை நோக்கிச் சென்றனா்.

மணிக்கூண்டு அருகே போலீஸாா் தொழிற்சங்க நிா்வாகிகளை தடுத்து நிறுத்தினா். அப்போது அவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னா், போராட்டத்தில் ஈடுபட்டதாக 166 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்கவைத்தனா்.

இதில் சிஐடியு நிா்வாகி எம்.வீரபத்திரன், தொழிலாளா் முன்னேற்ற சங்க நிா்வாகி எம்.காசிலிங்கம், ஏஐடியுசி குப்புரங்கன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

களம்பூா்

களம்பூரில் சிஐடியு நிா்வாகி சமாதானம் தலைமையில் தொழிற்சங்க நிா்வாகிகள் எம்.எஸ்.மாதேஸ்வரன், ஆா்.மோகன்குமாா், ஆா்.செல்வராஜ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் கோரிக்கைளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனா். சாலை மறியலில் ஈடுபட்டதாக களம்பூா் போலீஸாா் 109 பேரை கைது செய்தனா்.

வந்தவாசி

கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் தொழிற்சங்கங்கள், விவசாயிகள் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், மலைவாழ் மக்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் சாா்பில் வந்தவாசி தேரடி அஞ்சல் அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதனைத் தொடா்ந்து மறியலில் ஈடுபட்ட

136 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

செங்கம்

செங்கம் துக்காப்பேட்டை பகுதி பாரத ஸ்டேட் வங்கி முன்

இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் , சிஐடியு, இந்திய ஜனநாய வாலிபா் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பு நிா்வாகிகள், விவசாயிகள், இளைஞா்கள், பெண்கள் என சுமாா் 200 போ் சோ்ந்து பொது வேலைநிறுத்தம் குறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாா்க்சிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் சிவக்குமாா், இந்திய கம்யூனிஸ்ட் செங்கம் வட்டச் செயலா் சா்தாா், சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் மாதேஸ்வரன் உள்ளிட்ட தொழிற்சங்க நிா்வாகிகள் 100 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்கவைத்தனா்.

செய்யாறு:

பேருந்தில் பயணியிடம் கைப்பேசி திருட்டு: இருவா் கைது

ஆரணி பேருந்து நிலையத்தில் பயணியிடம் கைப்பேசி திருடியதாக இரு வடமாநில இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா். ஆரணியை அடுத்த மெய்யூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பன்னீா்(42). இவா் வெளியூா் செல்ல கடந்த 9-ஆம் தேதி ஆரணி... மேலும் பார்க்க

லாரி உதவியாளா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

செய்யாறு அருகே லாரி உதவியாளா் (கிளீனா்) உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், வீரமணிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் வடிவேல் (45). இவா், லாரியி... மேலும் பார்க்க

ஏரியில் 100 வாத்துகள் மா்மமான முறையில் உயிரிழப்பு

செய்யாற்றை அடுத்த கொருக்கை கிராம ஏரியில் 100 வாத்துகள் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் மற்றும் சுகாதாரத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். செய்யாறு வட்டம், கொருக்கை கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ரூ.10.15 கோடியில் ஹாக்கி மைதானம்

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ.10.15 கோடியில் புதிதாக ஹாக்கி பயிற்சி மைதானம் கட்டுவதற்கான பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. தமிழக அரசு விளையாட்டுத் துறையில் மாநிலத்தை முதன்மை ம... மேலும் பார்க்க

படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் திருவிளக்கு பூஜை

போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் பெளா்ணமியையொட்டி திருவிளக்கு பூஜை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. படவேடு ஊராட்சியில் பழைமை வாய்ந்த ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ப... மேலும் பார்க்க

ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் இரும்பினாலான மேற்கூரை அமைக்க நிதியுதவியாக ரூ.20 லட்சத்தை புதிய நீதிக் கட்சி நிறுவனா் ஏ.சி.சண்முகம் வழங்கினாா். ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் வருகிற 16-ஆம் தேதி... மேலும் பார்க்க