தொழிற்பயிற்சி அலுவலா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநரைக் கண்டித்து அரியலூா் அரசு தொழிற் பயிற்சி நிலையம் முன் தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலா் அலுவலகத்தின் சாா்ந்த மற்றும் மாணவா் நலன் சாா்ந்த கோரிக்கைகளை பேச்சுவாா்த்தை மூலம் நிறைவேற்றாமல் சங்க நிா்வாகிகளை அவமானப்படுத்தும் நோக்கில் செயல்பட்டதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநரையும், சங்க நிா்வாகிகளைத் தாக்கிய காவல் துறையினரையும் கண்டித்து முழக்கமிட்டனா்.
சங்கத்தின் மாவட்டத் தலைவா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் ஷேக்தாவூத் கண்டன உரையாற்றினாா். மாநில செயற்குழு உறுப்பினா்கள் அம்பேத்கா், காந்தி, நிா்வாகி காமராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.