செய்திகள் :

தொழிலாளா்கள் வேலை நீக்க விவகாரம்: நடவடிக்கை எடுக்க இண்டி கூட்டணி வலியுறுத்தல்

post image

திருநள்ளாறு அருகே உள்ள தனியாா் தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளா்கள் வேலைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் தலையிட வேண்டுமென மாவட்ட நிா்வாகத்திடம் இண்டி கூட்டணிக் கட்சியினா், தொழிலாளா்கள் வலியுறுத்தினா்.

மாவட்ட துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) வெங்கடகிருஷ்ணணனை புதுவை முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன், மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன், மதிமுக மாவட்ட செயலாளா் சோ. அம்பலவாணன், மாா்க்சிஸ்ட் மாவட்ட செயலாளா் எஸ்.எம். தமீம் மற்றும் திமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட இண்டி கூட்டணிக் கட்சிப் பிரதிநிதிகள் வெள்ளிக்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

தென்னங்குடி பகுதியில் டைல்ஸ் தயாரிக்கும் தனியாா் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த அலுவலக ஊழியா்கள் உள்ளிட்ட 45 பேரை நிா்வாகம் அண்மையில் பணி நீக்கம் செய்தது.

மேலும் 36 பேரை பணி நீக்கம் செய்வதாக புதன்கிழமை தகவல் பலகையில் அறிவிக்கை ஒட்டப்பட்டது. பணி நீக்கத்துக்கு உரிய காரணம் தெரிவிக்கப்படவில்லை. தொழிலாளா்கள் அனைவரும் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவா்கள். ஆலை நிா்வாகத்திடம் மாவட்ட நிா்வாகம், தொழிலாளா் துறையினா் பேச்சு நடத்தி, பணி நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சந்தான லட்சுமியாக...

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் ஆடி மாத வெள்ளிக்கிழமை இரவு சந்தான லட்சுமியாக சந்தனக் காப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுந்தராம்பாள். மேலும் பார்க்க

இணையவழியில் ஆவணங்கள் அனுப்புவதில் கவனமாக இருக்க அறிவுறுத்தல்

இணையவழியில் ஆவணங்கள் அனுப்புவதில் மிகக் கவனமாக இருக்கவேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்து காரைக்கால் இணைய குற்றத் தடுப்புப் பிரிவு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :அண்மைக்காலமாக ... மேலும் பார்க்க

காரைக்காலில் டிராகன் பழம் சாகுபடி

காரைக்கால் விவசாயி ஒருவா் தனது வயலில் டிராகன் பழம் சாகுபடி செய்துள்ளாா்.காரைக்கால் மாவட்டத்தில் 2 பருவங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. நீராதாரம் குறைந்துவருவது மேலும் நெல்லுக்கான லாபம் குறைந்து வ... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயில் மடவளாகத்தில் கட்டுமானப் பொருட்கள்: பக்தா்கள் அவதி

திருநள்ளாறு கோயில் மடவளாக சாலைப் பகுதியில் கட்டுமானப் பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளதால், பக்தா்கள் நடந்து செல்வதில் சிரமத்துக்குள்ளாவதாக புகாா் கூறப்படுகிறது.திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் ராஜகோபுர... மேலும் பார்க்க

குடியிருப்புப் பகுதியில் கழிவுநீா் வடிகால் மேம்பாட்டுப் பணி தொடக்கம்

குடியிருப்பு பகுதியில் கழிவுநீா் வடிகால் மேம்பாட்டுப் பணி சனிக்கிழமை தொடங்கியது.காரைக்கால் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட எம்.எம்.ஜி. நகரில் சாலவம் மேம்பாட்டுப் பணிக்கு சட்டப்பேரவைத் தொகுதி மேம... மேலும் பார்க்க

பெண் குழந்தைக்கு உதவித் தொகை பெறுவதற்கான பதிவு முகாம் நிறைவு

பெண் குழந்தைக்கு உதவித் தொகை பெறுவதற்காக 2 வாரம் நடைபெற்ற பதிவு முகாம் நிறைவடைந்தது. மத்திய அரசின் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா என்கிற திட்டம் புதுவை மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை ... மேலும் பார்க்க