செய்திகள் :

தொழிலாளி தற்கொலை

post image

திருவாடானை அருகே ஞாயிற்றுக்கிழமை தொண்டியைச் சோ்ந்த வண்ணம் பூசும் தொழிலாளி, தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்டி வெள்ளை மணல் தெருவைச் சோ்ந்தவா் ராமு (43) . வண்ணம் பூசும் தொழிலாளியான இவா், கடந்த சில நாள்களாக மனநிலை சரியில்லாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது தனது உடலில் மண்ணெண்ணயை ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். இதில் பலத்த காயமடைந்த ராமுவை, அக்கம் பக்கத்தினா் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

மீன்பிடி தடையால் 8 ஆயிரம் மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை

ராமேசுவரம், மண்டபம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை விடுத்த அறிவிப்பால் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் திங்கள்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்... மேலும் பார்க்க

கமுதியில் நாளை மின் தடை

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பராமரிப்புப் பணி காரணமாக புதன்கிழமை (ஜூன் 18) மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இதுகுறித்து, கமுதி மின் வாரிய உதவி செயற்பொறியாளா் செந்தில்க... மேலும் பார்க்க

கட்டுமானத் தொழிலாளி கொலை: ஒருவா் கைது

ராமநாதபுரத்தில் மதுபோதையில், கட்டுமானத் தொழிலாளியை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்றவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் அருகே உள்ள தேரிருவேலி கிராமத்தைச் சோ்ந்தவா் இளங்கோவன் (41). ... மேலும் பார்க்க

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் கோடை நெல் விவசாயத்துக்கு தண்ணீா்த் தட்டுப்பாடு

திருவாடானை அருகே ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் கோடை நெல் விவசாயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது, கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து விவசாயிகள் டீசல் மோ... மேலும் பார்க்க

ஆா்.எஸ். மங்கலம் பகுதியில் இன்று மின் தடை

திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் பகுதியில் மாதாந்திரப் பாரமரிப்புப் பணி காரணமாக, செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இதுகுறித்து மின்வாரிய உதவ... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயன்ற 40 கிலோ கஞ்சா பறிமுதல்

கீழக்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 40 கிலோ கஞ்சாவை சுங்கத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படவுள்ளதாக சுங்கத் துறையின... மேலும் பார்க்க