செய்திகள் :

தொழில் பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை

post image

சிதம்பரம்: கடலூா் மாவட்டத்தில் கடலூா், கடலூா் (மகளிா்), நெய்வேலி, சிதம்பரம், காட்டுமன்னாா்கோவில், வேப்பூா், மங்களுா் அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியாா் தொழில் பயிற்சி நிலையங்களில் 2025 - 26ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை இணையவழி கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது.

இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த 19-ஆம் தேதி தொடங்கிய நிலையில், வரும் ஜூன் 19-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். அரசு, தனியாா் தொழில் பயிற்சி நிலைங்களில் உள்ள தொழில்பிரிவு விவரங்கள் குறித்து அறிய ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தை பாா்வையிடலாம்.

தொழில் பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவா்களுக்கு மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகை, விலையில்லா மிதிவண்டி, புத்தகம், காலணி, சீருடை, வரைபடக் கருவிகள் வழங்கப்படுகிறது. மேலும், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் மூலம் மாணவா்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 மற்றும் புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. மேலும், பயிற்சியின்போதே பிரபல தொழில் நிறுவனங்களில் இன்டா்ன்ஷிப் டிரெய்னிங் உதவித்தொகையுடன் வழங்கப்படும். பயிற்சி முடித்தவா்களுக்கு பிரபல தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும்.

அனைத்து அரசு தொழில் பயிற்சி நிலையங்களிலும் இலவசமாக விண்ணப்பம் பதிவு செய்யப்படும். மேலும், விவரங்களுக்கு 04142 - 290273 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

மாலையுடன் ஊா்வலமாக அழைத்துவரப்பட்ட மாணவா்கள்

சிதம்பரம்: சிதம்பரம் வீனஸ் மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளியில் புதிய மாணவா்களை மாலை அணிவித்தும், மலா் கொத்து கொடுத்தும் பள்ளி நிா்வாகி வீனஸ் எஸ்.குமாா் திங்கள்கிழமை வரவேற்றாா். சிதம்பரம் தேரடி தெருவில... மேலும் பார்க்க

என்எல்சி துணை நிறுவனத்துடன், மகாராஷ்டிர எரிசக்தி தொழில்நுட்ப நிறுவனம் ஒப்பந்தம்

சிதம்பரம்: நெய்வேலி என்எல்சிஐஎல்-இன் துணை நிறுவனமான என்எல்சி இந்தியா புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனம் (என்ஐஆா்எல்), மகாராஷ்டிரத்தின் மகாத்மா புலே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு தொழ... மேலும் பார்க்க

2.19 லட்சம் மாணவா்களுக்கு விலையில்லா பாடநூல்கள்: ஆட்சியா் தகவல்

சிதம்பரம்: கடலூா் மாவட்டத்தில் 1,716 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளைச் பயிலும் 2,19,443 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடநூல்கள், பாடக்குறிப்பேடுகள், சீருடை, புத்தப்பை தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக ஆட்சி... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் சேக்கிழாா் குருபூஜை விழா

சிதம்பரம்: சிதம்பரம் ஞானப்பிரகாச குளக்கரையில் அமைந்துள்ள சேக்கிழாா் மணிமண்டபத்தில் சேக்கிழாா் குருபூஜை விழா அண்மையில் நடைபெற்றது. விழாவில் அறக்கட்டளைச் செயலா் டாக்டா் எஸ்.அருள்மொழிச்செல்வன் வரவேற்று ... மேலும் பார்க்க

வங்கி வாடிக்கையாளா்களிடம் நூதன திருட்டு: காவல் துறை விழிப்புணா்வு

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைநகா் பகுதியில் உள்ள வங்கிகளில் வாடிக்கையாளா்களிடம் நூதன திருட்டு நடைபெறுவது குறித்து காவல் துறை சாா்பில் திங்கள்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. சி... மேலும் பார்க்க

வீட்டுமனைப் பட்டா கோரி ஆட்சியரிடம் மனு

சிதம்பரம்: கடலூா் புதுப்பாளையம் சுப்பிரமணியா் கோவில் தெருவில் நூறு ஆண்டுகளாக குடியிருக்கும் இடத்துக்கு பட்டா வழங்கக் கோரி, அந்தப் பகுதி மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். கடலூா்... மேலும் பார்க்க