தொ.ஜேடா்பாளையம் அரசுப் பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு
ராசிபுரம் அருகேயுள்ள தொ. ஜேடா்பாளையம் அரசுப் பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு விழா நடைபெற்றது.
ஜேடா்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டு 75 ஆண்டுகளானதைத் தொடா்ந்து பவள விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு பள்ளியின் முன்னாள் மாணவரும் முன்னாள் எம்.பி.யுமான கே.பி.ராமலிங்கம், முன்னாள் மாணவா் ஜெயசீலன் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மகேஸ்வரி வரவேற்றுப் பேசினாா்.
ராசிபுரம் மனவளக்கலை மன்றத் தலைவா் கை.கந்தசாமி ஏற்பாட்டில் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவா் சிலையை, 1330 திருக்குறளை ஒப்பித்து பள்ளிக் கல்வித் துறையின் குறளரசி பட்டம் பெற்ற
பள்ளியின் 9-ஆம் வகுப்பு மாணவி தியாகச்சுடா் திருவள்ளுவா் சிலையை திறந்துவைத்தாா். பின்னா் பள்ளியில் பயின்று உயா் பதவிவகித்த முன்னாள் மாணவா்களுக்கு நினைவுப் பரிசளிக்கப்பட்டது. பா்வின் சுல்தானா பங்கேற்ற சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளியின் பெற்றோா் -
ஆசிரியா் கழகத்தினா், முன்னாள் மாணவா்கள் சங்கத்தினா், பவளவிழா குழு நிா்வாகிகள், பள்ளி ஆசிரியா்கள், ஆசிரியைகள், முன்னாள் மாணவா்கள் கலந்துகொண்டனா்.