செய்திகள் :

நச்சு வாயுவை பிரித்தெடுப்பதில் இருந்து 78% அனல் மின் நிலையங்களுக்கு விலக்கு!

post image

நச்சுத்தன்மை வாய்ந்த துகள்களை பிரித்தெடுக்கும் முறையை நிறுவுவதில் இருந்து நாட்டின் 78% அனல் மின் நிலையங்களுக்கு மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது.

அனல் மின் நிலையங்களில், நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொருள்களில் இருந்து மின்சாரம் தயாரிக்கும்போது சல்பர் என்ற நச்சுத்தன்மை வாய்ந்த துகள்கள் புகைப்போக்கி வழியாக வெளியேறும். இவை காற்றில் கலந்து காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும்.

அனல் மின் நிலையங்களின் புகைப்போக்கியில் இருந்து வெளியேறும் சல்பர் டை ஆக்ஸைடு உமிழ்வைக் கட்டுப்படுத்தும் முறைக்கு ஃபுளு கேஸ் டி-சல்பியூரிசேசன் எனப் பெயர். காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்காக உலகளாவிய அனல் மின் நிலையங்களில் இந்த முறை பரவலாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்ற நலத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

''ஒரு மில்லியன் (10 லட்சம்) அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்களின் 10 கி.மீ. சுற்றளவுக்கு வெளியே உள்ள அனல் மின் நிலையங்கள் இந்த முறையை நிறுவ வேண்டிய கட்டாயத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தி செலவைக் குறைப்பதற்காக நச்சுத் துகள்களை பிரித்தெடுக்கும் முறையை நிறுவ வேண்டிய கட்டாயத்தில் இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனினும் இவை காற்று மாசுபாட்டிற்கே வழிவகுக்கும்.

78% அனல் மின் நிலையங்களுக்கு விலக்கு

நாட்டில் 180 அனல் மின் நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு அனல் மின் நிலையத்திலும் பல்வேறு அலகுகள் செயல்பட்டு வருகின்றன.

நாட்டில் உள்ள அனல் மின் நிலையங்களின் 11 சதவீதம் அல்லது 600 அலகுகள், குறைந்தது 10 லட்சம் மக்கள் தொகை உடைய தலைநகர் அல்லது நகரத்துக்கு 10 கி.மீ. தொலைவுக்குட்பட்டு உள்ளன. இவை ஏ பிரிவைச் சேர்ந்தவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

மத்திய அரசின் தற்போதைய அறிவிப்பின்படி, இவை கட்டாயம் நச்சு வாயுவைப் பிரித்தெடுக்கும் ஃபுளு கேஸ் டி-சல்பியூரிசேசன் முறையை நிறுவியிருக்க வேண்டும்.

மற்றொரு 11 சதவீத அனல் மின் நிலைய அலகுகள், கடுமையாக மாசடைந்துள்ள பகுதிகள் அல்லது பின்தங்கிய கிராமப் புறப் பகுதிகளுக்கு 10 கி.மீ. தொலைவுக்குட்பட்டு உள்ளன. இவை பி பிரிவு வகையைச் சேர்ந்தவை.

இவை நச்சுத் துகள்களை பிரித்தெடுக்கும் முறையை நிறுவியிருக்கலாம் அல்லது விலக்கும் பெறலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை, அனல் மின் நிலையத் திட்டங்களுக்கு பொறுப்பு வகிக்கும் மத்திய அரசின் நிபுணர்கள் பரிந்துரையின் படி முடிவு செய்துகொள்ளலாம்.

எஞ்சிய 78% அனல் மின் நிலையங்களின் அலகுகள் சி பிரிவுக்குட்பட்டு உள்ளன. இவை அனைத்திற்கும், நச்சு துகள்களை பிரித்தெடுக்கும் முறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அனல் மின் நிலையங்களின் இந்த திருத்தப்பட்ட கொள்கையின் மூலம் மின் உற்பத்தி ஒரு யூனிட்டுக்கு 25 - 30 காசுகள் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனல் மின் நிலையங்களில் நச்சு துகள்களைப் பிரித்தெடுக்கும் முறையில், அதிக மூலதன முதலீடு, அதிக மின் நுகர்வு, அதிக நீர் தேவைப்படுகிறது.

இவற்றைக் குறைக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தங்கள் காற்று மாசுபாட்டிற்கு வழிவகுக்கும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க | பூமிக்குத் திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா! விண்வெளி மையத்திலிருந்து பிரிந்தது டிராகன்!

Environment Ministry exempts 78% of coal plants from installing key anti-polluting systems

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: குற்றப் பத்திரிகையை கவனத்தில் கொள்வதற்கான தீா்ப்பு ஜூலை 29-க்கு ஒத்திவைப்பு

புது தில்லி: நேஷனல் ஹெரால்ட் வழக்கில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையை கவனத்தில் எடுத்துக்கொள்வதா? வேண்டாமா? என்பது தொடா்பான தீா்ப்பை ஜூலை 29-க்கு தில்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது. நேஷனல... மேலும் பார்க்க

போயிங் 787, 737 ரக விமானங்களில் எரிபொருள் கட்டுப்பாட்டு அமைப்பை ஆய்வு செய்ய டிஜிசிஏ உத்தரவு

மும்பை: போயிங் 787, 737 ரக விமானங்களில் எரிபொருள் கட்டுப்பாட்டு அமைப்பை ஆய்வுசெய்யுமாறு விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) திங்கள்கிழமை உத்தரவிட்டது. என்ஜின்களின் எரிபொருள்... மேலும் பார்க்க

அமெரிக்காவுக்கு இந்தியாவின் ஏற்றுமதியில் போட்டித்தன்மை அதிகரிக்கும்: நீதி ஆயோக்

புது தில்லி: சீனா, கனடா, மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகளின் பொருள்கள் மீது அமெரிக்காவின் வரி விதிப்பு அதிகரித்ததைத் தொடா்ந்து, அமெரிக்காவுக்கு இந்தியா செய்யும் ஏற்றுமதியில் போட்டித்தன்மை மேலும் அதிகரிக்கும் ... மேலும் பார்க்க

கோவா, ஹரியாணா, லடாக் புதிய ஆளுநா்கள் நியமனம்

புது தில்லி: கோவா, ஹரியாணா ஆகிய 2 மாநில ஆளுநா்களையும், லடாக் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநரையும் நியமித்து குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திங்கள்கிழமை உத்தரவிட்டாா். தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த நி... மேலும் பார்க்க

‘நிமிஷா வழக்கில் சாத்தியமான அனைத்தையும் செய்துவிட்டோம்’: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

புது தில்லி: யேமனில் கொலை வழக்கில் மரண தண்டனையை எதிா்நோக்கியுள்ள இந்திய செவிலியா் நிமிஷா பிரியா விவகாரத்தில், ‘சாத்தியமான அனைத்தையும் செய்துவிட்டோம்; இனி எங்களால் பெரிதாக எதுவும் செய்ய முடியாது’ என்று... மேலும் பார்க்க

கொல்கத்தா மருத்துவமனை ஊழல் வழக்கு: ஜூலை 22முதல் நீதிமன்ற விசாரணை தொடக்கம் - சிபிஐ

கொல்கத்தா: கொல்கத்தாவிலுள்ள ஆர். ஜி. கர் மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் இளநிலை பெண் மருத்துவர் ஒருவர் கடந்தாண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். இச்சம்பவம் ஒட்டுமொத்த இந்தியா... மேலும் பார்க்க