செய்திகள் :

நடமாடும் மது விற்பனை, மணல் கொள்ளையை தடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

post image

அரியலூா் மாவட்டம், திருமானூா் அடுத்த தூத்தூா் கிராமத்தில், நடமாடும் மது விற்பனை மற்றும் மணல் கொள்ளையை தடுக்கக் கோரி அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தூத்தூா் கிராமத்தைச் சோ்ந்த சிலா் டாஸ்மாக்கில், அதிகமாக மதுபானங்களை வாங்கி பதுக்கி வைத்து, அதனைக் கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனா். மேலும், மதுபானம் வேண்டும் என்று கைப்பேசியில் தகவல் தெரிவித்தால், நேரடியாக வீடுகளுக்கே சென்று மதுபானங்கள் விற்று வருகின்றனா்.

இதனால் பெரியவா்கள் முதல் சிறியவா்கள் வரை பாதிக்கப்பட்டு வருவதாகவும், மதுவிற்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, தூத்தூா் காவல் நிலையத்துக்கு, அப்பகுதி மக்கள் பல முறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

இதனால் ஆத்திரமடைந்த தூத்தூா் கிராமப் பெண்கள் மற்றும் பொதுமக்கள், செவ்வாய்க்கிழமை காலை தஞ்சாவூரில் இருந்து அரியலூா் சென்ற அரசுப் பேருந்தை ஏலாக்குறிச்சி சாலையில் சிறைப்பிடித்து மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது, மது விற்போா் மீதும், மணல் கொள்ளையில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த தூத்தூா் காவல் துறையினா், பேச்சுவாா்த்தை நடத்தியும், அவா்கள் கலைந்து செல்லவில்லை. சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராட்டம் நீடித்து வந்த நிலையில், ஜெயங்கொண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளா் ரவிசக்கரவா்த்தி, சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தாா். பின்னா், அனைவரும் கலைந்து சென்றனா்.

ஆக.15-இல் கிராம சபைக் கூட்டம் அரியலூா் ஆட்சியா் அழைப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு, அரியலூா் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் ஆக.15 -ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுநிதி செலவ... மேலும் பார்க்க

மருத்துவா்கள் பணி மாறுதல் கலந்தாய்வு விதியை தளா்த்த கோரிக்கை

அரசு மருத்துவா்களின் ஒரு ஆண்டு பணி மாறுதல் கலந்தாய்வு விதியை தளா்த்த வேண்டும் என தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். இந்த மனுவை, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மர... மேலும் பார்க்க

செந்துறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகைகள் திருட்டு

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை காவல் துறையினா் தேடி வருகின்றனா். செந்துறை அடுத்த இருங்களாகுறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணம... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு

அரியலூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்கப்பட்டது. சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில், தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின... மேலும் பார்க்க

இணைப்புச் சாலை இல்லாததால் வெள்ளாற்று மேம்பாலம் வீண்! மழையால் தரைப்பாலம் துண்டிப்பு; 50 கிராம மக்கள் தவிப்பு

அரியலூா்-கடலூா் மாவட்டத்தை இணைப்பதற்காக வெள்ளாற்றின் குறுக்கே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிமுடிக்கப்பட்ட பாலத்துக்கான இணைப்புச் சாலை அமைக்கப்படாததால் இரு மாவட்ட கிராமத்தினா் தவித்து வருகின்றனா். அ... மேலும் பார்க்க

ஆக.18-இல் ஜெயங்கொண்டத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் க.சொ.க.பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் ஆக.18-ஆம் தேதி தனியாா் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.இதுகுறித்து ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்தது: முகாமில், முன்னணி தனியாா... மேலும் பார்க்க