செய்திகள் :

நடிகை பாலியல் குற்றச்சாட்டு எதிரொலி; காங்கிரஸிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாலக்காடு எம்.எல்.ஏ!

post image

கேரள மாநிலம், பாலக்காடு சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் ராகுல் மாங்கூட்டத்தில். இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த அவர் மீது நடிகை ரினி ஆன் ஜார்ஜ், ஒரு இளம்பெண், திருநங்கை என வரிசையாக பாலியல் தொல்லை புகார் கூறினர். இதையடுத்து இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் பதவியை கடந்த 21-ம் தேதி ராஜினாமா செய்தார். இதற்கிடையே அவர் கர்ப்பமான ஒரு பெண்ணின் கருவை கலைக்க வலியுறுத்தும் உரையாடல் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை கிளப்பியிருந்தது. ராகுல் மாங்கூட்டத்திலுக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து ராகுல் மாங்கூட்டத்திலுக்கு எதிராக காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ உமா தாமஸ் குரல் கொடுத்தார். உமா தாமஸ் கூறுகையில், "ராகுல் மாங்கூட்டத்தில் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். பொய்யான குற்றச்சாட்டு என்றால் மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருக்கலாம். எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய காங்கிரஸ் தலைமை வலியுறுத்த வேண்டும். காங்கிரஸ் கட்சி எல்லா காலத்திலும் பெண்களுக்கு ஆதரவாகத்தான் இருந்துவருகிறது. ராகுல் மாங்கூட்டத்தில் விஷயத்தில் காங்கிரஸ் தொடக்கத்தில் இருந்தே நல்லபடியாக செயல்பட்டு வருகிறது" என்றார்.

உமா தாமஸ் எம்.எல்.ஏ

ராகுல் மாங்கூட்டத்திலுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களும், விமர்சனக்களும் எழுந்த நிலையில் அவர் காங்கிரஸ் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஆறு மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து கட்சி விசாரணை நடத்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அவர் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும்படி கட்சி வலியுறுத்தவில்லை.

காங்கிரஸ் எம்.எல்.ஏ ராகுல் மாங்கூட்டத்தில்

காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடந்து ராகுல் மாங்கூட்டத்தில் சுயேச்சை எம்.எல்.ஏ கணக்கில் அடங்குவார். எனவே அவருக்கு சட்டசபையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள் வரிசையில் இடம் ஒதுக்க வாய்ப்பு இல்லை. அதே சமயம் சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும்போது ராகுல் மாங்கூட்டத்தில் விடுப்பு எடுக்கும் திட்டம் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

``கூட்டத்துக்கு வந்தீங்களா, சாப்பிட வந்தீங்களா?'' - முன்னாள் அமைச்சரின் எரிச்சல் பேச்சு

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஒன்றிய அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஏஜெண்டுகள் ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கலந்து... மேலும் பார்க்க

``காதல் திருமணம் - பாஜக அலுவலகத்துக்கும் வரலாம்; பெற்றோரிடம், இன்ஸ்பெக்டரிடம் சொல்வோம்'' - அண்ணாமலை

ஆணவக்கொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற தமிழக அரசை வலியுறுத்தி நடந்த கருத்தரங்கில் பேசிய மார்கிஸ்ட் கம்பூனிஸ்ட் கட்சியின் தலைவர் பெ.சண்முகம், கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்தி வை... மேலும் பார்க்க

ஐயப்பன் மாநாடு, ஸ்டாலினுக்கு அழைப்பு: "இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாகும்..." - தமிழிசை காட்டம்!

கேரளாவில் நடைபெறும் சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அழைத்தது, பேசுபொருளாகியிருக்கிறது. "மு.க.ஸ்டாலினும் அவரது மகனும் இந்து நம்பிக்கைகளை அவதூறு செய்தனர். இப்போது தே... மேலும் பார்க்க

தமிழிசை: "ஆணவக்கொலைகளைத் தடுக்க துப்பில்லை; ராமன் காரணமாம்..." - வன்னியரசுக்கு கண்டனம்!

நேற்றைய தினம் (ஆகஸ்ட் 24) சென்னை கவிக்கோ மன்றத்தில் தமிழ்நாடு அரசு ஆணவக்கொலைகளைத் தடுத்து நிறுத்த தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி நடந்த கருத்தரங்கில் விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு ஆற்றிய உரை பேச... மேலும் பார்க்க

'நக்சல்களுக்கு உதவியவர்' - சுதர்ஷன் ரெட்டியை விமர்சனம் செய்த அமித் ஷா; கிளம்பிய எதிர்ப்பு!

தமிழ்நாட்டை இன்னும் பாஜக-வால் பிடிக்க முடியவில்லை என்பது அந்தக் கட்சியினருக்கு பெரும் கவலை. அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில் தான், திடீரென்று கடந்த ஜூலை மாதம் 21... மேலும் பார்க்க

Iran: ``அடிபணிய வைக்க முயற்சிக்கிறது... பெரிய அவமானம்" - அயதுல்லா கமேனி சொல்வதென்ன?

ஈரான் அணுசக்தி விவகாரம்2015-ல், ஈரான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் (பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி) அமெரிக்கா இணைந்து ஓர் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன் மூலம் ஈரான் தனது அணுசக்தி செறிவூட்டலை கு... மேலும் பார்க்க