செய்திகள் :

`நடிக்க வாய்ப்பு; திருமணம்’ - நடிகர் அஜாஸ் கான் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்த இளம்பெண்

post image

பாலிவுட் நடிகர் அஜாஸ் கான் நடிப்பில் சமீபத்தில் ஒ.டி.டி.யில் வெளியான `ஹவுஸ் அரஸ்ட்’ வெப்சீரியஸ் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஹவுஸ் அரஸ்ட் வெப் சீரியஸ் Ullu App என்ற செயலில் வெளியானது. அதில் பெண்கள் உள்ளாடைகளை கழற்றுவது, தாம்பத்திய முறைகள் தொடர்பான காட்சிகள் இடம் பெற்று இருந்தன.

`ஹவுஸ் அரஸ்ட்’ சர்ச்சை

இது தொடர்பாக புகார் எழுந்ததை தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பஜ்ரங் தளத்தை சேர்ந்த கெளதம் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் நடிகர் ஆஜாஸ் கான், தயாரிப்பாளர் ராஜ்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் அஜாஸ் கான் மீது நடிகை ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்துள்ளார்.

மும்பை சார்க்கோப் போலீஸ் நிலையத்தில் இது தொடர்பாக அவர் கொடுத்துள்ள புகாரில், `நடிகர் அஜாஸ் கான் தனக்கு ஹவுஸ் அரஸ்ட் உட்பட வெப் சீரியஸ்களில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக கூறியதாகவும், படப்பிடிப்பின் போது தன்னை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்தார்’ என்றும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மார்ச் 25-ம் தேதி அஜாஸ் கான் தன்னை அவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு தன்னை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாகவும், அடுத்த சில நாட்கள் கழித்து மீண்டும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், எங்களது மதம் 4 திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கிறது என்றும், அனைத்தையும் தான் பார்த்துக்கொள்வதாகவும் தெரிவித்தார் என்றும் நடிகை தனது புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.

அப்புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஒரே நேரத்தில் இரண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதால் அஜாஸ் கானுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

திருவிழாவில் நடனமாடுவதில் தகராறு; சிறுவன் குத்திக் கொலை... கொலையாளிகளைத் தேடும் போலீஸ்!

கரூர் மாவட்டம், குளித்தலை கொல்லம் பட்டறை தெருவைச் சேர்ந்த 17 வயதான சிறுவன் ஒருவர், பிளஸ் டு தேர்வு எழுதிவிட்டு அதன் முடிவிற்காக காத்துக் கொண்டிருந்தார். இந்நிலையில், நேற்று இரவு குளித்தலை மகா மாரியம்ம... மேலும் பார்க்க

`சென்னையில் கொள்ளை… தூத்துக்குடியில் கைது!' - வைர நகை கொள்ளை கும்பல் சிக்கியது எப்படி?

சென்னை, அண்ணாநகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர். வைர வியாபாரியான இவர், வைரங்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வருகிறார். கடந்த 3-ம் தேதி சந்திரசேகரின் வீட்டிற்கு ராகுல் என்பவரை அழைத்து வந்த அருள்ராஜ், ரூ.... மேலும் பார்க்க

Ooty: காட்டு மாட்டை சுட்டுக்கொன்ற கேரள கடத்தல் கும்பல்.. நீலகிரியில் தொடரும் வனவிலங்கு வேட்டை

மரக்கடத்தல் முதல் வனவிலங்கு வேட்டை வரை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வனக்குற்றங்கள் அதிகரித்து வரும் நீலகிரியில் கேரள வேட்டை கும்பலின் அத்துமீறல் தொடர்கதையாகி வருகிறது. அதிலும் குறிப்பாக காட்டு மாடு ... மேலும் பார்க்க

`தீவிரவாதிகளுக்கு அடைக்கலம்' ஒப்புக்கொண்ட காஷ்மீர் இளைஞர் தப்பிக்க ஆற்றில் குதித்து மரணம்

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 23 வயது இளைஞர் இம்தியாஸ் அகமது மக்ரே, தீவிரவாதிகளுக்கு உணவு மற்றும் அடைக்கலம் வழங்கி வந்ததாக கூறப்படுகிறது.இது குறித்து தகவல் அறிந்த பாதுகாப்புப் படையினர், கடந்த சனிக்கிழமை மக... மேலும் பார்க்க

``பழைய 5 ரூபாய் நோட்டுக்கு ஒரு கோடி..'' ஆசைகாட்டி துப்புரவு தொழிலாளியிடம் ரூ.18 லட்சம் மோசடி

மோசடிகள் புதிது புதிதாக முளைத்துக்கொண்டேதான் இருக்கிறது. மும்பையில் `பழைய 5 ரூபாயை கொடுத்தால் ஒரு கோடி கொடுப்போம்' என்று கூறி மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இன்றைக்கு சமூக வலைத... மேலும் பார்க்க

மும்பை: `கார் சதுரங்க வேட்டை' 1375 பேரிடம் ரூ.20 கோடி மோசடி செய்த கும்பல்.. 246 வாகனங்கள் மீட்பு

மும்பையில் நடந்த வாடகை கார் திட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் மோசடி செய்யப்பட்டுள்ளனர். மும்பை மீராரோடு பகுதியைச் சேர்ந்த பாவேஷ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இது தொடர்பாக போலீஸார் விசாரித்து மிகப்... மேலும் பார்க்க