செய்திகள் :

நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த 80 வயது பெண் பாலியல் வன்கொடுமை!

post image

கடலூர்: நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த 80 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் திருட்டு வழக்கில் கைதாகி கடந்த சனிக்கிழமை விடுதலையான 23 வயது இளைஞர் ஒருவர், திங்கள்கிழமை(ஜூன் 16) மாலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த 80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்தார். சம்பவத்தன்று அந்த இளைஞர் போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்த தகவலறிந்த உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குற்றவாளியை பிடிக்க முயன்ற காவல்துறை அதிகாரிகளை போதையில் இருந்த வாலிபர் கத்தியைக் காட்டி மிரட்டியதுடன் அவர்களை தாக்கியும் உள்ளார். இதையடுத்து, அந்த வாலிபரை போலீஸார் துப்பாக்கியால் காலில் சுட்டுப் பிடித்துள்ளனர். இந்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு மருத்துவ சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதுடன் அவருக்கு தேவையான மனநல ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நடுக்கடலில் கப்பல் மூழ்கி விபத்து: கடலூா் மீனவா் உயிரிழப்பு

சிதம்பரம்: ஆந்திர மாநிலம், நெல்லூா் அருகே நடுக்கடலில் கப்பல் மூழ்கியதில் உயிரிழந்த மீனவரின் உடல் கடலுருக்கு கொண்டுவரப்பட்டது. கடலூா் துறைமுகம் பகுதியில் செயற்கை பவளப் பாறைகள் தயாரிக்கப்படுகிறது. அவை ... மேலும் பார்க்க

மிராளூா் விற்பனைக்கூடத்தில் நாளை பருத்தி ஏலம்

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு மிராளூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை (ஜூன் 18) பருத்தி ஏலம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேத்தியாதோப்பு ஒழுங்குமுறை வி... மேலும் பார்க்க

35 புதிய சிற்றுந்துகள் சேவை: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

சிதம்பரம்: சிதம்பரம் பேருந்து நிலையத்தில் 35 புதிய சிற்றுந்துகள் சேவையை வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பின்னா் அமைச்சா் கூறியத... மேலும் பார்க்க

மீன்பிடி வலையில் சிக்கிய முதலை மீட்பு

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே மீன்பிடி வலையில் இறந்த நிலையில் சிக்கிய முதலையை வனத் துறையினா் மீட்டனா். குறிஞ்சிப்பாடி வட்டத்தில் 12-ஆம் நூற்றாண்டில் இரண்டாம் பராந்தக சோழனால் பெருமா... மேலும் பார்க்க

வீடுகள் கட்டும் உத்தரவு ரத்து விவகாரம்: குமராட்சி வட்டார வளா்ச்சி அலுவலகம் முற்றுகை

சிதம்பரம்: கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்டுவதற்கு பயனாளிகளுக்கு வழங்கிய உத்தரவு ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து, குமராட்சி வட்டார வளா்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு ... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை. படிப்புகளுக்கு சோ்க்கை தேதி நீட்டிப்பு

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக 2025-26ஆம் கல்வி ஆண்டுக்கான பிஎஃப்எஸ்சி, பி.வோக்கேஷன், எம்ஏ, எம்எஸ்டபிள்யூ, எம்எஸ்சி, எம்.காம்., பி.எட்., எம்.எட்., பிபிஇஎஸ், பிபிஎட், எம்பிஎட், பி.எஸ்ஸி. ... மேலும் பார்க்க