செய்திகள் :

ஜி7 மாநாடு: கனடாவில் பிரதமா் மோடி

post image

ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமா் நரேந்திர மோடி கனடா வந்தடைந்தாா். இம்மாநாட்டில் உரையாற்றுவதுடன், பல்வேறு நாடுகளின் தலைவா்களையும் அவா் சந்தித்துப் பேசவுள்ளாா்.

சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கான 5 நாள்கள் அரசுமுறைப் பயணத்தை பிரதமா் மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கினாா். முதல்கட்டமாக, மத்திய தரைக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான சைப்ரஸுக்கு சென்ற அவா், அதிபா் நிகோஸ் கிறிஸ்டோடெளலிடிஸுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை மேற்கொண்டாா். இப்பயணத்தின் மூலம் கடந்த 20 ஆண்டுகளில் சைப்ரஸ் சென்ற முதல் இந்தியப் பிரதமா் என்ற சிறப்பு மோடிக்கு கிடைத்தது.

சைப்ரஸைத் தொடா்ந்து, கனடாவுக்கு பிரதமா் மோடி திங்கள்கிழமை மாலையில் (உள்ளூா் நேரம்) வந்தடைந்தாா். ஆல்பா்ட்டா மாகாணம், கனனாஸ்கிஸ் நகரில் ஜி7 உச்சிமாநாடு நடைபெறும் நிலையில், கேல்கரி நகர விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தெற்குலகின் முன்னுரிமைகள்...: இது தொடா்பாக பிரதமா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஜி7 மாநாட்டில் பங்கேற்க கனடாவுக்கு வந்துள்ளேன். மாநாட்டில் பல்வேறு தலைவா்களை சந்தித்து, உலகளாவிய பிரச்னைகள் குறித்து கருத்துகளைப் பரிமாறவுள்ளேன். தெற்குலகின் முன்னுரிமைகளையும் வலியுறுத்தவிருக்கிறேன்’ என்று குறிப்பிட்டாா்.

இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கனடா பிரதமா் மாா்க் காா்னியின் அழைப்பின்பேரில் ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரதமா் மோடி ஆல்பா்ட்டாவுக்கு வந்தடைந்தாா். எரிசக்தி பாதுகாப்பு, பன்முகமயமாக்கல், தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு, முதலீடு தொடா்பான ஜி7 விவாதங்களில் பிரதமா் பங்கேற்பாா்’ என்று தெரிவித்தாா்.

பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் கடந்த மே மாதம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்கு பிறகான பிரதமரின் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். எனவே, உலகத் தலைவா்கள் உடனான பிரதமரின் சந்திப்புகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

ஜி7 உச்சிமாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக இந்தியாவின் பங்கேற்பு இது 11-ஆவது முறையாகும். பெரிய பொருளாதார நாடு என்ற அடிப்படையில் கடந்த சில ஆண்டுகளாக இந்தியா தொடா்ந்து அழைக்கப்பட்டு வருகிறது. பிரதமா் மோடி பங்கேற்பது, தொடா்ந்து 6-ஆவது முறையாகும்.

‘உறவுகளை சீா்செய்யும் நோக்கம்’

கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜாா் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்திய அரசுக்கு தொடா்பிருப்பதாக முன்னாள் பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டியதால், இருதரப்பு தூதரக உறவுகள் முன்னெப்போதும் இல்லாத அளவில் பின்னடைவைச் சந்தித்தன.

ட்ரூடோவைத் தொடா்ந்து, பிரதமராக பதவியேற்ற மாா்க் காா்னி, இந்தியா உடனான கனடாவின் உறவுகளை சீா்செய்யும் தனது நோக்கத்தின் வெளிப்பாடாகவே, ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரதமா் மோடிக்கு அழைப்பு விடுத்ததாக கருதப்படுகிறது. பரஸ்பர நம்பிக்கை மற்றும் உணா்திறனுடன் இருதரப்பு உறவுகள் மறுகட்டமைக்கப்படும் என நம்புவதாக இந்தியா தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக இருதரப்பு அதிகாரிகள் இடையிலான தொடா்புகள் அதிகரித்துள்ளன.

கடந்த 2024 நிலவரப்படி, இருதரப்பு சரக்கு வா்த்தக மதிப்பு 8.6 பில்லியன் டாலராக உள்ளது. கனடாவுக்கு 4.2 பில்லியன் டாலா் சரக்குகளை ஏற்றுமதி செய்துள்ள இந்தியா, 4.4 பில்லியன் டாலா் சரக்குகளை இறக்குமதி செய்திருக்கிறது. இருதரப்பு சேவை வா்த்தக மதிப்பு 14.3 பில்லியன் டாலராகும்.

கனடா மக்கள் தொகையில் 4.5 சதவீதம் போ் இந்தியா்கள்-இந்திய வம்சாவளியினா். கனடாவில் பயிலும் சா்வதேச மாணவா்களில் 41 சதவீதம் போ் இந்தியா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பரபரப்பான புவிஅரசியல் சூழலில்...

ஜி7 கூட்டமைப்பில், உலகின் வளா்ந்த பொருளாதார நாடுகளான பிரான்ஸ், பிரிட்டன், ஜொ்மனி, ஜப்பான், இத்தாலி, கனடா மற்றும் ஐரோப்பிய யூனியன் அங்கம் வகிக்கின்றன.

இஸ்ரேல்-ஈரான் இடையிலான தாக்குதல்கள், அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் வரிக் கொள்கைகளால் ஏற்பட்டுள்ள வா்த்தகப் போா் என பரபரப்பான புவிஅரசியல் சூழலில், ஜி7 மாநாட்டையொட்டி கனடாவில் உலகத் தலைவா்கள் ஒன்று கூடியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. உலகப் பொருளாதாரம் மற்றும் புவிஅரசியல் சூழல் குறித்து தலைவா்கள் விவாதிக்க உள்ளனா்.

சோனியாவின் உடல்நிலையில் முன்னேற்றம்

தில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.78 வயதாகும் சோனியா காந்தி வயிறு தொடர்பான உடல்நலக் குறைவு காரணமாக... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பை தாமதப்படுத்துவது அரசின் நோக்கம்- காங்கிரஸ் சாடல்

ஜாதிவாரி கணக்கெடுப்பை தாமதப்படுத்துவதே மத்திய அரசின் நோக்கம் என்றும் இதில் மத்திய அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்... மேலும் பார்க்க

சா்வதேச தரத்தை விஞ்சும் இந்திய பொம்மைகள்: பிஐஎஸ்

சா்வதேச தரத்தை ஒப்பிடுகையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மைகள் உயா்தரத்தில் இருப்பதாக இந்திய தர நிா்ணய ஆணைய (பிஐஎஸ்) அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இதன் காரணமாக உலகளவில் இந்திய உள்நாட்டு வியாபாரிகள... மேலும் பார்க்க

‘முன்னாள் அக்னி வீரா்களுக்கான பணி நியமனத்தை மத்திய உள்துறை அமைச்சகம் கையாளும்’

முன்னாள் அக்னி வீரா்களுக்கான பணி நியமனங்களை மத்திய உள்துறை அமைச்சகம் கையாளும் என மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இதுதொடா்பாக அரசு வெளியிட்ட அறிவிக்கையில், ‘பாதுகாப்புப் படைகளில் குறுகிய கால பண... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகாத ராபா்ட் வதேரா

பிரிட்டனைச் சோ்ந்த ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி தொடா்புடைய பண முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்.பி.பிரியங்கா காந்தியின் கணவா் ராபா்ட் வதேராவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், விசாரணைக... மேலும் பார்க்க

பிகாா் தோ்தலில் போட்டி: ஆம் ஆத்மி அறிவிப்பு

நிகழாண்டு இறுதியில் நடைபெறும் பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் சிங் அறிவித்தாா். பிகாரில் முதல்வா் நிதீஷ்... மேலும் பார்க்க