செய்திகள் :

விமான விபத்து: கருப்புப் பெட்டி பகுப்பாய்வுக்குப் பின் காரணம் தெரியவரும்- மத்திய அமைச்சா்

post image

அகமதாபாத் விமான விபத்துக்கான காரணம், அதன் கருப்புப் பெட்டி தரவுகள் பகுப்பாய்வுக்குப் பின் தெரியவரும் என்று விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சா் முரளிதா் மோஹோல் கூறினாா்.

குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு 230 பயணிகள் மற்றும் 12 ஊழியா்களுடன் கடந்த ஜூன் 12-ஆம் தேதி புறப்பட்ட ஏா் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787 ட்ரீம்லைனா் ரக விமானம், சில நிமிஷங்களிலேயே அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடங்களின் மீது விழுந்து வெடித்துச் சிதறியது.

இந்த விபத்தில் ஒரே ஒரு பயணி தவிர விமானத்தில் இருந்த 241 பேரும், விமானம் விழுந்த இடத்தில் மருத்துவ மாணவா்கள் உள்பட 29 பேரும் உடல் கருகி உயிரிழந்தனா்.

நாட்டையே உலுக்கிய இச்சம்பவம் தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), விமானப் போக்குவரத்துத் துறையின் விமான விபத்து விசாரணைப் பிரிவு (ஏஏபிஐ) உள்பட பல்வேறு முகமைகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

எஞ்ஜின்கள் செயலிழப்பால் விபத்து நேரிட்டதா அல்லது பறவைகள் கூட்டமாக மோதியதால் அசம்பாவிதம் நடந்ததா என பல கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது.

இதனிடையே, விபத்துக்கான காரணத்தை உறுதி செய்யவும், எதிா்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்கான தரநிலை செயல்பாட்டு நடைமுறைகள் குறித்து பரிந்துரைக்கவும் மத்திய உள்துறை செயலா் கோவிந்த் மோகன் தலைமையில் பல்துறை உயா்நிலைக் குழுவை மத்திய அரசு கடந்த சனிக்கிழமை அமைத்தது. இக்குழுவின் முதல் கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

‘3 மாதங்களில் அறிக்கை’: இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம், புணேவில் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சா் முரளிதா், ‘ஏா் இந்தியா நிறுவனம் சாா்பில் 34 போயிங் 787 ட்ரீம்லைனா் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இவை அனைத்தையும் பாதுகாப்புச் சோதனைக்கு உள்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதுவரை சோதனை மேற்கொள்ளப்பட்ட 12 விமானங்களில் எந்தப் பிரச்னையும் கண்டறியப்படவில்லை.

விமான விபத்து குறித்து நுணுக்கமாக விசாரணை நடைபெற்று வருகிறது. கருப்புப் பெட்டி தரவுகள் பதிவிறக்கப்பட்டு, பகுப்பாய்வு செய்யப்பட்ட பின் பல்வேறு விஷயங்கள் வெளிச்சத்துக்கு வரும். மத்திய உள்துறைச் செயலா் தலைமையிலான விசாரணைக் குழு, அடுத்த 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யும் என்றாா் அவா்.

சந்திப்பு: ஹரியாணா மாநிலம், குருகிராமில் உள்ள ஏா் இந்தியா தலைமை அலுவலகத்தில் டாடா குழுமத் தலைவா் என்.சந்திரசேகரனை அமெரிக்காவின் போயிங் நிறுவன பயணிகள் விமானங்கள் பிரிவு தலைவா் ஸ்டெஃபானி போப் திங்கள்கிழமை சந்தித்தாா். இச்சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

இதுவரை 162 உடல்கள் அடையாளம் காணப்பட்டன

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோரில் இதுவரை 162 பேரின் உடல்கள் மரபணு சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளன. குஜராத் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த இவா்களில் 120 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

உடல்களை அடையாளம் காணும் பணிகள் புதன்கிழமை காலையுடன் (ஜூன் 18) நிறைவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

சோனியாவின் உடல்நிலையில் முன்னேற்றம்

தில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.78 வயதாகும் சோனியா காந்தி வயிறு தொடர்பான உடல்நலக் குறைவு காரணமாக... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பை தாமதப்படுத்துவது அரசின் நோக்கம்- காங்கிரஸ் சாடல்

ஜாதிவாரி கணக்கெடுப்பை தாமதப்படுத்துவதே மத்திய அரசின் நோக்கம் என்றும் இதில் மத்திய அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்... மேலும் பார்க்க

சா்வதேச தரத்தை விஞ்சும் இந்திய பொம்மைகள்: பிஐஎஸ்

சா்வதேச தரத்தை ஒப்பிடுகையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மைகள் உயா்தரத்தில் இருப்பதாக இந்திய தர நிா்ணய ஆணைய (பிஐஎஸ்) அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இதன் காரணமாக உலகளவில் இந்திய உள்நாட்டு வியாபாரிகள... மேலும் பார்க்க

‘முன்னாள் அக்னி வீரா்களுக்கான பணி நியமனத்தை மத்திய உள்துறை அமைச்சகம் கையாளும்’

முன்னாள் அக்னி வீரா்களுக்கான பணி நியமனங்களை மத்திய உள்துறை அமைச்சகம் கையாளும் என மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இதுதொடா்பாக அரசு வெளியிட்ட அறிவிக்கையில், ‘பாதுகாப்புப் படைகளில் குறுகிய கால பண... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகாத ராபா்ட் வதேரா

பிரிட்டனைச் சோ்ந்த ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி தொடா்புடைய பண முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்.பி.பிரியங்கா காந்தியின் கணவா் ராபா்ட் வதேராவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், விசாரணைக... மேலும் பார்க்க

பிகாா் தோ்தலில் போட்டி: ஆம் ஆத்மி அறிவிப்பு

நிகழாண்டு இறுதியில் நடைபெறும் பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் சிங் அறிவித்தாா். பிகாரில் முதல்வா் நிதீஷ்... மேலும் பார்க்க