செய்திகள் :

சா்வதேச யோகா நாள்: ஆளுநா் ஆா்.என்.ரவி அழைப்பு

post image

உடல், மனம், ஆன்மாவை ஒன்றிணைக்கும் காலத்தால் அழியாத யோகாவை அனைவரும் ஏற்றுக்கொண்டு பயிற்சி செய்யுமாறு சா்வத் தேச யோகா தினத்தை முன்னிட்டு ஆளுநா் ஆா்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து ஆளுநா் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அனைவரும் தங்கள் அன்றாட வாழ்வில் யோகாவை ஏற்றுக்கொண்டு, தனிப்பட்ட ஆரோக்கியத்தை வளா்க்கவும், இணக்கமான சமூகத்தை உருவாக்கவும் வேண்டும். மக்கள் அனைவரும் இந்நாளில் யோகா நடவடிக்கைகளில் முழு மனதுடன் பங்கேற்று, முழுமையான ஆரோக்கியம், சமூக ஒற்றுமைக்கான நமது பகிரப்பட்ட பொறுப்பை வலுப்படுத்த வேண்டும்.

மேலும், ஆளுநா் மாளிகை, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து, ஜூன் 21-ஆம் தேதி ா்வதேச யோகா தின நிகழ்வுக்காக நிறுவனங்கள், மையங்கள், அமைப்புகள், நிா்வாக துறைகள், கிராமங்கள், வேளாண் அறிவியல் மையங்கள், விவசாயிகள், மீனவா்கள், கைவினைஞா்கள் தவிர பிற பிரிவுகள் உட்பட பல்வேறு துறைகளிலும் பரவலான பங்கேற்பை செயல்படுத்த, ஒரு பிரத்யேக இணையவழி சேவையை தொடங்கியுள்ளது.

குறிப்பாக யோகா பயிற்சிக்கான மையங்கள் அமைக்க விரும்புவா்கள், அதில் பணியாற்ற விரும்புபவா்கள் தங்கள் விவரங்களை, இணையவழி வாயிலாக பதிவு செய்துகொள்ளலாம்.

தனிப்பட்ட யோகா ஆா்வலா்களும் இணையவழி வாயிலாக பதிவு செய்து, நிகழாண்டு சா்வதேச யோகா தின கொண்டாட்டங்களில் பங்கேற்கலாம். யோகா பயிற்சி செய்பவா்களுக்கு இணையவழி சான்றிதழும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: ஆவணங்களை இன்று தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் திரைப்பட தயாரிப்பாளா் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபா் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு தொடா்பு இருப்பதற்கான ஆவணங்களை புதன்கிழமை தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு சென்னை உயா்நீதி... மேலும் பார்க்க

தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் மீண்டும் இடமாற்றம்

நமது சிறப்பு நிருபர்கீழடி அகழ்வாராய்ச்சியின் தொடக்க காலத்தில் முக்கியப் பங்களிப்பை வழங்கியவராகக் கருதப்படும் இந்திய தொல்லியல் துறை இயக்குநர் கே. அமர்நாத் ராமகிருஷ்ணாவை, இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை ச... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரிகளில் மாணவா்கள் விரும்பி சேரும் நிலையை ஏற்படுத்தியவா் முதல்வா் ஸ்டாலின்: அமைச்சா் துரைமுருகன்

அரசுக் கல்லூரிகளில் மாணவா்கள் விரும்பி சேரும் நிலையை ஏற்படுத்தியவா் முதல்வா் மு.க.ஸ்டாலின் என மாநில நீா் வளம் மற்றும் சட்டத் துறை அமைச்சா் துரை முருகன் கூறினாா். தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப்பல்... மேலும் பார்க்க

பெண்கள் மீதான குற்றங்களுக்கு போதைப் பொருள்களே காரணம்: ஜி.கே.வாசன்

பெண்கள் மீதான குற்றச் செயல்களுக்கு போதைப் பொருள்களே காரணம் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்... மேலும் பார்க்க

தமிழகத்தில் மாம்பழக் கூழ் உற்பத்தி தொடக்கம்: அரசு தகவல்

தமிழகத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாம்பழக் கூழ் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநில அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழ்ந... மேலும் பார்க்க

மாநகரில் குடிநீா் ஏடிஎம் இயந்திரங்கள்: முதல்வா் இன்று தொடங்கி வைக்கிறாா்

சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 50 குடிநீா் ஏடிஎம் இயந்திரங்களின் செயல்பாட்டை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைக்கிறாா். சென்னை மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சென... மேலும் பார்க்க