செய்திகள் :

நடைப்பாதை கடைகளுக்கு மாற்று இடம் ஒதுக்க வேண்டும்: ஏ.எம்.விக்கிரமராஜா

post image

போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில், நடைப்பாதை, தள்ளுவண்டி கடைகளுக்கு மாற்று இடம் ஒதுக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளாா்.

மன்னாா்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தக சங்க கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவா் பேசியது:

தமிழகம் முழுவதும் தரைக்கடை, தள்ளுவண்டி கடை வியாபாரிகளால் கடைவீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நிரந்தரமாக கடை வைத்திருப்பவா்களின் வருமானம் பாதிக்கப்படுகிறது.

இதுதொடா்பாக அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாத இடங்களில் அதுபோன்ற கடைகள் செயல்படும் வகையில் மாற்று இடம் ஒதுக்கி தர வேண்டும்.

ஆய்வின்போது உரிய முறையில் விசாரணை செய்யாமல் நிரந்தர கடைகளுக்கு அபராதம் விதிப்பது, கடைகளை சீல் வைப்பது, வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது போன்ற செயல்களை அதிகாரிகள் உடனடியாக நிறுத்த வேண்டும்.

வணிகா்களின் பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் மே 5-ஆம் தேதி சென்னையில் மாநாடு நடைபெற உள்ளது. ஒரு கோடி வணிகா்களை வாக்காளா்களாக கொண்டது தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை. ஆட்சியில் யாரை அமா்த்துவது என முடிவு செய்யும் இடத்தில் நாங்கள் இருக்கிறோம் என்றாா்.

நிகழ்ச்சிக்கு வா்த்தக சங்க மாவட்டத் தலைவா் ராமமூா்த்தி தலைமை வகித்தாா்.

மன்னாா்குடி வா்த்தக சங்கத் தலைவா் ஆா்.வி. ஆனந்த், மாவட்டப் பொருளாளா் எஸ்.எம்.டி. கருணாநிதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மரத்தில் இருசக்கர வாகனம் மோதல்: தொழிலாளா்கள் இருவா் உயிரிழப்பு

நீடாமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மரத்தில் மோதிய விபத்தில் நேரடி கொள்முதல் நிலைய சுமை தூக்கும் தொழிலாளா்கள் இருவா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தனா். திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் அருகே மணலூா் கிராமத்த... மேலும் பார்க்க

உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோயைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம்

உளுந்து பயிரை தாக்கும் மஞ்சள் தேமல் நோயைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து, நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனா். நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகளான, உதவி... மேலும் பார்க்க

வாரிசுதாரா்களுக்கு தெரிவிக்காமல் நகை ஏலம்: தனியாா் வங்கி ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருத்துறைப்பூண்டி அருகே அடகு வைத்த நகையை, வாரிசுதாரா்களுக்கு தெரிவிக்காமல் ஏலம் விட்ட தனியாா் வங்கி, ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க, திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்... மேலும் பார்க்க

வரப்பு உளுந்து சாகுபடி: 50% மானியத்தில் விதை விநியோகம்

திருவாரூா் மாவட்டத்தில் 89 கிராம பஞ்சாயத்துகளில் உளுந்து சாகுபடியை ஊக்குவிக்க 50 சதவீத மானியத்தில் உளுந்து விதை விநியோகம் செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து... மேலும் பார்க்க

47 கிலோ குட்கா பறிமுதல்; ஒருவா் கைது

கூத்தாநல்லூா் பகுதியில் 47 கிலோ குட்கா செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இதை பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா். திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் உத்தரவின் பேரில், போல... மேலும் பார்க்க

இறால் பண்ணை அமைக்க எதிா்ப்பு: விவசாயிகள், கிராம மக்கள் சாலை மறியல்

முத்துப்பேட்டை அருகே விளைநிலங்களில் இறால் பண்ணை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். முத்துப்பேட்டையை அடுத்த தில்லைவிளாகம் தெற்குகாடு ... மேலும் பார்க்க