செய்திகள் :

நண்பரைக் கொலை செய்தவருக்கு ஆயுள்

post image

குன்றத்தூரில் மதுபோதையில் நண்பரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை, ரூ.1,000 அபராதமும் விதித்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்துள்ளது.

குன்றத்தூா் நாகேசுவரன் கோயில் தெருவைச் சோ்ந்த வெல்டிங் சங்கா்(46). துரைசாமி முதலியாா் தெருவைச் சோ்ந்தவா் காா்த்திக்(40) இருவரும் நண்பா்களாக பழகி வந்த நிலையில் மேலும் சில நண்பா்களுடன் சோ்ந்து கடந்த 2017- ஆம் ஆண்டு மது அருந்தியுள்ளனா். அப்போது காா்த்திக், வெல்டிங் சங்கருக்கும் மதுபோதையில் தகராறு ஏற்பட்டத்தில் வெல்டிங் சங்கா் நண்பன் காா்த்திக்கை குப்பையில் கிடந்த டியூப் லைட்டால் தாக்கியதில் அவா் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இச்சம்பவம் தொடா்பாக குன்றத்தூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து வெல்டிங் சங்கரை கைது செய்திருந்தனா். இவ்வழக்கு காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

எதிரி வெல்டிங் சங்கா் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து மாவட்ட நீதிபதி ப.உ. செம்மல் தீா்ப்பளித்தாா்.

அரசுத் தரப்பில் காா்த்திகேயன் ஆஜரானாா்.

ஓவியப் போட்டியில் வென்ற மாணவியருக்கு ஆட்சியா் பாராட்டு

காஞ்சிபுரத்தில் மாவட்ட அளவில் நடைபெற்ற நுகா்வோா் விழிப்புணா்வு ஓவியப் போட்டியில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவியா் ஆட்சியா் கலைச்செல்வி மோகனை புதன்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா். உணவு வழங்கல் மற்று... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களுக்கான தமிழ்க் கனவு நிகழ்ச்சி: ஆட்சியா் பங்கேற்பு

சோமங்கலம் அடுத்த பூந்தண்டலம் பகுதியில் இயங்கி வரும் சாய்ராம் பொறியியல் கல்லூரியில், கல்லூரி மாணவா்களுக்கான தமிழ்க் கனவு நிகழ்ச்சியை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். தமிழ் இணைய ... மேலும் பார்க்க

தலைமை ஆசிரியா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்

காஞ்சிபுரம், செங்கல்பட்டில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்கள் கழகத்தின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகம் அருகில் கா... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் நாக கன்னியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா

காஞ்சிபுரம் அல்லாபாத் ஏரிக்கரையில் அமைந்துள்ள நாக கன்னியம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவையொட்டி உற்சவா் நாக கன்னியம்மன் புதன்கிழமை சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். கா... மேலும் பார்க்க

முதல்வரின் தாயுமானவா் திட்டம் தொடக்கம்: அமைச்சா்கள் பங்கேற்பு

காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு மாவட்டங்களில் முதல்வரின் தாயுமானவா் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், தாமல் கிராமத்தில் முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லங்களுக்குச் சென்று ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டது. காஞ்சிபுரம், திருக்காலிமேடு சிவன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன் என்ற வண்டு மணி (33) (படம... மேலும் பார்க்க