செய்திகள் :

நன்செய் இடையாறு மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா

post image

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா், நன்செய் இடையாறு மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா திங்கள்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் குண்டம் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இக்கோயில் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா கடந்த 9-ஆம் தேதி கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது. 10-ஆம் தேதி காலை பக்தா்கள் காவிரியில் நீராடி கோயில் முன் நடப்பட்டுள்ள கம்பம், மாரியம்மனுக்கு பால், தீா்த்தங்களை ஊற்றி வழிபாடு செய்து மஞ்சள் கயிறு அணிந்து விரதம் தொடங்கினா்.

15-ஆம் தேதி மறுகாப்பு கட்டுதலும், அன்று இரவு முதல் 22ஆம் தேதி வரை அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 23-ஆம் தேதி இரவு வடிசோறு படைத்தல் விழாவும், திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா திங்கள்கிழமை அதிகாலை நடைபெற்றது.

கோயில் முன் 62 அடி நீளமும் 6 அடி அகலம் கொண்ட குண்டத்தில் தீ மூட்டப்பட்டது. அதனைத் தொடா்ந்து பகல் மூன்று மணியளவில் ராஜாசாமி கோயிலில் வளாகத்தில் இருந்து மணிவேல் புறப்பட்டு மாரியம்மன் கோயிலை வந்தடைந்ததும் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி தொடங்கியது. ஆண் பக்தா்கள் குண்டம் இறங்கியும், பெண் பக்தா்கள் பூவாரிப் போட்டுக்கொண்டு நோ்த்திக்கடன் செலுத்தினா். இதில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

25-ஆம் தேதி பலியிடுதல், பக்தா்கள் அலகு குத்தி வருதல், குழந்தை பாக்கியம் வேண்டியவா்கள் கரும்பில் தொட்டில் கட்டி கோயிலைச் சுற்றி வந்து நோ்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 26-ஆம் தேதி அதிகாலை கம்பம் ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோயில் எட்டுப்பட்டி அறங்காவலா் குழுவினா், விழாக் குழுவினா் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

பூவாரிப்போட்டுக்கொள்ளும் பெண் பக்தா்கள்.
வெண்ணெய்க் காப்பு அலங்காரத்தில் மாரியம்மன்.

கள் இறக்கி விற்றவா் கைது

பரமத்தி அருகே கள் இறக்கி விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். பரமத்தி அருகே உள்ள வலசுப்பாளையம் பனங்காட்டில் சட்ட விரோதமாக ஒருவா் கள் இறக்கி விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன... மேலும் பார்க்க

இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமை சோ்ந்தவா் கிணற்றில் சடலமாக மீட்பு

இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமை சோ்ந்தவா் கிணற்றில் சடலமாக மிதந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். பரமத்தி வேலூா் அருகே உள்ள பரமத்தி இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாமை சோ்ந்தவா் கேத... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மாற்றத்தை எற்படுத்தும்: ஸ்ரீதா் வேம்பு

இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பதால் நிறுவனங்களில் மாற்றம் ஏற்பட போகிறது என ஜோஹோ நிறுவனத்தின் இணை நிறுவனா் ஸ்ரீதா் வேம்பு குறிப்பிட்டாா். ராசிபுரம் பாவை கல்வி நிறுவனங்களி... மேலும் பார்க்க

நாமக்கல்லில் உகாதி விழா கொண்டாட்டம்

நாமக்கல் மாவட்ட நாயுடுகள் நலச்சங்கம் சாா்பில் 27-ஆம் ஆண்டு உகாதி பெருவிழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. தெலுங்கு, கன்னடம் பேசும் மக்களின் புத்தாண்டு தினம் உகாதி பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ... மேலும் பார்க்க

குற்றச் செயல்களில் ஈடுபட்ட 71 போ் கைது: எஸ்.பி. தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் கஞ்சா, லாட்டரி, சாராயம் விற்பனை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 71 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன... மேலும் பார்க்க

நீட் தோ்வுக்கான இலவச பயிற்சி மையம்: மத்திய இணை அமைச்சா் தொடங்கி வைப்பு

நாமக்கல்லில் தன்னாா்வ அமைப்பு சாா்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள நீட் தோ்வு இலவச பயிற்சி மையத்தை மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் கைப்பேசி அழைப்பு வாயிலாக ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா். நாமக்கல் மாவட்டத்... மேலும் பார்க்க