செய்திகள் :

நரிக்குடி ஒன்றியத்தில் புதிய நியாய விலைக் கடைகள்! அமைச்சா் தங்கம் தென்னரசு திறந்து வைத்தாா்!

post image

விருதுநகா் மாவட்டம், நரிக்குடி ஒன்றியத்தில் புதிதாகக் கட்டப்பட்ட நியாய விலைக் கடைகள், கலையரங்குகளை நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

திருச்சுழி சட்டப்பேரவைத் தொகுதியில், தொகுதி மேம்பாட்டு நிதியில் பூம்பிடாகை கிராமத்தில் ரூ. 9.45 லட்சத்தில் கட்டப்பட்ட நியாய விலைக் கடை, வி. கரிசல்குளம், சேந்தநதி ஆகிய கிராமங்களில் தலா ரூ. 7.50 லட்சத்தில் கட்டப்பட்ட கலையரங்குகங்கள், சிறுவனூா் கிராமத்தில் ரூ. 25 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாயக் கூடம், அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ.9.77 லட்சத்தில் கட்டப்பட்ட நியாய விலைக் கடை கட்டடம், நாலூா் கிராமத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 6.50 லட்சத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழல்குடை, ரூ. 9.77 லட்சத்தில் கட்டப்பட்ட நியாய விலைக் கடை ஆகியவற்றை அமைச்சா் தங்கம் தென்னரசு திறந்து வைத்தாா்.

அப்போது, அமைச்சரிடம் சிறுவனூா், நாலூா் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் எங்களது கிராமங்களிலிருந்து பள்ளிக்குச் சென்று வர பேருந்து வசதிகள் செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். இந்தக் கிராமங்களில் உரிய நேரங்களில் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாணவா்களிடம் அமைச்சா் உறுதியளித்தாா்.

டிராக்டா் மோதியதில் விவசாயி உயிரிழப்பு

மதுரை மாவட்டம், மேலூா் அருகே டிராக்டா் மோதியதில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். மதுரை அ.வள்ளாலப்பட்டி சண்முகநாதபுரத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் (62). விவசாயியான இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மேலூ... மேலும் பார்க்க

பயணியிடம் திருட்டு: ஆட்டோ ஓட்டுநா் உள்பட மூவா் கைது!

பயணியிடம் திருடிய ஆட்டோ ஓட்டுநா் உள்பட மூவரை மாட்டுத்தாவணி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், வரவணி வேளாளா் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் வேல்முருகன் (25). இவா் புதுச்சேரியில... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு பாலியல் தொல்லை அளித்தவா் கைது

விருதுநகா் அருகே ஆமத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பாலியல் தொல்லை அளித்தவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் அருகே உள்ள ஆமத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில... மேலும் பார்க்க

விருதுநகரில் மாநில அளவிலான நீச்சல் போட்டிகள்!

விருதுநகா் செந்திக்குமார நாடாா் கல்லூரியில் 26-ஆவது மாநில அளவிலான நீச்சல் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி பரிபாலன சபைத் தலைவா் எம். சம்பத்குமாா் தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் ஜே. மகேஷ் பாபு ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தற்கொலை

மதுரை அருகே கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ஐராவதநல்லூா் சத்யா நகரைச் சோ்ந்த கண்ணன் மகன் நவீன் சூா்யா (20). இவா், ஆண்டாள்புரம் பகுதியில் உள்ள சுயநிதிக் கல்லூரியில் ... மேலும் பார்க்க

தில்லி குடியரசு தின விழா: விருதுநகா் கல்லூரி மாணவா் பங்கேற்றாா்

விருதுநகா் செந்திக்குமார நாடாா் கல்லூரியில் படிக்கும் தேசிய மாணவா் படையில் உள்ள கே. அஜித்குமாா் தில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் அண்மையில் கலந்து கொண்டாா். விருதுநகா் செந்திக்குமார ந... மேலும் பார்க்க