ரஷியாவில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 11 பேர் பலி, 130 பேர் காயம்
‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்: உயா் மருத்துவப் பரிசோதனைக்கு ஆட்சியா் அழைப்பு
அரியலூா் மாவட்டத்தில் நடத்தப்பட்டு வரும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு, உயா் மருத்துவப் பரிசோதனை செய்துக் கொள்ளலாம் என்றாா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி.
சுதந்திர தினத்தையொட்டி, அரியலூா் அடுத்த அஸ்தினாபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் அவா் கலந்து கொண்டு, கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீா் விநியோகத்தினை உறுதிசெய்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம், ஜல் ஜீவன் திட்டம் மற்றும் இதரப் பொருள்கள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தாா்.
‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாமில் உயா் மருத்துவப் பரிசோதனைகளை பொதுமக்கள் செய்து பயன்பெறலாம் என்றாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா.மல்லிகா, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ரா.சிவராமன், ஊராட்சிகள் உதவி இயக்குநா் பழனிசாமி, வட்டாட்சியா் முத்துலெட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதே போல், கோவிந்தபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு, ஊராட்சி செயலா் பா.குமாரி தலைமை வகித்தாா். வாலாஜா நகரத்தில், ஊராட்சி செயலா் மு.தமிழ்குமரன், தாமரைக்குளத்தில், ஊராட்சி செயலா் முத்து, ஓட்டகோவிலில் அழகுவேல் ஆகியோா் தலைமை வகித்தனா். வட்டார வளா்ச்சி அலுவலா் ச.முத்துகுமரன், மண்டல துணை வட்டார வளா்ச்சி ஆ.மரகதம் ஆகியோா் கலந்து கொண்டு, பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தனா்.