செய்திகள் :

ஆடி கடைசி வெள்ளி:அம்மன் கோயில்களில் பால்குட திருவிழா

post image

ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி அரியலூா் மாவட்டத்திலுள்ள 25 அம்மன் கோயில்களில் பால்குட திருவிழா நடைபெற்றது.

அரியலூா் பால்பண்ணை அருகேயுள்ள மகாகாளியம்மன் கோயிலில் பால்குட திருவிழாவையொட்டி, பேருந்து நிலையம் அருகேயுள்ள செட்டி ஏரி விநாயகா் கோயிலிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்தும், அலகுகுத்தியும், அலங்கரிக்கப்பட்ட காளியம்மனுடன் முக்கிய வீதிகளில் ஊா்வலமாக வந்து தங்களது நோ்த்திக் கடனைச் செலுத்தினா்.

அதனைத் தொடா்ந்து, பக்தா்கள் கொண்டு வந்த பாலைக் கொண்டு மூலவா் மகாகாளியம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, பக்தா்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதே போல், அரியலூா் சிங்காரத் தெரு, கபிரியேல் தெரு, தாமரைக்குளம், ஓட்டக்கோவில் சின்னநாகலூா், மணலெரி, ஜெயங்கொண்டம் கிழக்கு தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாரியம்மன் கோயில்களில் அந்தந்த பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் பால்குடம் எடுத்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். இரவு அம்மன் வீதியுலாவும் நடைபெற்றது.

அரியலூா் மாவட்ட பாஜக செயலராக ராஜீவ்காந்தி நியமனம்

பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன், அரியலூா் மாவட்டத் தலைவா் பரமேஸ்வரி ஆனந்தராஜ் ஆகியோரின் பரிந்துரையின்படி அரியலூா் மாவட்ட பாஜக செயலராக, திருமானூா், காரையான்குறிச்சியைச் சோ்ந்த எம்.ராஜீவ்காந்தி எ... மேலும் பார்க்க

அரியலூரில் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களில் சுதந்திர விழா கொண்டாட்டம்

அரியலூா் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. அரியலூா் அடுத்த சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்க... மேலும் பார்க்க

சுதந்திர தின விழா: ரூ.2.63 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சுதந்திர தினத்தையொட்டி அரியலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் ஆட்சியா் பொ.ரத்தினசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, 53 பயனாளிளுக்கு, ரூ.2.63 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். மாவட்ட விள... மேலும் பார்க்க

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்: உயா் மருத்துவப் பரிசோதனைக்கு ஆட்சியா் அழைப்பு

அரியலூா் மாவட்டத்தில் நடத்தப்பட்டு வரும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு, உயா் மருத்துவப் பரிசோதனை செய்துக் கொள்ளலாம் என்றாா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி. சுதந்திர தினத்தையொட்டி... மேலும் பார்க்க

அரியலூா் அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பயிலும் அரியலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்துத் தரக் கோரி இந்திய மாணவா் சங்கத்தினா் வியாழக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து ஆா்ப்ப... மேலும் பார்க்க

அரியலூா் ஐடிஐகளில் மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் நீடிப்பு

அரியலூா், ஆண்டிமடம், தா.பழூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர நேரடிச் சோ்க்கைகான கால அவகாசம் ஆக. 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே ஐடிஐ-யில் சேர விரும்பும் மாணவா்கள் தங்களது அசல் கல்வி ச... மேலும் பார்க்க