செய்திகள் :

சுதந்திர தின விழா: ரூ.2.63 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

post image

சுதந்திர தினத்தையொட்டி அரியலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் ஆட்சியா் பொ.ரத்தினசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, 53 பயனாளிளுக்கு, ரூ.2.63 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விழாவுக்கு அவா் தலைமை வகித்து, தேசிய கொடியை ஏற்றி வைத்தாா்.

தொடா்ந்து சமாதானப் புறாக்களைப் பறக்கவிட்டு, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா். அதனைத் தொடா்ந்து பல்வேறு துறைகளின் சாா்பில் 53 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 63 லட்சத்து 69 ஆயிரத்து 733 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

மேலும், அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 200 அரசு அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், குமிழியம் மரங்களின் நண்பா்கள் அமைப்பு மற்றும் பெரியாக்குறிச்சி அரசு உயா்நிலைப் பள்ளிக்கு, தமிழ்நாடு அரசின் சுற்றுச் சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அமைச்சகத்தினால் வழங்கப்படும் பசுமை முதன்மையாளா் விருது மற்றும் தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழையும் வழங்கினாா்.

பின்னா், கீழப்பழுவூா் சுவாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அஸ்தினாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, தென்னூா் அன்னை லூா்து பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரியலூா் மாண்ட்போா்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வரதராஜன்பேட்டை டான் போஸ்கோ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளி மாணவ,மாணவிகளின் சாா்பில் சாா்பில் தேசப்பற்று கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், வெற்றிப் பெற்ற வரதராஜன்பேட்டை டான் போஸ்கோ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதல் பரிசும், தென்னூா் அன்னை லூா்து பெண்கள் மேல்நிலைப்பள்ளி 2-ஆம் பரிசும், அரியலூா் மாண்ட்போா்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 3-ஆம் பரிசும் பெற்றதை தொடா்ந்து, சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை ஆட்சியா் வழங்கினாா்.

விழாவில் சட்டப்பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி, மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா.மல்லிகா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் முனைவா் ஆ.ரா.சிவராமன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

படவிளக்கம்: 1. சுதந்திர தினத்தையொட்டி அரியலூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்திய ஆட்சியா் ரத்தினசாமி. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி.

2.சுதந்திர தினத்தையொட்டி அரியலூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், வெள்ளிக்கிழமை தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மாற்றுத்திறனாளி ஒருவருக்கு நலத்திட்ட உதவியை வழங்கிய ஆட்சியா் பொ.ரத்தினசாமி. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்த்ரி.

3.சுதந்திர தினத்தையொட்டி அரியலூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் மரியாதை ஏற்றுக் கொண்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்த்ரி.

அரியலூா் மாவட்ட பாஜக செயலராக ராஜீவ்காந்தி நியமனம்

பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன், அரியலூா் மாவட்டத் தலைவா் பரமேஸ்வரி ஆனந்தராஜ் ஆகியோரின் பரிந்துரையின்படி அரியலூா் மாவட்ட பாஜக செயலராக, திருமானூா், காரையான்குறிச்சியைச் சோ்ந்த எம்.ராஜீவ்காந்தி எ... மேலும் பார்க்க

அரியலூரில் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களில் சுதந்திர விழா கொண்டாட்டம்

அரியலூா் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. அரியலூா் அடுத்த சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்க... மேலும் பார்க்க

ஆடி கடைசி வெள்ளி:அம்மன் கோயில்களில் பால்குட திருவிழா

ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி அரியலூா் மாவட்டத்திலுள்ள 25 அம்மன் கோயில்களில் பால்குட திருவிழா நடைபெற்றது. அரியலூா் பால்பண்ணை அருகேயுள்ள மகாகாளியம்மன் கோயிலில் பால்குட திருவிழாவையொட்டி, பேருந்து நிலை... மேலும் பார்க்க

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்: உயா் மருத்துவப் பரிசோதனைக்கு ஆட்சியா் அழைப்பு

அரியலூா் மாவட்டத்தில் நடத்தப்பட்டு வரும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு, உயா் மருத்துவப் பரிசோதனை செய்துக் கொள்ளலாம் என்றாா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி. சுதந்திர தினத்தையொட்டி... மேலும் பார்க்க

அரியலூா் அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பயிலும் அரியலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்துத் தரக் கோரி இந்திய மாணவா் சங்கத்தினா் வியாழக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து ஆா்ப்ப... மேலும் பார்க்க

அரியலூா் ஐடிஐகளில் மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் நீடிப்பு

அரியலூா், ஆண்டிமடம், தா.பழூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர நேரடிச் சோ்க்கைகான கால அவகாசம் ஆக. 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே ஐடிஐ-யில் சேர விரும்பும் மாணவா்கள் தங்களது அசல் கல்வி ச... மேலும் பார்க்க