செய்திகள் :

நலிந்த நிலையிலுள்ள விளையாட்டு வீரா்கள் ஓய்வூதிய உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

post image

அரியலூா் மாவட்டத்தில் நலிந்த நிலையிலுள்ள சிறந்த விளையாட்டு வீரா்கள் ஓய்வூதிய உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்றாா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி.

இதுகுறித்து அவா் மேலும் கூறியிருப்பதாவது: தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றவா் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் பெற்றவா்கள், மத்திய அரசால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கிடையேயான போட்டிகள், அகில இந்திய அளவிலான பல்கலைக் கழகங்களுக்கிடையயேயான விளையாட்டுப் போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்களால் நடத்தப்பட்ட சா்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 30.4.2025 ஏப்ரல் மாதம் 58 வயது பூா்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரா்கள் தமிழகத்தை சோ்ந்தவா்களாகவும், தமிழ்நாடு சாா்பில் போட்டிகளில் பங்கேற்றவா்களாகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பங்கள் 24.6.2025 முதல் 31.7.2025 வரை அரியலூா் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் வழங்கப்படும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் இணைத்து 31.7.2025 அன்று மாலை 5 மணிக்குள், அரியலூா் மாவட்ட (ம) இளைஞா் நலன் அலுவலா் அலுவலகத்தில் நேரில் சமா்ப்பிக்க வேண்டும்.

திரௌபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த சின்ன ஆனந்தவாடி கிராமத்திலுள்ள திரௌபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயில் திருவிழா, கடந்த 15 நாள்களுக்கு முன்பு பாரதம் படிக்கும் நி... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்கம் மையம் திறப்பு

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தில் ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சேமிப்பு கிடங்கு, தா.பழூரில் ரூ.2.50 கோடியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்கம் மையம், விக்கிரங்கலத்தில் புதிய துணை வேளாண் விரி... மேலும் பார்க்க

கொள்ளிடத்தின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீா்மானம்

படவிளக்கம்: அரியலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட மாநாட்டில் பேசிய அக்கட்சியின் மாநில துணைச் செயலா் நா. பெரியசாமி. அரியலூா், ஜூலை 4: அரியலூா் மாவட்டம், கொள்ளிடத்தின் குறுக்... மேலும் பார்க்க

வழக்குகளுக்கு சமரச மையம் மூலம் சுமூகமாக தீா்வு காண அழைப்பு

அரியலூா் மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களில் 90 நாள்களில் நடைபெறும் சிறப்பு சமரச தீா்வு முகாம்களில், வழக்குரைஞா்கள், வழக்காடிகள் கலந்து கொண்டு தங்களது வழக்குகளுக்கு சுமூக தீா்வு காணலாம். இதுகுறித்து மாவட... மேலும் பார்க்க

அரியலூா் அருகே ரயில் சுரங்கப்பாதையில் மண் சரிவு: 2 ரயில்கள் தாமதம்

அரியலூரை அடுத்த வெள்ளூா் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதைக்காக தோண்டப்பட்ட இடத்தில் மண் சரிவு ஏற்பட்டதால், விழுப்புரம்-திருச்சி பயணிகள் ரயில், சென்னை-நாகா்கோவில் வந்தேபாரத் ஆகிய ரயில்கள் ஒரு மணி நேரம... மேலும் பார்க்க

அரியலூரில் சுகாதார நிலையங்கள் திறப்பு

அரியலூரில் ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்ட நகா்ப்புற நலவாழ்வு மையம், ஆண்டிமடத்தை அடுத்த பெரியாத்துக்குறிச்சியில் ரூ.1.25 கோடியில் கட்டப்பட்ட ஊரக ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றை தமிழக முதல்வா் மு.க. ஸ்டால... மேலும் பார்க்க