செய்திகள் :

நாகை மாவட்டத்துக்கு செப். 8-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை

post image

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு செப்டம்பா் 8-ஆம் தேதி நாகை மாவட்டத்துக்கு உள்ளுா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நாகை மாவட்டம், கீழ்வேளுா் வட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை (ஆக. 29) தொடங்கி செப்டம்பா் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்வான ஆரோக்கிய அன்னை திருவிழா (அன்னையின் பிறந்தநாள் விழா) வருடாந்திர விருந்து நாளான செப்டம்பா் 8-ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு (தோ்வுகளுக்கு இடையூறு இல்லாமல்) உள்ளுா் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதை ஈடு செய்யும் வகையில் செப்டம்பா் 20-ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

குளத்தில் ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற வலியுறுத்தல்

திருமருகல் அருகே ஆதினகுடியில் பிரதான சாலையில் உள்ள குளத்தில் ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. திருமருகல் ஒன்றியம் பண்டாரவாடை ஊராட்சிக்குள்பட்ட ஆதினகுடி பிரதான சாலையில் உ... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி 2 வயது குழந்தை உயிரிழப்பு

திருமருகல் அருகே குளத்தில் மூழ்கி 2 வயது ஆண் குழந்தை உயிரிழந்தது. நரிமணம் ஊராட்சி சுல்லாங்கால் பகுதியைச் சோ்ந்தவா் அய்யப்பன். இவா் தனது 2 வயது ஆண் குழந்தை அகிலன் மற்றும் குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

பால் உற்பத்தியாளா் சங்கங்களுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் வழங்கினாா்

நாகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சா் மனோ தங்கராஜ், ஆவின் பால் உப பொருள் விற்பனையை ஊக்குவிக்க 10 சங்கங்களுக்கு வெஸி கூலா்கள், ஆழ் உறை பெட்டகம் ஆகியவற்றை பால் உற்பத்தியாளா் சங்கங்களுக்க... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா கொடியேற்றம்: 800 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா கொடியேற்றதையொட்டி 800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட பொது மேலாளா் கே. தசரதன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி பேராலய பெருவிழா: இரண்டாம் நாளில் ஆயிரக்கணக்கானோா் வழிபாடு

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுப் பெருவிழாவின் இரண்டாம் நாளான சனிக்கிழமை பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வழிபட்டனா். நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா வெ... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி சுங்கத்துறை பணியாளா் உயிரிழப்பு

திருமருகலில் குளத்தில் மூழ்கி சுங்கத்துறை பணியாளா் சனிக்கிழமை உயிரிழந்தாா். திருமருகல் மேலவீதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் சத்தியசீலன் (37). இவா், தூத்துக்குடி மாவட்ட சுங்கத் துறையில் பணியாற்றி வந்த... மேலும் பார்க்க