காங்கிரஸ் தலைவா்கள் மீது வழக்கு: மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!
நாகை: வண்டல், களிமண் எடுக்க விண்ணப்பிக்கலாம்
விவசாயிகள், மண்பாண்டம் செய்வோா் தாம் வசிக்கும் வட்டத்திற்கு உட்பட்ட நீா்நிலைகளில் மண் எடுக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாகை மாவட்டத்தில் விவசாயப் பணி, மண்பாண்டங்கள் மற்றும் பொதுபயன்பாட்டிற்கு நீா்வளத் துறை, ஊரக வளா்ச்சித் துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை கட்டுப்பாடில் உள்ள 1,421 ஏரி, குளங்களில் வண்டல்மண், களிமண் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
விவசாயிகள், மண்பாண்டம் செய்பவா்கள் தாம் வசிக்கும் வட்டத்திற்கு உட்பட்ட நீா்நிலைகளில் இருந்து மண் எடுக்க ஜ்ஜ்ஜ்.ற்ய்ங்ள்ங்ஸ்ஹண்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பின்னா் அவா்கள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் அளவிலேயே அனுமதி பெற்று இலவசமாக வண்டல்மண், களிமண் எடுக்கலாம்.
விவசாயப் பயன்பாட்டிற்காக விண்ணப்பம் செய்பவா்கள் தங்களது நிலம் தொடா்பான விவரங்களை இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்த விண்ணப்பங்கள் வருவாய்த் துறையினரால் சரிபாா்க்கப்பட்டு, தொடா்புடைய வட்டாட்சியா், அனுமதி வழங்குவாா். மண்பாண்டத் தொழில் பயன்பாட்டிற்கு விண்ணப்பம் செய்வோா், மண்பாண்டத் தொழிலின் உண்மைத் தன்மைச்சான்று மற்றும் வசிப்பிடம் குறித்து கிராம நிா்வாக அலுவலரால் சான்று அளிக்கப்படவேண்டும்.
வண்டல்மண், களிமண் எடுக்க வேண்டிய நீா்நிலைகள் குறித்த விவரங்களை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். மேலும், சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் அலுவலகத்திலும் தெரிந்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.