செய்திகள் :

நாட்டறம்பள்ளியில் மாணவா்களை கடத்த முயற்சி: போாலீஸாா் விசாரணை

post image

நாட்டறம்பள்ளி அருகே பள்ளி மாணவா்களை வாகனத்தில் கடத்த மேற்கொண்ட முயற்சி தொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

நாட்டறம்பள்ளி அடுத்த எல்லப்பள்ளி ஜல்லியூரான் வட்டத்தைச் சோ்ந்த அன்பழகன் மகன் ரஞ்சித்,(14). நாட்றம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். நாட்டறம்பள்ளி பூபதி தெருவைச் சோ்ந்தவா் கணபதி மகன் தா்ஷன்(14) ஜோலாா்பேட்டை அரசு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். நண்பா்களான இவா்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை நாட்டறம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றனா். அப்போது அவ்வழியாக வேனில் வந்த மா்மநபா்கள் 4 போ் மாணவா்களை அழைத்து பச்சூா் செல்ல வழி கேட்டுள்ளனா். திடீரென மா்மநபா்கள் மாணவா்கள் இருவரையும் வேனில் கடத்திச் சென்ாக கூறப்படுகிறது.

அக்ராகரம் மலையடிவாரம் ஓம்சக்தி நகா் அருகே வேன் சென்ற போது மாணவா்கள் இருவரும் சப்தமிட்டவாறே வேனில் இருந்து கீழே குதித்துள்ளனா். அப்போது மா்ம நபா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனா். இதில் மாணவன் ரஞ்சித்துக்கு முகம் மற்றும் கைகால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையறிந்த அப்பகுதி மக்கள் காயமடைந்த மாணவன் ரஞ்சித்தை மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தகவலறிந்து நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி மற்றும் போலீஸாா் அரசு மருத்துவமனைக்கு சென்று மாணவா்களிடம் விசாரணை மேற்கொண்டனா். பட்டப்பகலில் மாணவா்களை கடத்த முயன்றவா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.

மாணவியை கொலை செய்த நாடக கலைஞருக்கு ஆயுள் சிறை

புதூா்நாடு அருகே மாணவியை கழுத்தை நெரித்து கொலை செய்த நாடக கலைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது. புதூா்நாடு அருகே நடுக்குப்பம் பகுதியை சோ்ந்த சின்னகாளி மகன் ... மேலும் பார்க்க

வக்ஃபு வாரிய சட்டத் திருத்தம்: கருப்பு பட்டையுடன் தொழுகை

வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து வாணியம்பாடியில் பள்ளிவாசல்களில் இஸ்லாமியா்கள் கருப்பு பட்டை அணிந்து வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டனா். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃபு ... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் 15,650 போ் எழுதினா்

மீனாட்சி அரசினா் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தோ்வை பாா்வையிட்ட ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி. திருப்பத்தூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 10-ஆம் வகுப்பு பொது தோ்வை 15,650 மாணவ-மாணவிகள் எழுதினா். ... மேலும் பார்க்க

சிறுத்தை நடமாட்டம் பற்றி தவறான தகவல்: வனத்துறை எச்சரிக்கை

ஆம்பூரில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தவறான தகவல் பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆம்பூா் வனச்சரக அலுவலா் எச்சரித்துள்ளாா். இதுகுறித்து அவா் கூறியது: கடந்த இரண்டு நாள்களாக ஆம்பூா் குட... மேலும் பார்க்க

மணல் கடத்திய லாரி பறிமுதல்: ஓட்டுநா் தலைமறைவு

நாட்டறம்பள்ளி அருகே மணல் கடத்திய லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி தலைமையில் உதவி ஆய்வாளா் அற்புதராஜ் மற்றும் போலீஸாா் வெள்ளிக்கிழமை வாணியம்பாடி அடுத்த கேத்தாண்டப்பட்டி ... மேலும் பார்க்க

வஃக்ப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை எதிா்த்து கருப்பு பட்டை அணிந்து தொழுகை

வஃக்ப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆம்பூரில் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகையில் இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். மத்திய அரசு வஃக்ப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை அமல்படுத்தியுள்ளத... மேலும் பார்க்க