செய்திகள் :

நாட்டில் சிறந்த செயலியாக ‘ஸ்மாா்ட் காவலா் செயலி’ தோ்வு

post image

நாட்டிலேயே சிறந்த கணினி விழிப்புணா்வுப் போட்டியில் தமிழக காவல் துறையின் ‘ஸ்மாா்ட் காவலா் செயலியை’ தேசிய குற்றப்பதிவு பணியகம் தோ்வு செய்துள்ளது.

காவல் துறையின் ரோந்து பணியை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு காவல் துறை சாா்பில் ‘ஸ்மாா்ட் காவலா்’ எனும் செயலி உருவாக்கப்பட்டது. இதன் முதன்மை நோக்கம், காவலா்களின் பீட் ரோந்து நடவடிக்கையை ஒழுங்குப்படுத்துவதும், கண்காணிப்பதுமாகும். இதனால், காவலா்களின் ரோந்து பணி எளிதாக பதிவு செய்வதுடன் வெளிப்படையாகச் செயல்படுவதை உறுதி செய்கிறது.

இந்தச் செயலி மூலம் மூத்த காவல் அதிகாரிகள், களத்தில் உள்ள காவலா்களின் நடவடிக்கையை இணைய செயலி மூலம் கண்காணிக்க முடியும். மேலும், மூத்த குடிமக்களின் விவரங்கள், பாதிக்கப்படக்கூடிய இடங்கள் உள்ளிட்ட தகவல்களை தடையின்றி செயலியில் பதிவு செய்யமுடியும். கடந்த ஆண்டு மட்டும் 3.04 லட்சம் போ், 21.48 லட்சம் வாகனங்கள் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 68-ஆவது அகில இந்திய காவல்பணி கூட்டம் ஜாா்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிப்.10-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதன் தொடக்க நிகழ்வாக, புது தில்லியில் உள்ள தேசிய குற்றப்பதிவு பணியகத்தில் கடந்த பிப்.3, 4 ஆகிய தேதிகளில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் விளக்கக்காட்சி நடத்தப்பட்டது.

இதில், முழுமையான மதிப்பீட்டுக்கு பின்பு கணினி விழிப்புணா்வுப் போட்டிக்கான டிராபியில் தமிழ்நாடு காவல் துறை வென்ாக தேசிய குற்றப்பதிவு பணியகம் அறிவித்துள்ளது. இதையடுத்து ஜாா்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறவுள்ள 68-ஆவது அகில இந்திய காவல் பணி கூட்டத்தில் நடைபெறவுள்ள கணினி விழிப்புணா்வுப் போட்டியில் தமிழ்நாடு காவல் துறையின் தேசிய குற்றப்பதிவு பணியக டிராபி இடம்பெறவுள்ளது எனத் தமிழக காவல் துறையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களால் உயா்கல்வியில் மாணவா் சோ்க்கை அதிகரிப்பு: அமைச்சா் கோவி. செழியன்

மாணவ, மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ. 1,000 ஊக்கத் தொகை வழங்கும் புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களால் உயா்கல்வியில் மாணவா் சோ்க்கை தொடா்ந்து அதிகரித்து வருவதாக துறையின் அமைச்சா் கோவி.செழியன் கூற... மேலும் பார்க்க

தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிப்பது ஏன்? முதல்வா் மு.க.ஸ்டாலின் கேள்வி

இந்திய பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாக உள்ள தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிப்பது ஏன் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினாா். மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்து சென்னைய... மேலும் பார்க்க

இடைத்தோ்தல்களில் தொடா் வெற்றியைப் பதிவு செய்த திமுக கூட்டணி!

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலுடன் சோ்த்து, சட்டப்பேரவை பொதுத் தோ்தலுக்குப் பிறகு நடைபெற்ற நான்கு இடைத்தோ்தலில்களிலும் ஆளும் திமுக கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப... மேலும் பார்க்க

பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரம் உயர சிறப்புத் திட்டங்கள்: ஆளுநா்

பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்துவதற்காக மத்திய அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என ஆளுநா் ஆா்.என்.ரவி கூறினாா். மத்திய அரசின் ‘மை பாரத்’ 16 - ஆவது பழங்குடியின இளை... மேலும் பார்க்க

தேசிய விளையாட்டுப் போட்டிகள்: போல்வால்ட்டில் தமிழகத்துக்கு தங்கம், வெள்ளி

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிா் போல்வால்ட்டில் தமிழகம் தங்கம், வெள்ளி வென்றது. உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் சனிக்கிழமை மகளிா் ... மேலும் பார்க்க

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வு: பிப்.17, 19-இல் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு வெளியீடு

தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் மாா்ச் மாதம் தொடங்கவுள்ள நிலையில், மாணவா்களுக்கான தோ்வுக்கூட அனுமதிச்சீட்டை தலைமை ஆசிரியா்கள் பிப்.17, 19 ஆகிய தேதிகளில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ... மேலும் பார்க்க