செய்திகள் :

நாட்டுவெடிகுண்டு வைத்து வேட்டையாடப்பட்ட கடமான் - கைதானவர் மோதிரத்தை விழுங்கி தற்கொலை முயற்சி

post image

நெல்லை மாவட்டம், களக்காடு அருகேயுள்ள பத்மநேரி காட்டுப் பகுதியில் கடமான் ஒன்று முகம் சிதைந்த நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாக களக்காடு புலிகள் காப்பக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து வனச்சரகர் பிரபாகரன் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் வேட்டைத்தடுப்புக் காவலர்கள் படுகாயங்களுடன் கிடந்த 4 வயதான ஆண் கடமானை மீட்டு, சிகிச்சைக்காக களக்காடு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தற்கொலைக்கு முயன்ற மணிகண்டன்

ஆனால், வழியிலேயே கடமான் பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கடமான் படுகாயங்களுடன் கிடந்த இடத்தை ஆய்வு செய்ததில், நாட்டு வெடிகுண்டு மூலம் வேட்டையாடப்பட்டு தெரிய வந்தது.

தொடர் விசாரணையில்,  களக்காடு அருகேயுள்ள நெடுவிளையைச் சேர்ந்த இசக்கிராஜ், தேவநல்லூரைச் சேர்ந்த மணிகண்டன் ஆகியோர் மாம்பழத்தில் நாட்டு வெடிகுண்டு வைத்து காட்டுப் பகுதியில் வீசியதும், பழத்தை கடித்து உண்ணும் போது முகம் சிதைந்து கடமான் உயிரிழந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து இருவரையும் வனத்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவரகளை களக்காடு தலையணையில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

களக்காடு வனக்காப்பாளர் அலுவலகம்

அப்போது திடீரென மணிகண்டன் தான் அணிந்திருந்த தங்க மோதிரத்தை கழற்றி வாயில் போட்டு விழுங்கி தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த வனத்துறை ஊழியர்கள் அவரை சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையின் போது மோதிரத்தை விழுங்கிய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.   

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

`இரட்டை கொலைக்கு மது விற்பனை காரணமில்லை' - மயிலாடுதுறை போலீஸார் விளக்கம்!

மயிலாடுதுறை அருகே உள்ள முட்டம் கிராமம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் ஹரிஷ் (25). பாலிடெக்னிக் முடித்து விட்டு வேலை தேடி வருகிறார். சீவிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் ஹரி சக்தி (20) கல்லூரி ஒன்றில் இன்ஜினீயர... மேலும் பார்க்க

திருநள்ளாறு: சனீஸ்வரர் கோயிலில் போலி இணையத்தளம், பிரசாதம் - கோடிக்கணக்கில் சுருட்டிய குருக்கள் கைது

திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில்புதுச்சேரி, காரைக்காலில் இருக்கும் திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலுக்கு சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கிலும், சனிப்பெயர்ச்சியின்போது லட்சக்க... மேலும் பார்க்க

மயிலாடுதுறை இரட்டைக்கொலை: "சாராய விற்பனையைத் தட்டிக்கேட்டதுதான் காரணமா?" - காவல்துறை சொல்வதென்ன?

சாராய வியாபாரிகளின் அட்டூழியத்தைத் தட்டிக் கேட்டதாக மாணவர் மற்றும் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மயிலாடுதுறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் அருகே முட்... மேலும் பார்க்க

`இனி யாரும் எதிர்த்து கேட்க கூடாது’ - சாராய விற்பனையை தட்டி கேட்ட கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் கொலை

மயிலாடுதுறை அருகே உள்ள முட்டம் கிராமம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் ஹரிஷ்(25). பாலிடெக்னிக் முடித்து விட்டு வேலை தேடி வருகிறார். பேச்சாவடி பகுதியை சேர்ந்தவர் ஹரிசக்தி(20) கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து... மேலும் பார்க்க

புதுச்சேரி: 1-ம் வகுப்பு சிறுமி பாலியல் வன்கொடுமை - ஆசிரியரை துவைத்த பெற்றோர்கள்; தனியார் பள்ளி சூறை

புதுச்சேரி – கடலூர் சாலையில் தவளக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வருகிறது அந்த தனியார் பள்ளி . புதுச்சேரி பா.ஜ.க-வின் விவாசாய அணித் தலைவர் ராமுவுக்கு சொந்தமான இந்தப் பள்ளியில், சுமார் 500-க்கும் மேற்பட்... மேலும் பார்க்க

Kerala: கேஷியரின் கழுத்தில் கத்தி வைத்து பெடரல் வங்கியில் கொள்ளை; கேரளாவை அதிர வைத்த தனி ஒருவன்

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள சாலக்குடி பேட்டை பகுதியில் பெடரல் வங்கி கிளை உள்ளது. அங்கு நேற்று மதியம் 2 மணிக்கு பைக்கில் வந்த ஹெல்மட் அணிந்த நபர் வங்கிக்குள் நுழைந்தார். முகத்தை முழுமையாக மூடியி... மேலும் பார்க்க