செய்திகள் :

"நானும் கவினும் உண்மையா காதலிச்சோம்; தவறா பேசாதீங்க" - நடந்ததை விவரிக்கும் கவின் காதலி

post image

திருநெல்வேலியில் பட்டியலினத்தைச் சேர்ந்த கவின் என்பவரை, காவல்துறை அதிகாரிகளான சரவணன் - கிருஷ்ணவேணி தம்பதியினரின் மகனும். கவினின் காதலியின் சகோதரருமான சுர்ஜித் ஜூலை 27-ம் தேதி கொடூரமாக ஆணவக்கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியிருக்கிறது.

இந்த விவகாரத்தில், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆணவக்கொலைக்கெதிராக தனிச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துவருகின்றன.

இந்தநிலையில், கவினின் காதலி தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

கவின் குமார்
கவின் குமார்

அந்த வீடியோவில், "எனக்கும் கவினுக்கும் என்ன இருந்தது என்று எங்கள் இருவருக்கு மட்டும்தான் தெரியும். எங்கள் ரிலேஷன்ஷிப் பற்றி யாரும் தவறாகப் பேச வேண்டாம்.

உண்மை தெரியாமல் யாரும் எதுவும் பேச வேண்டாம். எங்கள் அப்பா அம்மாவுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று நினைப்பது தவறு. அவர்களை விட்டு விடுங்கள். இந்த சூழ்நிலையில் எல்லோரும் அவரவருக்கு என்ன தெரியுமோ அதை பேசிவிட்டீர்கள்.

நானும் கவினும் உண்மையாக காதலித்தோம். நாங்கள் செட்டிலாக கொஞ்சம் டைம் தேவைப்பட்டது.

மே 30-ம் தேதி சுர்ஜித்தும் கவினும் பேசிக் கொண்டார்கள். அப்போது சுர்ஜித் அப்பாவிடம் கூறிவிட்டான். அப்பா என்னிடம் கேட்டபோது நான் காதலிக்கவில்லை என்று சொல்லிவிட்டேன்.

ஏனெனில் கவின் என்னிடம், இன்னும் ஒரு ஆறு மாதம் கழித்து சொல் என்று டைம் கேட்டிருந்தான்.

அதனால அப்பா கிட்ட நான் சொல்லல. அதுக்குள்ள இப்போ இப்படி ஆயிடுச்சு.

ரெண்டு பேருக்குள்ள என்ன உரையாடல் நடந்தது என்று தெளிவாகத் தெரியாது.

கவினின் காதலி
கவினின் காதலி

சுர்ஜித் கவினுக்கு போன் பண்ணி, `பொண்ணு கேக்க வாங்க, அப்பதான் என்னோட ப்ரொவெஷன் நான் பார்க்க முடியும்' என்று சொன்னான். அது எனக்கு கண்டிப்பா தெரியும்.

27-ம் தேதி கவின் வருகிறான் என்று எனக்கு தெரியாது. 28-ம் தேதி ஈவினிங் தான் அவங்கள நான் வர சொல்லி இருந்தேன். மதியம் (27-ம் தேதி) வந்தப்போ தான் எனக்கு தெரியும் வந்திருக்காங்கன்னு.

நேரா அவங்கள நான் கூட்டிட்டு போயிட்டேன். அன்னைக்கு கவின் அம்மா, மாமா கிட்டதான் நான் பேசினேன்.

அப்படியே கவின் வெளியே போயிட்டான். அவங்களோட அம்மாவும் மாமா கிளம்புறப்பதான் கவின் எங்கே என்று நாங்கள் யோசித்தோம். அவங்க அம்மா கால் பண்ணி கிடைக்கல, நானும் கால் பண்ணி எடுக்கல.

அவங்க அம்மா பசிக்குதுன்னு சொன்னாங்க அதனால சாப்பிட சொல்லி இருந்தேன். அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சு.

இதில் யாரும் தேவையில்லாமல் வதந்திகளை கிளப்ப வேண்டாம். உங்களுக்கு தோணறது எல்லாத்தையும் நீங்க பேசாதீங்க. எங்க அப்பா அம்மாக்கு எதுவும் தெரியாது. நீங்க இதை விட்ருங்க" என்று கூறியிருக்கிறார்.

கர்நாடகா: அரசு சம்பளம் ரூ.15,000... ஆனால் 24 வீடுகள், ரூ.30 கோடி சொத்து! - சிக்கிய முன்னாள் ஊழியர்!

கர்நாடகாவின் லஞ்ச ஒழிப்பு மற்றும் அரசு கண்காணிப்பு அமைப்பான லோக்தாயுக்தா அதிகாரிகள், கர்நாடகா கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் (KRIDL) முன்னாள் எழுத்தர் வீட்டை சோதனை செய்தபோது கணக்கில்... மேலும் பார்க்க

Anil Ambani: ரூ.3000 கோடி வங்கிக் கடன் வாங்கி மோசடி; அனில் அம்பானியை விசாரிக்கும் ED; பின்னணி என்ன?

யெஸ் வங்கியில் ரூ.3000 கோடி கடன் வாங்கி அதனைத் திரும்பக் கொடுக்காமல் மோசடி செய்ததாக தொழிலதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குரூப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.2017-19ம் ஆண்டுகளில் அனில் அம்பானியின் ... மேலும் பார்க்க

சென்னை: இளம் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை; பைக் டாக்ஸி ஓட்டுநர் கைது; என்ன நடந்தது?

சென்னை, வேப்பேரியைச் சேர்ந்த இளம் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டில் பைக் டாக்ஸி ஓட்டுநர் சம்பத் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 20 நாட்களுக்கு முன்பு, பாதிக்கப்பட்ட பெண் ஊபர் மூலம் பைக்... மேலும் பார்க்க

8 ஆம் வகுப்பு மாணவியைத் திருமணம் செய்த 40 வயது பள்ளி ஆசிரியர்- தெலங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்!

40 வயதுடைய பள்ளி ஆசிரியர் ஒருவர், 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியைத் திருமணம் செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் குழந்தைத் திருமணம் தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில், தெ... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: தொழிலாளி படுகொலை; புரோட்டாவிற்கு சால்ணா கேட்டதால் தகராறா? -போலீஸ் தீவிர விசாரணை!

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் சேது நகர் பகுதியை சேர்ந்தவர் களஞ்சியம் (49). மீனவரான இவர் அவ்வப்போது பல்வேறு கூலி வேலைகளும் செய்து வருபவர். கடந்த சில நாள்களுக்கு முன் இங்குள்ள ஹோட்டல் ஒன்றில் சப்ளையராக வ... மேலும் பார்க்க

ஆணவப் படுகொலை: கவின் உடலைப் பெற்றுக்கொண்ட உறவினர்கள் - அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி

தூத்துக்குடியைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் கவின் குமாரும், திருநெல்வேலியைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் சரவணன் - கிருஷ்ணவேணி தம்பதியினரின் மகளும் காதலித்து வந்த நிலையில், அவரின் சகோதரர் சுர்ஜித் ஜூலை 27-ம்... மேலும் பார்க்க