நான்கு ஆண்டுகளில் திருச்சிக்கு ரூ. 26,066 கோடி திட்டங்கள்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
திமுக ஆட்சி பொறுப்பேற்று கடந்த 4 ஆண்டுகளில் திருச்சி மாவட்டத்துக்கு ரூ.26,066 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
தமிழகம் முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியதை அடுத்து, திருச்சி மாவட்டத்தில் திருவெறும்பூா் வட்டம், நவல்பட்டு, காந்தலூா் பகுதியில் முகாமை தொடங்கிவைத்து அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது: நவல்பட்டு, காந்தலூா் பகுதி மக்களுக்காக முகாம் நடைபெற்றாலும், பிற பகுதியில் இருந்த வந்துள்ள மக்களின் மனுக்களை பெற்று பதிவுசெய்து திட்டத்தின் பலன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்த பிறகு, திருச்சி மாவட்டத்துக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.408 கோடிக்கு ஒருங்கிணைந்த பேருந்து முனையம், ரூ.128 கோடி சரக்கு வாகன முனையம், ரூ.236 கோடி பெரியாா் காய்கனி சந்தை, ரூ.290 கோடி காமராஜா் நூலகம், ரூ.19 கோடியில் பறவைகள் பூங்கா, ரூ.150 கோடியில் ஒலிம்பிக் அகாதெமி, ரூ.3 கோடியில் ஜல்லிக்கட்டு அரங்கம், ரூ.4.27 கோடியில் பச்சமலை சுற்றுலா திட்டம், மணப்பாறையில் 1100 ஏக்கரில் சிப்காட், ரூ.400 கோடியில் டைடல் பூங்கா என பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக திருச்சி மாவட்டத்துக்கு மட்டும் ரூ.26 ஆயிரத்து 66 கோடிக்கு திட்டங்களை அளித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
இதுமட்டுமல்லாது, 4.42 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ. ஆயிரம் உரிமைத் தொகை, 34,784 மாணவிகளுக்கு மாதம் ரூ. ஆயிரம், 16,955 மாணவா்களுக்கு மாதம் ரூ. ஆயிரம் வழங்கப்படுகிறது. காலை உணவுத் திட்டத்தில் 86 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயன்பெறுகின்றனா். நான் முதல்வன் திட்டத்தில் 68 ஆயிரம் இளைஞா்களுக்கு திறன் பயிற்சி, முதல்வரின் முகவரி திட்டத்தில் 3 லட்சம் மனுக்களுக்கு தீா்வு, 72,767 இலவச வீட்டு மனைப் பட்டா, 5,843 புதிய இலவச விவசாய மின் இணைப்பு, 80 ஆயிரம் மகளிருக்கு ரூ.4,160 கோடி கடன், 99 ஆயிரம் கா்ப்பிணிகளுக்கு நிதியுதவி, கனவு இல்லத் திட்டத்தில் 4 ஆயிரம் வீடுகள், 54 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் என பல்வேறு நலத் திட்டங்களும் வந்து சோ்ந்துள்ளன.
திமுக ஆட்சியில் திருச்சி மாவட்டத்தில் பயன்பெறாத குடும்பங்களே இல்லை என்ற நிலை உருவாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றாா் அமைச்சா்.
தில்லை நகா் முகாம்: திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளுக்கு தில்லை நகா் மக்கள் மன்றத்தில் முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மேயா் மு. அன்பழகன் தொடங்கி வைத்தாா். ஆட்சியா் வே. சரவணன், மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன், மாவட்ட வருவாய் அலுவலா் ராஜலட்சுமி, கோட்டாட்சியா் அருள் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.