செய்திகள் :

`நான் கனடிய மக்களை ஏமாற்றவில்லை; ஒவ்வொரு நாளும்..!'- பிரிவு உபசார விழாவில் கண்கலங்கிய ஜஸ்டின் ட்ரூடோ

post image

இந்த ஆண்டு ஜனவரியில் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாக, கனடா பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக ஜஸ்டின் ட்ருடோ (Justin Trudeau) அறிவித்தார். அதைத் தொடர்ந்து புதிய பிரதமராகவும், லிபரல் கட்சியின் தலைவராகவும் இங்கிலாந்து & கனடா மத்திய வங்கியின் முன்னாள் தலைவர் மார்க் கார்னி (Mark Carney) இன்று தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் நேற்று லிபரல் கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் ஜஸ்டின் ட்ரூட்டோவுக்கு பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது.

ஜஸ்டின் ட்ரூட்டோ

அந்த விழாவில் உணர்ச்சிவசப்பட்டு உரையாற்றிய ஜஸ்டின் ட்ரூடோ, ``கனடா அமெரிக்காவிடமிருந்து ஒரு சவாலை எதிர்கொள்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக, சவால்கள், நெருக்கடிகள் எனத் தொடர்ந்து கனடியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் ஒவ்வொரு நெருக்கடியிலும், கனடியர்கள் தாங்கள் யார் என்பதைக் காட்டியுள்ளனர். நாம் ஒன்றிணைந்து, ஒருவருக்கொருவர் ஆதரவாக நின்றுள்ளோம். ஒவ்வொரு முறையும், நாம் இன்னும் வலுவாக வெளிப்பட்டுள்ளோம்.

இப்போது, நமது அண்டை நாட்டின் சவாலை, பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும்போதும், ​நாம் யார் என்பதை பெருமையுடன் அடையாளம் காட்டுகிறோம். நாம் நாடு எப்போதும் ஒரு பெண்ணின் தேர்ந்தெடுக்கும் உரிமையை பாதுகாத்து வரும் நாடு. முடிந்தவரை ராஜதந்திரமாக செயல்படுவோம். போராட்டம்தான் முடிவு என்றால் அதற்கும் தயாராகுவோம்.

ஜஸ்டின் ட்ரூடோ

இந்த அலுவலகத்தில் ஒவ்வொரு நாளும், நான் கனடியர்களை முதன்மையாகக் கருதினேன். எனக்கு மக்களின் ஆதரவு இருக்கிறது என்பதை அதன்மூலம் உறுதிசெய்துள்ளேன். இந்த அரசின் கடைசி நாள்களில்கூட, கனடியர்களை ஏமாற்றவில்லை. அவர்களுக்கான எதிர்காலத்தை வடிவமைப்பேன் என்பதை நிரூபித்திருக்கிறேன்" என்றார். இந்த உரை நிகழ்த்த அழைத்ததிலிருந்து உரை முடிக்கும் வரை பலமுறை உணர்ச்சிவசப்பட்டு அழுதார்.

``ஸ்டார்லிங்க் நம்பகத்தன்மையற்றது என நிரூபிக்கப்பட்டால்...'' - போலந்து அமைச்சர் ராடோஸ்லாவ் பதில்!

ரஷ்யா உக்ரைன் போரின் காரணமாக உக்ரைனில் தகவல் தொடர்பு முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. இதனால் உக்ரைன் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் என்ற தொலைத்தொடர்பை தான் பயன்படுத்தி வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவர... மேலும் பார்க்க

எஸ்.பி.வேலுமணி வீட்டு விசேஷம் : சந்தித்துக்கொள்ளாத செங்கோட்டையன் - எடப்பாடி!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மகன் விஜய் விகாஷ் – தீக்‌ஷனா தம்பதிக்கு கடந்த மார்ச் 3-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க நிர்வாகிகள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் க... மேலும் பார்க்க

`236 தொழிற்சாலைகள் அமைத்து இளைஞர்களுக்கு வேலை வழங்கியிருக்கிறோம்’ - புதுச்சேரி ஆளுநரின் பட்ஜெட் உரை

புதுச்சேரி 15-வது சட்டசபையின் 6-வது பட்ஜெட் கூட்டத்தொடர் கவர்னர் கைலாஷ்நாதன் உரையுடன் இன்று துவங்கியது. திருக்குறளுடன் துவங்கிய அவர், ஆளுநர் உரை முழுவதையும் தமிழில் வாசித்தார். அப்போது, ``அரசின் பல்வே... மேலும் பார்க்க

`தமிழைவிட சம்ஸ்கிருதம்தான் பழைமையானது; தோல்வி பயத்தில் திமுக...' - மக்களவையில் பாஜக எம்.பி பேச்சு

தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை எதிர்ப்பதன் மூலம் தி.மு.க நாட்டைப் பிளவுபடுத்த முயற்சிப்பதாக ஜார்கண்ட் பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டியிருக்கிறார். இன்று ம... மேலும் பார்க்க

அதிமுக : சட்டசபை கூட்டணி கணக்கை சொல்லும் மாநிலங்களவை `சீட்’ கணக்கு - தேமுதிக இனி?!

கடந்த 2019-ம் ஆண்டு ஜூலையில் தமிழ்நாட்டிலிருந்து 6 மாநிலங்களவை எம்.பி-க்கள் தேர்வாகினர். இதில் தி.மு.க-விலிருந்து வழக்கறிஞர் வில்சன், தொ.மு.ச பேரவைத் தலைவர் சண்முகம், எம்.எம் அப்துல்லா, தி.மு.க கூட்டண... மேலும் பார்க்க