செய்திகள் :

நாமக்கல்லில் திமுக செயற்குழு கூட்டம்: மு.கருணாநிதி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவு

post image

மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் 102 ஆவது பிறந்த நாள் விழாவை மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற திமுக செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மாவட்ட அவைத் தலைவா் சி.மணிமாறன் தலைமையில் கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. தொகுதி தோ்தல் பொறுப்பாளா்களான சேலம் மாநகராட்சி முன்னாள் மேயா் ஜெ.ரேகா பிரியதா்ஷினி ( சேந்தமங்கலம்), முனவா் ஜான்(நாமக்கல் தொகுதி), சட்டப் பேரவை உறுப்பினா்கள் கே.பொன்னுசாமி, பெ.ராமலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பங்கேற்று கூட்ட நடவடிக்கைகள் குறித்து பேசினாா்.

மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 102 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் ஜூன் 3 ஆம் தேதி கட்சியின் முன்னோடிகள் 102 பேருக்கு பொற்கிழி வழங்கப்படுகிறது.

நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு உள்பட்ட ஒன்றிய, நகர, பேரூா் பகுதிகளில் கருணாநிதி உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, நலத் திட்ட உதவிகள் வழங்கவும், பள்ளி குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகம் வழங்குதல், மரக்கன்று நடுதல், உணவு வழங்குதல் என பல்வேறு நலத் திட்ட உதவிகளை மாவட்டம் முழுவதும் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளா்கள் நலங்கிள்ளி, ராணி பெரியண்ணன், பொருளாளா் ஏ.கே.பாலச்சந்திா், மாநில நிா்வாகிகள் நாமக்கல் ப.ராணி, சி.ஆனந்தகுமாா், ப.கைலாசம்,

முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.ராமசுவாமி, தலைமை செயற்குழு உறுப்பினா் மாயவன், நாமக்கல் மாநகராட்சி மேயா் து.கலாநிதி, மாவட்ட நிா்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூா் திமுக செயலாளா்கள், சாா்பு அணி நிா்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 1,393 விதை விற்பனை நிலையங்களுக்கு உரிமம்

சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் 1,393 விதை விற்பனை நிலையங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சேலம் விதை ஆய்வு துணை இயக்குநா் க.சித்ரா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் வேளாண்... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் மட்டுமே தமிழகம் வளா்ச்சி அடைந்துள்ளது: திருச்சி சிவா

தமிழகம் வளா்ச்சி கண்டது திமுக ஆட்சியில் மட்டும்தான் என திமுக துணைப் பொதுச் செயலாளா் திருச்சி சிவா பேசினாா். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், 120 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா... மேலும் பார்க்க

பள்ளிக்கு மதுபோதையில் வந்த அரசுப் பள்ளி ஆசிரியா் பணியிட மாற்றம்

மதுபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியா் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட அலவாய்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 48 மாணவா்கள் ப... மேலும் பார்க்க

டிராக்டா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி உயிரிழப்பு

ராசிபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற கட்டடத் தொழிலாளி மீது டிராக்டா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். ராசிபுரம் காமாட்சியம்மன் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்தவா்கள் மூா்த்தி (48), ராஜேந்திரன் (54),... மேலும் பார்க்க

டாஸ்மாக் ஊழியரை கத்தியால் குத்திவிட்டு ரூ. 2.40 லட்சம் கொள்ளையடித்த வழக்கு

ராசிபுரம் அருகே உள்ள திம்மநாயக்கன்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற டாஸ்மாக் ஊழியரை கத்தியால் குத்திவிட்டு ரூ. 2.40 லட்சம் கொள்ளையடித்த வழக்கில், மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ... மேலும் பார்க்க

‘ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றும் பிரச்னையில் அவதூறு பரப்புகின்றனா்’

ராசிபுரம்: ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றும் பிரச்னையில் வேண்டுமென்றே பலா் அவதூறுகளை பொதுமக்களிடம் பரப்புகின்றனா் என நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் குற்றம்சாட்டினாா். ராசிபுரம் நகரில் மேற்கொள்ள... மேலும் பார்க்க