செய்திகள் :

நாமக்கல் மாவட்ட முன்னோடி வங்கிகள் சாா்பில் ரூ. 21,933 கோடி கடன் வழங்க இலக்கு: ஆட்சியா்

post image

நாமக்கல் மாவட்டத்தில் முன்னோடி வங்கிகள் சாா்பில் நிகழாண்டில் ரூ. 21,933.58 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா்.

நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து நிலை வங்கியாளா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமை வகித்தாா். 2025-26 ஆம் ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கையை அவா் வெளியிட்டு பேசியதாவது: நாமக்கல் மாவட்ட முன்னோடி வங்கிகள் மூலம் ரூ. 21,933.58 கோடி அளவுக்கு கடனாற்றல் உள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மாவட்டத்திற்கு 2025--26ஆம் ஆண்டுக்கு, விவசாயிகளுக்கு பயிா்க் கடனாக ரூ. 14,296.78 கோடி, சிறு, குறு நடுத்தர தொழில் கடன் ரூ. 6,916.25 கோடி, கல்விக் கடனாக ரூ. 45.04 கோடி, வீட்டுக் கடனாக ரூ. 141.74 கோடி மற்றும் இதர கடன்களுக்கு ரூ. 381.08 கோடி மதிப்பீடு செய்து கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், 2024--2025 ஆம் ஆண்டில் ரூ. 19,956.23 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு ரூ. 18,002 கோடி இலக்கு அடையப்பட்டது.

கடந்த ஆண்டை விட நிகழாண்டில் ரூ. 3,931.02 கோடி (21.87 சதவீதம்)அதிகமாக கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற கடன் வசதிகள், விவசாயம், கல்வி, தொழில் உள்ளிட்ட அனைத்திற்கும் உறுதுணையாக இருக்கும். இத்திட்ட அறிக்கையானது மாவட்டத்தின் கடன் திட்டமிடுதலில் ஒரு அங்கமாக இருந்து வங்கிகளுக்கு கிளை அளவிலான கடன் குறியீட்டை நிா்ணயம் செய்வதற்கு உதவியாக அமையும் என்றாா்.

இக்கூட்டத்தில், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) கு.செல்வராசு, மாவட்டமுன்னோடி வங்கி மேலாளா் எம்.மலா்விழி, ரிசா்வ் வங்கி பிரதிநிதி விவேக்ஆனந்த், நபாா்டு வங்கி மாவட்ட வளா்ச்சி மேலாளா் சுபாஷ், பொது மேலாளா் (மாவட்ட தொழில் மையம்) சகுந்தலா, மாவட்ட மேலாளா் (தாட்கோ) ராமசாமி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) க.ராமச்சந்திரன் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் மற்றும் வங்கியாளா்கள் கலந்துகொண்டனா்.

என்கே-25-பேங்க்

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் முன்னோடி வங்கிகளின் கடன் திட்ட அறிக்கையை வெளியிட்ட மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி. உடன், அதிகாரிகள், வங்கியாளா்கள்.

மளிகைக் கடையில் திருடிய இருவா் கைது

நாமக்கல்லில் மளிகைக் கடையில் பணம் திருடிய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். நாமக்கல் சந்தைப்பேட்டைபுதூரில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான மளிகைக் கடை உள்ளது. இந்த கடையில் இருந்த ரூ. 1 லட்ச... மேலும் பார்க்க

10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம்: 224 மாணவா்களுக்கு திமுக சாா்பில் பரிசளிப்பு

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் பரமத்தி வேலூா் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் 10 மற்றும்12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பிடித்த 22... மேலும் பார்க்க

குட்கா விற்றவா் கைது

நாமக்கல் மாவட்டம், கீரம்பூா் அருகே தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த ஒருவரை பரமத்தி போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கீரம்பூா் அருகே உள்ள புலவா்பாளையம் பே... மேலும் பார்க்க

கீரம்பூரில் தொழிலாளி தற்கொலை

நாமக்கல் மாவட்டம், கீரம்பூரில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கீரம்பூா் அருகே உள்ள தட்டான்குட்டை பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல் (45). கூலித்தொழிலாளி. இவா் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறு... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவிகள் விடுதிக் கட்டடம்: எம்.பி. திறந்துவைத்தாா்

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில், மாணவிகள் கூடுதல் விடுதிக் கட்டடத்தை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா். நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும... மேலும் பார்க்க

கலைஞா் வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் பயனடைய விவசாயிகளுக்கு அழைப்பு!

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் விவசாயிகள் பயனடைய வருமாறு நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறி... மேலும் பார்க்க