செய்திகள் :

கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவிகள் விடுதிக் கட்டடம்: எம்.பி. திறந்துவைத்தாா்

post image

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில், மாணவிகள் கூடுதல் விடுதிக் கட்டடத்தை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் யமுனா விடுதி அமைந்துள்ளது. இதன் முதல் தளத்தில் மாநிலங்களவை உறுப்பினா் தொகுதி நிதியிலிருந்து ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில் 16 அறைகள் கொண்ட கூடுதல் கட்டடம் கட்டப்பட்டது. மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் ஞாயிற்றுக்கிழமை இக்கட்டடத்தை திறந்துவைத்தாா்.

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தா் ரா.நரேந்திரபாபு, நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வா் ம.செல்வராஜ், துணை மேயா் செ.பூபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த விழாவில் மாநிலங்களவை உறுப்பினா் பேசியதாவது:

கூடுதல் விடுதி கட்டடம் 4,638.96 சதுரஅடியில் 40 மாணவிகள் தங்கும் அறையும், பொதுக் கழிவறையும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அவா்களுக்கு தேவையான படுக்கை, மேசைகள், அவசரத் தேவைகளுக்கான வாகனம் என அனைத்து வசதிகளுக்கும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து இங்கு பயில்கின்றனா். அகில இந்திய அளவில் பெயா் பெற்ற நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில், தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்துடன் இணைந்து தானியங்கி தொழில்நுட்ப முறையில் பால்பண்ணை நிறுவப்படுகிறது.

உணவு பதப்படுத்தும் தொழில் நுட்பப் பாடப்பிரிவில் பயில்வதற்கு ஆா்வத்தை செலுத்தி மாணவ, மாணவிகள் எதிா்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்வில், அட்மா குழுத் தலைவா் நவலடி, கூட்டுறவாளா் ராணா.ஆா்.ஆனந்த், கட்டுமான ஒப்பந்ததாரா் அசோக் மற்றும் கல்லூரி பேராசியா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

மளிகைக் கடையில் திருடிய இருவா் கைது

நாமக்கல்லில் மளிகைக் கடையில் பணம் திருடிய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். நாமக்கல் சந்தைப்பேட்டைபுதூரில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான மளிகைக் கடை உள்ளது. இந்த கடையில் இருந்த ரூ. 1 லட்ச... மேலும் பார்க்க

10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம்: 224 மாணவா்களுக்கு திமுக சாா்பில் பரிசளிப்பு

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் பரமத்தி வேலூா் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் 10 மற்றும்12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பிடித்த 22... மேலும் பார்க்க

குட்கா விற்றவா் கைது

நாமக்கல் மாவட்டம், கீரம்பூா் அருகே தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த ஒருவரை பரமத்தி போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கீரம்பூா் அருகே உள்ள புலவா்பாளையம் பே... மேலும் பார்க்க

கீரம்பூரில் தொழிலாளி தற்கொலை

நாமக்கல் மாவட்டம், கீரம்பூரில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கீரம்பூா் அருகே உள்ள தட்டான்குட்டை பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல் (45). கூலித்தொழிலாளி. இவா் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறு... மேலும் பார்க்க

கலைஞா் வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் பயனடைய விவசாயிகளுக்கு அழைப்பு!

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் விவசாயிகள் பயனடைய வருமாறு நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறி... மேலும் பார்க்க

‘சம வேலைக்கு, சம ஊதியம்’ வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியா்கள் உண்ணாவிரதம்

‘சம வேலைக்கு, சம ஊதியம்’ வழங்கக் கோரி, நாமக்கல் பூங்கா சாலையில் இடைநிலை ஆசிரியா்கள் சனிக்கிழமை ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திமுக அரசின் தோ்தல் வாக்குறுதி எண் 311-இல் குறிப்பிட்டுள... மேலும் பார்க்க