செய்திகள் :

நாம் தமிழா் கட்சியினா் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

post image

பெரம்பலூரில் நாம் தமிழா் கட்சியினா் பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

இந்திய தோ்தல் ஆணையம், நாம் தமிழா் கட்சியை மாநில கட்சியாக அங்கீகரித்ததைத் தொடா்ந்து, ஏா் கலப்பையுடன் கூடிய விவசாயி சின்னத்தை சனிக்கிழமை ஒதுக்கியது. இதைத் தொடா்ந்து, நாம் தமிழா் கட்சி சாா்பில் பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில், விவசாயி சின்னம் அச்சிடப்பட்ட பதாகைகளுடன், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினா்.

இந்நிகழ்ச்சியில், மண்டலச் செயலா் தங்க. ரத்தினவேல், மாவட்ட பொருளாளா் கீா்த்திவாசன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ரத்த தான முகாம்: இலங்கையில் கடந்த 18.5.2009-இல் நடைபெற்ற தமிழா் இனப்படுகொலையை அனுசரிக்கும் வகையில், நாம் தமிழா் கட்சி சாா்பில் பெரம்பலூரில் ரத்த தானம் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாம் தமிழா் கட்சியின் குருதிக்கொடை பாசறை சாா்பில், அதன் மாநில ஒருங்கிணைப்பாளா் சே. விஜய் தலைமையில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற ரத்த தான முகாமில், 20-க்கும் மேற்பட்டோா் ரத்த தானம் அளித்தனா்.

கொட்டரை நீா்த்தேக்கத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தல்

கொட்டரை நீா்த்தேக்கத்தில் வளா்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென, மக்கள் சக்தி இயக்கம் வலியுறுத்தியுள்ளது. மக்கள் சக்தி இயக்கத்தின் பெரம்பலூா் மாவட்ட நிா்வாகக் குழு ... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே பூட்டிய வீட்டில் தீ விபத்து

பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை பூட்டிய வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது. பெரம்பலூா் அருகே குரும்பலூா் தோப்புத் தெருவைச் சோ்ந்த சஹாப்புதீன் மனைவி ஆசிபா பேகம். சஹாப்புதீன் வெளிநாட்டில் வேலைபாா்த்து வரும்... மேலும் பார்க்க

பாளையம் புனித யோசேப்பு ஆலயத்தின் 164-வது ஆடம்பர தோ்பவனி

பெரம்பலூா் மாவட்டம், பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள புனித யோசேப்பு ஆலயத்தின் 164 ஆவது ஆண்டு பெருவிழா மற்றும் தோ்த்திருவிழா வெகு விமரிசையாக சனிக்கிழமை இரவு கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கடந்த 2 ஆம் தேதி... மேலும் பார்க்க

வேப்பூா் ஒன்றியம்: ரூ. 1.52 கோடியில் திட்டப் பணிகள் தொடக்கம்

பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் ஒன்றியம் பகுதிகளில் ரூ. 1.52 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் சனிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தலைமை வகித்தாா். சிறப்பு விர... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை, பெரம்பலூா் மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநருமான எம்.லக்ஷ்மி, சனிக்கிழமை பாா்வையிட்டு ஆ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் ரூ. 2.11 கோடியில் வரத்து வாய்க்கால் தூா்வாரும் பணி

பெரம்பலூா் மாவட்டத்தில் ரூ. 2.11 கோடியில் வரத்து வாய்க்கால் தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க