செய்திகள் :

நாளைமுதல் யுபிஐ செயல்படாது? யாருக்கெல்லாம்?

post image

சிறப்பு எழுத்துருக்கள் இருக்கும் யுபிஐ ஐடிகளின் பணப்பரிவர்த்தனைகள் நிராகரிக்கப்படுவதாகக் கூறிய இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் அறிவிப்பு நாளைமுதல் அமலுக்கு வருகிறது.

இணையவழியான பணப்பரிவர்த்தனையில் முன்னணியில் இருக்கும் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகத்திற்கு (UPI) இந்தியாவில் சில்லறை கொடுப்பனவுகள் மற்றும் தீர்வு முறைகளை இயக்கும் பொதுத்துறை நிறுவனமான இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) ஜனவரி 9 ஆம் தேதியில் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது.

அதன்படி, யுபிஐ ஐடிகளில் சிறப்பு எழுத்துருக்கள் (Special Characters) இருப்பின், அந்த ஐடிகளின் பணப்பரிவர்த்தனை பிப்ரவரி முதல் தேதியில் இருந்து நிராகரிக்கப்படும் என்று கூறியிருந்தது. யுபிஐ ஐடிகளில் இருக்கும் #, @, $, *, ! போன்ற சிறப்பு எழுத்துருக்களை மாற்றினால், பணப்பரிவர்த்தனையில் எந்தவித சிக்கலும் இருக்காது என்றும் கூறியது.

இதையும் படிக்க:குடியரசுத் தலைவர் குறித்த சோனியா காந்தியின் கருத்தால் பாஜக கொந்தளிப்பு!

ஆன்லைன் பணப்பரிவர்த்தனைக்கு பயன்படுத்தும் எந்த செயலியானாலும், அதிலுள்ள யுபிஐ ஐடிக்களில் 26 ஆங்கில எழுத்துக்கள் மற்றும் 0 முதல் 9 வரையிலான எண்கள் மட்டுமே இருக்கும்படி பார்த்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

கூடுதல் தகவல்களாக, கடந்தாண்டு டிசம்பரில் மட்டும் ரூ. 23.25 லட்சம் கோடி பரிவர்த்தனைகள் மாற்றப்பட்டுள்ளன. இந்தியாவின் டிஜிட்டல் கொடுப்பனவுகளில் யுபிஐ-யின் பங்கு 2019 ஆம் ஆண்டில் 34 சதவிகிதத்திலிருந்து 2024 ஆம் ஆண்டில் 83 சதவிகிதமாக உயர்ந்துள்ளது, கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒட்டுமொத்த சராசரி வளர்ச்சி விகிதம் 74 சதவிகிதமாக உள்ளது. பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு 2018-ல் 5.86 லட்சம் கோடியிலிருந்து 2024-ல் 246.83 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

நடப்பாண்டில் ஜிஎஸ்டி வருவாய் 11% அதிகரிக்கும்!

நடப்பாண்டில் ஜிஎஸ்டி வரி வருவாய் அதிகரிக்கலாம் என்று மத்திய அரசு கணித்துள்ளது.கடந்த பிப்ரவரி மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் 9.1 சதவிகிதம் அதிகரித்ததாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு இதே... மேலும் பார்க்க

உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கிய 50 பேர் மீட்பு: 4 பேர் பலி!

உத்தரகண்ட் பனிச் சரிவில் சிக்கிய 55 பேரில் 50 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 4 பேர் பலியானதாக இந்திய - திபெத் எல்லை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.பனிச் சரிவில் சிக்கிய 55 பேரில் 50 பேர் காய... மேலும் பார்க்க

வாட்ஸ்ஆப்பில் கைத்தவறி அழைப்பு செல்வதைத் தடுக்கும் வசதி

செல்போனில் அரட்டை அடிக்க, பேச என பல வசதிகள் ஏற்படுத்திக்கொண்டே செல்லும் செயலிகளில் முதலிடம் வாட்ஸ்ஆப்-க்குத்தான்.வாட்ஸ்ஆப்பில் பயனர்கள் சந்திக்கும் சிக்கல்கள், பிரச்னைகள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்... மேலும் பார்க்க

இந்தியா: மொபைல் போன் ஏற்றுமதி 40% அதிகரிக்க வாய்ப்பு

இந்தியாவில் மொபைல் போன்களின் ஏற்றுமதி அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.உலகளவில் அதிக மக்கள்தொகையில் முதலிடம் கொண்டுள்ள இந்தியாவில் மொபைல் போன்களின் தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அத... மேலும் பார்க்க

இலங்கை முன்னாள் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு

இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை தலைநகர் தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற என்எக்ஸ்டி மாநாட்டில் பிரதமர் மோடி சந்தித்தார்.இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது, "என்எக்ஸ... மேலும் பார்க்க

ஹிமாசலில் கனமழை, பனிப்பொழிவு: 538 சாலைகள் மூடல்!

ஹிமாசல் பிரதேசத்தில் மழை மற்றும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக 538 சாலைகள் மூடப்பட்டதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.ஹிமாசல் பிரதேசத்தில் மழை, பனிப்பொழிவு காரணமாக பல மாவட்டங்கள் பாதிக்கப்பட... மேலும் பார்க்க