செய்திகள் :

நாளைமுதல் யுபிஐ செயல்படாது? யாருக்கெல்லாம்?

post image

சிறப்பு எழுத்துருக்கள் இருக்கும் யுபிஐ ஐடிகளின் பணப்பரிவர்த்தனைகள் நிராகரிக்கப்படுவதாகக் கூறிய இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் அறிவிப்பு நாளைமுதல் அமலுக்கு வருகிறது.

இணையவழியான பணப்பரிவர்த்தனையில் முன்னணியில் இருக்கும் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகத்திற்கு (UPI) இந்தியாவில் சில்லறை கொடுப்பனவுகள் மற்றும் தீர்வு முறைகளை இயக்கும் பொதுத்துறை நிறுவனமான இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) ஜனவரி 9 ஆம் தேதியில் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது.

அதன்படி, யுபிஐ ஐடிகளில் சிறப்பு எழுத்துருக்கள் (Special Characters) இருப்பின், அந்த ஐடிகளின் பணப்பரிவர்த்தனை பிப்ரவரி முதல் தேதியில் இருந்து நிராகரிக்கப்படும் என்று கூறியிருந்தது. யுபிஐ ஐடிகளில் இருக்கும் #, @, $, *, ! போன்ற சிறப்பு எழுத்துருக்களை மாற்றினால், பணப்பரிவர்த்தனையில் எந்தவித சிக்கலும் இருக்காது என்றும் கூறியது.

இதையும் படிக்க:குடியரசுத் தலைவர் குறித்த சோனியா காந்தியின் கருத்தால் பாஜக கொந்தளிப்பு!

ஆன்லைன் பணப்பரிவர்த்தனைக்கு பயன்படுத்தும் எந்த செயலியானாலும், அதிலுள்ள யுபிஐ ஐடிக்களில் 26 ஆங்கில எழுத்துக்கள் மற்றும் 0 முதல் 9 வரையிலான எண்கள் மட்டுமே இருக்கும்படி பார்த்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

கூடுதல் தகவல்களாக, கடந்தாண்டு டிசம்பரில் மட்டும் ரூ. 23.25 லட்சம் கோடி பரிவர்த்தனைகள் மாற்றப்பட்டுள்ளன. இந்தியாவின் டிஜிட்டல் கொடுப்பனவுகளில் யுபிஐ-யின் பங்கு 2019 ஆம் ஆண்டில் 34 சதவிகிதத்திலிருந்து 2024 ஆம் ஆண்டில் 83 சதவிகிதமாக உயர்ந்துள்ளது, கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒட்டுமொத்த சராசரி வளர்ச்சி விகிதம் 74 சதவிகிதமாக உள்ளது. பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு 2018-ல் 5.86 லட்சம் கோடியிலிருந்து 2024-ல் 246.83 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

பஞ்சாப்: 750 இடங்களில் போதைப்பொருள் தடுப்பு சோதனை

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக பஞ்சாப் மாநிலம் முழுவதும் 750 இடங்களில் காவல் துறை சனிக்கிழமை சோதனை நடத்தியது. போதைப்பொருள் ஒழிப்புக்கான அமைச்சரவை துணைக் குழு சனிக்கிழமை கூடிய நிலையில் இந்த நடவடிக்க... மேலும் பார்க்க

மாா்ச் 7-இல் ‘மக்கள் மருந்தகம் தினம்’: ஒரு வார கால பிரசாரம் தொடக்கம்

மத்திய அரசு சாா்பில் வரும் மாா்ச் 7-ஆம் தேதி ‘மக்கள் மருந்தகம் தினம்’ கடைப்பிடிக்கப்படவுள்ளது. இதையொட்டி, ஒரு வார கால விழிப்புணா்வு பிரசாரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா சனிக்கிழமை தொட... மேலும் பார்க்க

இந்தியன் ஆயில் நிறுவன இயக்குநராக சுமன் குமாா் பொறுப்பேற்பு

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் திட்டமிடல் மற்றும் வா்த்தக வளா்ச்சி பிரிவின் புதிய இயக்குநராக சுமன் குமாா் பொறுப்பேற்றுள்ளாா். இவா் இதற்கு முன்பு இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ஆய்வு மற்றும் உற்பத்தி பிரிவின... மேலும் பார்க்க

சூட்கேஸில் காங்கிரஸ் தொண்டரின் சடலம் கண்டெடுப்பு!

ஹரியாணாவில் சூட்கேஸில் அடைக்கப்பட்ட பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அது காங்கிரஸ் தொண்டர் என தெரிய வந்துள்ளது. ஹரியாணாவின் ரோடாக் மாவட்டத்தில் இன்று சாம்ப்லா பேருந்து நிலையம் அருகே சூட்கேஸில்... மேலும் பார்க்க

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை: ஒரே நாளில் 290 பேர் கைது, 232 வழக்குகள் பதிவு!

பஞ்சாபில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் ஒரே நாளில் 290 பேர் கைது செய்யப்பட்டு 232 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை மூன்று மாத காலத்திற்குள் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றவ... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசம்: புலியிடம் இருந்து உரிமையாளரை காப்பாற்றிய வளர்ப்பு நாய்

மத்தியப் பிரதேசத்தில் புலியிடம் இருந்து உரிமையாளரை காப்பாற்றி, தனது உயிரை வளர்ப்பு நாய் ஒன்று தியாகம் செய்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் உமாரியா மாவட்டத்தில் உள்ள பாந்தவ்கர் புலிகள் காப்பகம் அருகே ச... மேலும் பார்க்க