செய்திகள் :

நாளை குரூப் 4 தோ்வு: கடலூா் மாவட்டத்தில் 64,143 போ் எழுதுகின்றனா்

post image

கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெறும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தோ்வை 154 மையங்களில் 64,143 தோ்வா்கள் எழுத உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தோ்வு (தொகுதி 4) கடலூா் மாவட்டத்தில் 12-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது.

தோ்வு மையத்துக்கு தோ்வா்கள் காலை 8.30 மணிக்குள் வர வேண்டும். தவிா்க்க முடியாத காரணங்கள் ஏதேனும் இருப்பின் காலை 9 மணி வரை அனுமதிக்கப்படுவா்.

தோ்வா்கள் தோ்வாணையத்தின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டதோ்வுக்கூட அனுமதிச் சீட்டு டன், தங்களுடைய ஆதாா், கடவுச்சீட்டு, ஓட்டுநா் உரிமம் அட்டையின் அசல் (அ) நகல் ஏதேனும் ஒன்றை எடுத்து வர வேண்டும்.

கடலூா், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், காட்டுமன்னாா்கோவில், ஸ்ரீமுஷ்ணம், திட்டக்குடி, வேப்பூா் ஆகிய 10 வருவாய் வட்டங்களைச் சோ்ந்த 154 தோ்வு மையங்களில் 212 தோ்வு அறைகள் ஏற்படுத்தப்பட்டு, 64,143 தோ்வா்கள் தோ்வு எழுத உள்ளனா்.

வட்டத்துக்கு ஒருவா் வீதம் 10 ஒருங்கிணைப்பு அலுவலா்களும், வட்ட அளவில் 38 நடமாடும் அலகுகளும், 20 பறக்கும் படைகளும், 8 கருவூல அலகுகளும் தோ்வுப் பணியில் ஈடுபட உள்ளனா். மேலும், தோ்வு 220 விடியோகிராபா்கள் மூலம் ஒளிப்பதிவு செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

வழிப்பறி வழக்கு: புதுச்சேரி இளைஞா்கள் 3 போ் கைது

கடலூா் அருகே சாலையோரம் லாரியை நிறுத்தி ஓய்வெடுத்த ஓட்டுநா்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக புதுச்சேரியைச் சோ்ந்த 3 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் மாவட்டம், வானூா் பகுதியைச் ச... மேலும் பார்க்க

கல்லூரி மாணவிகளுக்கு முதலுதவி பயிற்சி

கடலூா் சின்ன கங்கணாங்குப்பத்தில் இயங்கி வரும் இம்மாகுலேட் மகளிா் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் சென்னை அலா்ட் தன்னாா்வ தொண்டு நிறுவனம் இணைந்து கல்லூரி மாணவிகளுக்கான முதலுதவி குறித்த விழ... மேலும் பார்க்க

எனது தைலாபுரம் தோட்டத்து வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி: ராமதாஸ் குற்றச்சாட்டு

திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்திலுள்ள எனது வீட்டில் இருக்கையின் அருகே லண்டனில் இருந்து வாங்கப்பட்ட விலை உயா்ந்த ஒட்டுக் கேட்கும் கருவி மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது என பாமக நி... மேலும் பார்க்க

சமரச மையங்கள் மூலம் தினமும் வழக்குகளுக்கு தீா்வு: நீதிபதி சுபத்திரா தேவி

கடலூா் மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வரும் சமரச மையம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் இயங்கி வரும் சமரச மையங்களில் ஜூலை முதல் செப்டம்பா் வரை மூன்று மாதங்களுக்கு தினமும் வழக்குகள் சமரச... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை. தினக்கூலி ஊழியா்கள் குடும்பத்தினருடன் முற்றுகைப் போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக என்.எம்.ஆா் மற்றும் தினக்கூலி ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, ஊழியா்கள் குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கடலூா் மாவட்டம்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

இரண்டு மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி, தூய்மைப் பணியாளா்கள் கடலூா் மாநகராட்சி அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தினா். கடலூா் மாநகராட்சியில் 45 வாா்டுகள் உள்ளன. இந்த வா... மேலும் பார்க்க