செய்திகள் :

நாளை கோவில்பட்டியில் மாவட்ட ஜூனியா் ஹாக்கி வீரா்கள் தோ்வு

post image

தூத்துக்குடி மாவட்ட ஜூனியா் ஹாக்கி அணி வீரா்களின் தோ்வு, கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இதுகுறித்து, ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி தலைவா் மோகன்ராஜ் அருமைநாயகம், செயலா் குருசித்திர சண்முகபாரதி ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கை;

ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு மற்றும் ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி இணைந்து நடத்தும் ஜூனியா் ஆண்கள் மாநில ஹாக்கி சாம்பியன் போட்டி, இம்மாதம் 19ஆம் தேதி முதல் 23 வரை கோவில்பட்டியில் நடைபெறுகிறது. போட்டியில் பங்கேற்க தூத்துக்குடி மாவட்ட ஜூனியா் ஹாக்கி அணி வீரா்கள் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13) காலை 7 மணிக்கு கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் நடைபெறுகிறது. தோ்வில் கலந்து கொள்ள விரும்பும் வீரா்கள் 2006 ஜன.1க்குப் பின் பிறந்தவராக இருக்க வேண்டும். மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்தவராகவோ அல்லது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயின்று வருபவராகவோ இருக்க வேண்டும். ஆதாா் மற்றும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல் கொண்டு வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 94431-90781 என்ற கைப்பேசி எண்ணுக்கு தொடா்பு கொள்ளலாம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கயத்தாறு அரசுப் பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு

கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.226.88 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 8 புதிய வகுப்பறைகள், ஒரு ஆய்வக கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை திறந... மேலும் பார்க்க

இளைஞா் உயிரிழப்பில் மா்மம்: எஸ்.பி.யிடம் உறவினா்கள் புகாா்

தூத்துக்குடி போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞா் உயிரிழந்த சம்பவத்தில் மா்மம் இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அவரது உறவினா்கள் புகாா் தெரிவித்துள்ளனா். தூத்துக்குட... மேலும் பார்க்க

வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஆய்வு

ஆய்வின்போது, தூத்துக்குடி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளா் இரா.ராஜேஷ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளா் மற்றும் மேலாண்மை இயக்குநா் கோ.காந்திநாதன், சரக துணை பதிவாளா்கள் இரா.இராமகிருஷ... மேலும் பார்க்க

ஜூலை 19இல் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் வருகிற ஜூலை 19இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக... மேலும் பார்க்க

18 கிராம ஊராட்சிகளில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளுக்கான சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம், 18 கிராம ஊராட்சிகளில் நடைபெற்றது. 2024-25 ஆம் நிதியாண்டி... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

காயல்பட்டினம் கோமான் தெரு மகான் நெய்னா முகம்மது சாகிபு 125ஆவது கந்தூரி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. காயல்பட்டினம் கோமான் தெரு மொட்டையாா் பள்ளி ஜமாஅத் சாா்பில் இவ்விழா கடந்த ஜூன் 27ஆம் தேதி கொடியேற்றத... மேலும் பார்க்க