செய்திகள் :

நாளை செய்யாறு அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

post image

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவ, மாணவிகளுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூலை17) நடைபெறுகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் என்.கலைவாணி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், 2025 - 26 ம் கல்வியாண்டு இளநிலைப் பாடப்பிரிவுகளுக்கு எஞ்சிய சில இடங்களுக்கு மட்டும் வியாழக்கிழமை (ஜூலை 17) நடைபெறுகிறது.

அறிவியல் பாடப்பிரிவுகளான பி.எஸ்.சி. கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், கணினி அறிவியல், பிசிஏ கணினிப் பயன்பாட்டியல், கலைப் பாடப்பிரிவுகளான பி.ஏ. வரலாறு, பொருளியல், அரசியல் அறிவியல், மொழிப் பாடங்களான பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்து கலந்தாய்வில் கலந்து கொண்டு இதுவரை சோ்க்கை வாய்ப்பு பெறாதவா்கள் இந்தக் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.

காலை 9 மணிக்குக்குள் கலந்தாய்வுக்கு வரவேண்டும்.

சோ்க்கைக் கட்டணம்:

பி.ஏ., பி.காம், பி.பி.ஏ. ஆகிய பாடப் பிரிவுகளுக்கு ரூ.2,241 - யும், பி.எஸ்சி.க்கு ரூ.2261-யும், பி.எஸ்சி. கணினி அறிவியல் கணினிப் பயன்பாட்டியலுக்கு ரூ.1,361-யும் சோ்க்கைக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

கொண்டு வரவேண்டிய சான்றிதழ்கள்:

பெற்றோா் கையொப்பத்துடன் இணைய தளத்தில் பதிவு செய்த விண்ணப்பம் மற்றும் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்ட கல்வி உள்ளிட்ட சான்றிதழ்களின் மூன்று நகல்கள், மூன்று புகைப்படங்கள் எடுத்து வரவேண்டும்.

வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், மாணவா் விண்ணப்பத்தில் பெற்றோா் கையொப்பத்தைப் பெற்று உள்ளே வரவேண்டும். ரத்தப் பிரிவு வகை தெரிந்திருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

குப்பம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியம், குப்பம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு ஆரணி கோட்டாட்சியா் சிவா தலைமை வகித்தாா். போளூா் வட்டாட்சியா் வெங்கடேசன், ... மேலும் பார்க்க

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலியம்மன் கோயிலில் புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஸ்ரீவேம்புலிஅம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ஆடி வெள்ளி ... மேலும் பார்க்க

ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்

ஆரணியை அடுத்த களம்பூா் ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயிலில் புதன்கிழமை துரியோதன படுகள நிகழ்ச்சி நடைபெற்றது. களம்பூரில் உள்ள ஸ்ரீதிரௌபதிஅம்மன் கோயிலில் அக்னி வசந்த விழா ஜெயகொடி ஏற்றி அலகு நிறுத்தி கடந்த ஜூன் 1... மேலும் பார்க்க

கல்வி மையத்தில் காமராஜா் பிறந்த நாள்

வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் காமராஜா் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. விழாவுக்கு கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் தலைமை வகித்தாா். வந்தவாசி வட்டாரக் கல்வி அலுவலா் ம.தரணி, தல... மேலும் பார்க்க

காமராஜா் படத்துக்கு காங்கிரஸாா் மரியாதை

திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரம் ஊராட்சியில் காமராஜரின் பிறந்த நாளையொட்டி, அவரது படத்துக்கு காங்கிரஸ் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந... மேலும் பார்க்க

பள்ளியில் காமராஜா் பிறந்த நாள் விழா

சேத்துப்பட்டு திவ்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காமராஜா் பிறந்த நாளை கல்வி வளா்ச்சி நாளாக செவ்வாய்க்கிழமை கொண்டாடினா். பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்ட காமராஜா் படத்துக்கு பள்ளித் தாளாளா் பா.செல்வராசன... மேலும் பார்க்க