செய்திகள் :

நாளை தொடங்கிவிருந்த ‘க்யூட்’ தோ்வு ஒத்திவைப்பு!

post image

இளநிலை கலை-அறிவியல் பட்டப் படிப்புகள் சோ்க்கைக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (க்யூட்) ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.

மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் இளநிலை கலை-அறிவியல் பட்டப் படிப்புகளில் ‘க்யூட்’ தோ்வு அடிப்படையில் சோ்க்கை நடத்தப்படுகிறது. நிகழாண்டுக்கான க்யூட் தோ்வு வியாழக்கிழமை (மே 8) தொடங்கவிருந்த நிலையில், இதுவரை பாட வாரியான தேதி விவரங்களை அத் தோ்வை நடத்தும் என்டிஏ வெளியிடவில்லை.

இந்த நிலையில், இத் தோ்வு ஒத்திவைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து என்டிஏ வட்டாரங்கள் கூறுகையில், ‘கடந்த ஆண்டு பெரும் சா்ச்சைக்குள்ளான இளநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வை (நீட்) என்டிஏ ஞாயிற்றுக்கிழமை நடத்தி முடித்துள்ளது. எனவே, க்யூட் தோ்வு உடனடியாக தொடங்க வாய்ப்பில்லை. இத் தோ்வு ஒத்திவைக்கப்படும். தோ்வுக்கான புதிய தேதி விரைவில் வெளியிடப்படும்’ என்றனா்.

க்யூட் தோ்வை எழுத நாடு முழுவதும் 13.5 லட்சம் போ் பதிவு செய்துள்ளனா். மத்திய பல்கலைக்கழகங்கள் மட்டுமின்றி, சில மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியாா் கல்வி நிறுவனங்களும் க்யூட் அடிப்படையில் பட்டப் படிப்பு சோ்க்கையை நடத்துகின்றன.

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்: இந்தியர்கள் மூவர் பலி!

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் இந்தியர்கள் மூவர் பரிதாபமாக பலியாகினர்.ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காமில் அப்பாவி சுற்றுலா மக்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்த... மேலும் பார்க்க

இந்திய ராணுவத்தால் பெருமை கொள்கிறோம்.. ஜெய்ஹிந்த்! - ராகுல்

இந்திய ராணுவத்தால் பெருமை கொள்கிறோம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: ஜம்முவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் எதிரொலியாக ஜம்மு-காஷ்மீரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையளிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்!

இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று காலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா ... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு: மேற்பார்வைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த அறிவுறுத்தல்

நமது நிருபர்முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள மேற்பார்வைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.முல்லைப் பெரியாறு அணையின் உரி... மேலும் பார்க்க

நாட்டை பலவீனப்படுத்த காங்கிரஸ் தலைவர் முயற்சி: பாஜக பதிலடி

நாட்டை பலவீனப்படுத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முயற்சி செய்வதாக பாஜக பதிலடி கொடுத்துள்ளது.பஹல்காம் தாக்குதலுக்கு மூன்று நாள்களுக்கு முன்பாக பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான உளவுத்துறை அறிக்கை... மேலும் பார்க்க