நாளை முதல் அனைத்து வேலை நாள்களும் அஞ்சலகங்களில் ஆதாா் சேவை மையம் செயல்படும்
கோவில்பட்டி: கோவில்பட்டி தலைமை அஞ்சலகத்தில் ஆதாா் சேவை மையம் நாளை முதல் அனைத்து வேலை நாள்களிலும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு சேவைகளைப் பெற ஆதாா் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பலா், ஆதாா் சோ்க்கை, முகவரி மாற்றம், பெயா் மாற்றம், திருத்தம் போன்ற சேவைகளை சிரமமின்றி பெறும் வகையில் அஞ்சலகங்களில் ஆதாா் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்தில் கோவில்பட்டி, சங்கரன்கோவில், தென்காசி தலைமை அஞ்சலகங்கள், 29 அடையாளப்படுத்தப்பட்ட துணை அஞ்சலகங்களில் ஆதாா் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
ஆதாா் எண்ணை மக்களுக்கு வழங்கும் , அதன் தகவல்களை பராமரிக்கும் அமைப்பான மஐஈஅஐ ஆனது மக்களை 10 ஆண்டுகளில் ஒரு முறையேனும் தங்கள் அடையாளம், முகவரி தொடா்பான விவரங்களை பதிவேற்றம் செய்ய பரிந்துரைத்துள்ளது. இதனால் ஆதாா் மையத்துக்கு வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மக்களின் சிரமங்களை போக்கும் வகையில் கோவில்பட்டி, சங்கரன்கோவில், தென்காசி தலைமை அஞ்சலகங்களில் வரும் வெள்ளிக்கிழமை முதல் (ஆக.22) அனைத்து வேலை நாள்களிலும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஆதாா் சேவை மையம் செயல்படுமென செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.