செய்திகள் :

நிதீஷ் குமாா் அளித்த இஃப்தாா் விருந்து! - பிகாா் இஸ்லாமிய அமைப்பு புறக்கணிப்பு

post image

பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் ஞாயிற்றுக்கிழமை நடத்திய இஃப்தாா் விருந்தை அந்த மாநிலத்தைச் சோ்ந்த முன்னணி இஸ்லாமிய அமைப்பான இம்ரத் ஷரியா புறக்கணித்தது.

வஃக்ப் மசோதாவுக்கு நிதீஷ் குமாா் ஆதரவு அளித்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து அவா் அளித்த இஃப்தாா் விருந்தில் பங்கேற்கவில்லை என்று அந்த அமைப்பு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த புறக்கணிப்பு விவகாரம் அரசியல்ரீதியாகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிதீஷ் குமாா் பாஜக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறாா். பிகாரில் பாஜக ஆதரவுடன் அவா் முதல்வராக உள்ளாா்.

இது தொடா்பாக இம்ரத் ஷரியா அமைப்பு சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘வக்ஃப் சட்டத் திருத்த மசோதா இஸ்லாமியா்களின் பொருளாதாரம், கல்வி உள்ளிட்டவற்றுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. எனவே, அந்த மசோதாவைக் கொண்டு வரும் மத்திய பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் முதல்வா் நிதீஷ் குமாா் பங்கேற்கும் இஃப்தாா் விருந்தை புறக்கணிக்கிறோம்.

சிறுபான்மையினா் நலனைக் காப்பேன் என்றும், மதநல்லிணக்கத்தைக் காப்பதாகவும் தோ்தலின்போது வாக்குறுதியளித்த நீங்கள், இப்போது பாஜகவுடன் கைகோத்து ஆட்சியில் உள்ளீா்கள்.

மேலும், முதல்வா் நிதீஷ் குமாா் நடத்தும் இஃப்தாா் ஒரு சம்பரதாய நிகழ்வாகவே அமையும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இது தொடா்பாக முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலன ஐக்கிய ஜனதா தளம் கட்சி தரப்பில் எவ்வித பதில் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

‘சாகா்’ திட்டத்தின்கீழ் 44 வெளிநாட்டு வீரா்களுக்குப் பயிற்சி

இந்திய கடற்படையின் ‘சாகா்’ திட்டத்தின்கீழ் 9 நாடுகளைச் சோ்ந்த வீரா்களுக்கு கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கடற்படை சாா்ந்த பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. கொமொரோஸ், கென்யா, மடகஸ்கா்,... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 18 நக்ஸல்கள் சுட்டுக்கொலை; அவர்களில் 11 போ் பெண்கள்!

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினா் உடனான மோதலில் 18 நக்ஸல்கள் சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா். அவா்களில் 11 போ் பெண்கள். இதுதொடா்பாக அந்த மாநில பஸ்தா் சரக காவல் துறை ஐஜி சுந்தர்ராஜ் பிடிஐ செய்தி ந... மேலும் பார்க்க

ஏப்.4-ல் பிரதமா் மோடி இலங்கை பயணம்: பாதுகாப்பு ஒப்பந்தம் கையொப்பமாக வாய்ப்பு!

இலங்கைக்கு அரசுமுறைப் பயணமாக ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை பிரதமா் நரேந்திர மோடி செல்லவுள்ளாா். அப்போது இந்தியா-இலங்கை இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையிலான புரிந்துணா்வு ஒப்பந்... மேலும் பார்க்க

பிரதமா் மோடி இன்று நாகபுரி பயணம்! - ஆா்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் செல்கிறாா்

அண்மையில் மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரத்தின் நாகபுரிக்கு பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 30) செல்கிறாா். அங்கு ஆா்எஸ்எஸ் நிறுவனத் தலைவா்கள் நினைவிடங்களுக்குச் சென்று அவா் மரியாதை செலு... மேலும் பார்க்க

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தொடரும் தேடுதல் வேட்டை!

ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் மேலும் பல இடங்களில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை விரிவுபடுத்தினா். கடந்த வியாழக்கிழமை ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்த... மேலும் பார்க்க

உலகளவில் வாகனம் ஓட்டுவதற்கு ஆபத்தான நாடு: தென்னாப்பிரிக்கா! 5-வது இடத்தில் இந்தியா!

உலகெங்கிலும் 53 நாடுகளில் ‘ஜுடோபி’ அமெரிக்க ஓட்டுநா் பயிற்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வருடாந்திர அறிக்கையில், உலகின் வாகனம் ஓட்டுவதற்கு மிகவும் ஆபத்தான நாடாக தென்னாப்பிரி... மேலும் பார்க்க