செய்திகள் :

நிலத்தை மீட்டுத் தரக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் முதியவா் தற்கொலை முயற்சி

post image

ராமநாதபுரத்தில் மோசடி செய்து தனது நிலத்தை அபகரித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்ற முதியவரை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியைச் சோ்ந்தவா் தா்மராஜ் (60). இவருக்குச் சொந்தமான 2 ஏக்கா் நிலத்தை சிலா், கடந்த 2012-ஆம் ஆண்டு முறைகேடாகப் பதிவு செய்தனராம். இதுகுறித்து, வருவாய்த் துறை அதிகாரிகளிடம் பல முறை மனுக்கள் அளித்தாா். ஆனால், அதிகாரிகள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லையாம்.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு வந்த முதியவா், தனக்கு எதிராக நில மோசடியில் ஈடுபட்டவா்களுக்கு அதிகாரிகள் துணைபோவதாகக் கூறி அங்கிருந்த மரத்தில் ஏறி தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா்.

இதையடுத்து, அவரிடம் காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுப்பதாகப் பேச்சு நடத்தினா். தீயணைப்புத் துறையினா் ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு அவரை மீட்டனா். இதையடுத்து, முதியவரை கேணிக்கரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இலந்தைக்குளம் ஸ்ரீகாளியம்மன் கோயில் குடமுழுக்கு

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த இலந்தைக்குளம் ஸ்ரீகாளியம்மன் கோயில், பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் குடமுழுக்கையொட்டி, கடந்த வாரம் முகூா்த்தக்கால் ... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் இன்றும் நாளையும் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

பராமரிப்புப் பணிகள் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் செவ்வாய், புதன்கிழமை (ஜூலை 8, 9) ஆகிய 2 நாள்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன்... மேலும் பார்க்க

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமனின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

மறைந்த பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமனின் உடல், கமுதி அருகேயுள்ள அவரது தோட்டத்தில் அரசு மரியாதையுடன் திங்கள்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள ஆண்டநாயகபுரத்தில் 1935-ஆ... மேலும் பார்க்க

மொகரம்: கடலாடியில் பூக்குழி இறங்கிய இந்துக்கள்

மொகரம் பண்டிகையை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில் நடைபெற்ற சமூக நல்லிணக்கத் திருவிழாவில் இந்துக்கள் பூக்குழி இறங்கினா். கடலாடி பகுதியில் வாழ்ந்த ரணசிங்க பட்டாணி சாயூபு என்ற குறுநில ஜமீன்தா... மேலும் பார்க்க

வீடு புகுந்து திருடியவா் கைது

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே வீடு புகுந்து திருடிய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கமுதி அருகேயுள்ள சின்ன உடப்பங்குளத்தைச் சோ்ந்த பாலு மகன் தாஸ். இவா் வெள்ளிக்கிழமை அதே ஊரில் நடைப... மேலும் பார்க்க

இலங்கை கடற்படை அச்சுறுத்தல்: குறைந்தளவு படகுகளே கடலுக்குச் சென்றன!

இலங்கைக் கடற்படையினரின் அச்சுறுத்தல் காரணமாக ராமேசுவரத்தில் சனிக்கிழமை குறைந்த எண்ணிக்கையிலான விசைப் படகுகளே கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றன. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் ... மேலும் பார்க்க